Skip to content

மே மாதத்தில் நடத்த வேண்டிய, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தவும், 450 உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், இதுவரை,கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

உத்தரவுகள் : பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 450 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களும், காத்தாடுகின்றன.
தொடக்க கல்வித் துறையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

பாதிப்பு : ஆனால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வையோ, மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வையோ, இதுவரை நடத்தவில்லை. பட்டதாரி ஆசிரியர், பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்தவில்லை. நடப்பு கல்வி ஆண்டு, இறுதி கட்டத்தை எட்டும் நிலையில், இன்னும், பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தாததும், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததும், ஆசிரியர் மட்டுமில்லாமல் மாணவர்களுக்கும், பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பொதுத்தேர்வை எழுதும், மாணவ, மாணவியர் விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளது; இதர பல்வேறு பணிகள் உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாததால், பணிகள் தேங்கி கிடக்கின்றன. இதை மனதில் கொண்டு, தலைமை ஆசிரியர் பணியிடங்களை, விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பதவி உயர்வு : தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், ரைமண்ட் பேட்ரிக் கூறுகையில், இரட்டை பட்டங்களை பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டும், பதவி உயர்வு அளிக்கும் விவகாரம், கோர்ட்டில் உள்ளது. இரட்டை பட்டங்களை பெற்ற ஆசிரியர்களில், ஆங்கில ஆசிரியர் தான் உள்ளனர். எனவே, ஆங்கில பாட ஆசிரியரை தவிர்த்து, இதர பாட ஆசிரியர்களுக்காவது, பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, அதிகாரிகள் முன்வர வேண்டும், என்றார்.


கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகையில், ஆசிரியர் காலி பணியிடங்களால், மாணவர் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான், தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதவி உயர்வு கலந்தாய்வு, விரைவில் நடத்தப்படும் என, தெரிவித்தன.

மே மாதத்தில் நடத்த வேண்டிய, பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தவும், 450 உயர்நிலைப் பள்ளி, தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவும், இதுவரை,கல்வித் துறை நடவடிக்கை எடுக்கவில்லை.

உத்தரவுகள் : பள்ளி துவங்குவதற்கு முன், பல வகையான ஆசிரியர்களுக்கு, பொது மாறுதல் கலந்தாய்வு நடத்தி, உத்தரவுகள் வழங்கப்பட்டன. ஆனால், பள்ளி கல்வித் துறையில், தகுதி வாய்ந்த ஆசிரியர்களுக்கு, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 450 அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களும், காத்தாடுகின்றன.
தொடக்க கல்வித் துறையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு, பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது.

பாதிப்பு : ஆனால், பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு மாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வையோ, மாவட்டம் விட்டு, மாவட்டம் செல்வதற்கான கலந்தாய்வையோ, இதுவரை நடத்தவில்லை. பட்டதாரி ஆசிரியர், பதவி உயர்வு கலந்தாய்வும் நடத்தவில்லை. நடப்பு கல்வி ஆண்டு, இறுதி கட்டத்தை எட்டும் நிலையில், இன்னும், பதவி உயர்வு கலந்தாய்வை நடத்தாததும், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பாததும், ஆசிரியர் மட்டுமில்லாமல் மாணவர்களுக்கும், பாதிப்பை ஏற்படுத்தி உள்ளதாக, அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச்செயலர், சாமி சத்தியமூர்த்தி தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், பொதுத்தேர்வை எழுதும், மாணவ, மாணவியர் விவரங்களை, தேர்வுத் துறை இணையதளத்தில், பதிவேற்றம் செய்ய வேண்டி உள்ளது; இதர பல்வேறு பணிகள் உள்ளன. தலைமை ஆசிரியர் இல்லாததால், பணிகள் தேங்கி கிடக்கின்றன. இதை மனதில் கொண்டு, தலைமை ஆசிரியர் பணியிடங்களை, விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

பதவி உயர்வு : தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலர், ரைமண்ட் பேட்ரிக் கூறுகையில், இரட்டை பட்டங்களை பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டும், பதவி உயர்வு அளிக்கும் விவகாரம், கோர்ட்டில் உள்ளது. இரட்டை பட்டங்களை பெற்ற ஆசிரியர்களில், ஆங்கில ஆசிரியர் தான் உள்ளனர். எனவே, ஆங்கில பாட ஆசிரியரை தவிர்த்து, இதர பாட ஆசிரியர்களுக்காவது, பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, அதிகாரிகள் முன்வர வேண்டும், என்றார்.


கல்வித் துறை வட்டாரங்கள் கூறுகையில், ஆசிரியர் காலி பணியிடங்களால், மாணவர் பாதிக்கக்கூடாது என்பதற்காகத்தான், தற்காலிக ஆசிரியர் நியமிக்கப்பட்டு உள்ளனர். பதவி உயர்வு கலந்தாய்வு, விரைவில் நடத்தப்படும் என, தெரிவித்தன.

அரசு பள்ளிகளில் ஆலோசனை பெட்டி:

அரசு பள்ளிகளில் ஆலோசனை பெட்டி: மாணவர்களிடம் வரவேற்பு பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள ஆலோசனை பெட்டிக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது
              மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக தமிழகம் முழுவதும் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2013-14ம் கல்வி ஆண்டில் ஆலோசனை பெட்டி வைக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது. அதன்படி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள 113 அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் 89 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் ஆலோசனை பெட்டி வைக்கப்பட்டது.


           இது குறித்து சி.இ.ஓ., மகேஸ்வரி கூறியது: "பள்ளிகல்வித்துறையின் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலும், ஆலோசனை பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. வாரந்தோறும் வெள்ளிக்கிழமை, ஆலோசனை பெட்டிகளில் உள்ள கடிதங்களை பள்ளி தலைமை ஆசிரியர்கள் எடுத்து படித்து வருகின்றனர்.

                  இதில், மாணவர்களுக்கு எந்த பாடத்தில் ஆசிரியர்கள் கூடுதல் அக்கரை செலுத்த வேண்டும். பள்ளிக்கு வந்து செல்லும் வழியில் தங்களுக்கு உள்ள பிரச்னைகள் குறித்து எழுதிய அனைத்து கடிதங்களுக்கும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால், மாணவர்கள் மத்தியில் ஆலோசனை பெட்டிக்கு நல்ல வேற்பு ஏற்பட்டுள்ளது.
                   இதன் மூலம் மாவட்டத்தில் இந்தாண்டு மாணவர்களின் தேர்ச்சி அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், மாவட்டத்தில் பள்ளி மாணவிகளுக்கு குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் ஏதேனும் மாணவிகளுக்கு குழந்தை திருமண முயற்சி நடந்தால் அதை தடுக்க தேவையான ஆலோசனைகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
                     கல்வி வளர்ச்சி நாளில் மாவட்டத்தில் சிறந்த துவக்கப்பள்ளியாக பென்னாகரம் தாலுகா ஏர்பட்டி அரசு துவக்கபள்ளியும், சிறந்த அரசு நடுநிலைப் பள்ளியாக பாலக்கோடு தாலுகா நல்லாம்பட்டி நடுநிலைப்பள்ளியும், சிறந்த உயர்ந்த நிலைப்பள்ளியாக தர்மபுரி தாலுகா இலக்கியம்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியும், சிறந்த மேல்நிலைப்பள்ளியாக பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா மூக்காரெட்டிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை கலெக்டர் விவேகானந்தன் தலைமையிலான குழுவினர் தேர்ந்தெடுத்துள்ளனர்.
                       இதில் சிறந்த துவக்கப்பள்ளிக்கு 25 ஆயிரம் ரூபாய், நடுநிலைப்பள்ளிக்கு 50 ஆயிரம் ரூபாய், உயர்நிலைப்பள்ளிக்கு 75 ஆயிரம் ரூபாய், மேல்நிலைப்பள்ளிக்கு தர்மபுரியில் வரும் 16ம் தேதி நடக்கவுள்ள அறிவியல் கண்காட்சியில் பரிசு தொகை வழங்கப்படவுள்ளது. இத்தொகையை பள்ளி வளர்ச்சி பணிகளுக்கு தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்தி கொள்ளலாம்." இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளிகளில் ஆலோசனை பெட்டி:

அரசு பள்ளிகளில் ஆலோசனை பெட்டி: மாணவர்களிடம் வரவேற்பு பள்ளிகளில் வைக்கப்பட்டுள்ள ஆலோசனை பெட்டிக்கு மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு ஏற்பட்டுள்ளது

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி:

*மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை ~06.11.2013
உயர் தொடக்கநிலை~08.11.2013

*மாவட்ட அளவிலான கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை ~12.11.2013
உயர் தொடக்கநிலை~19.11.2013

*வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி~
தொடக்க நிலை ~16.11.2013

உயர் தொடக்கநிலை~23.11.2013

தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி:

*மாநில அளவிலான முதன்மைக் கருத்தாளர்களுக்கான பயிற்சி
தொடக்க நிலை ~06.11.2013
உயர் தொடக்கநிலை~08.11.2013