Skip to content
Showing posts with label GENERAL TIPS. Show all posts
Showing posts with label GENERAL TIPS. Show all posts

வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1-ந் தேதி வரை கால நீட்டிப்பு -மத்திய அரசு உத்தரவு.

 

1623892967148426

வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142-வது பிரிவில் கொண்டு வரப்பட்ட புதிய விதியின் படி ஊழியர்களின் பி.எப். கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் ஆதாரை ஜூன் 1-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையகம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக காலநீட்டிப்பு வேண்டும் என்று பலரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

கிரஹாம் ஷேமா என்னும் சிறுவன் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்.

கிரஹாம் ஷேமா என்னும் சிறுவன் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்.

கிரஹாம் ஷேமா என்னும் சிறுவன் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்.

உகாண்டா தலைநகரம் கம்பாலாவின் புறநகரில் கிரஹாம் ஷேமா என்னும் ஏழு வயது சிறுவன் வசித்து வருகிறான். இவர் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். இவரது வியக்கவைக்கும் விமான அறிவு மற்றும் விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்

தற்போது ஜூனியர் பைலட்டாக விமான பயிற்சி பெற்று வருகிறார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை விரும்பிப் படிக்கும் இந்த சிறுவன் இதுவரை மூன்று முறை விமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். விமானம் தொடர்பாக இவரிடம் எந்த கேள்விகள் கேட்கப்பட்டாலும் சற்றும் யோசிக்காமல் சட்டென்று பதில் சொல்லுகிறார். சிறுவனின் இந்த வியக்க வைக்கும் விமானத் திறமையால் உகாண்டா மக்களாலும், சமூக வலைதளங்களிலும், இவர் கேப்டன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறார். சிறுவனின் திறமையை கண்டு வியந்து உள்ள உகாண்டாவின் ஜெர்மனி தூதர் மற்றும் உகாண்டாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் சிறுவனை சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த சிறுவனுக்கு விமானத்தின் மீது அதிகமான ஆர்வம் ஏற்படுவதற்கு காரணம் ஒரு துயர நிகழ்வு தான் என கூறப்படுகிறது. மூன்று வயது இருந்த போது, அவனது பாட்டி வீட்டின் கூரையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்து தான் அவருக்கு விமானத்தின் மீது ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

மேலும் விமானங்கள், ராக்கெட்டுகள் இவைகளெல்லாம் எப்படி இயங்குகின்றன என தனது கேள்விக் கணைகளால் பெற்றோரைப் துளைத்துள்ளார். இந்த சிறுவனின் கேள்விகளுக்கு பெற்றோர்கள் தங்களுக்கு தெரிந்த வரை பதிலளித்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவனது தாயாரால் பதில் கூற இயலாத நிலையில், அதிலிருந்து விமானம் பற்றியும், ஹெலிகாப்டர் பற்றியும் அறிந்து கொள்வதற்கான ஆர்வம் ஏற்பட்ட நிலையில், இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடி அலைந்த சிறுவன் தான் தற்போது ஜூனியர் பைலட்டாக மாறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒரு பைலட் ஆகவும், விண்வெளி வீரராகவும் இருக்க விரும்புகிறேன். ஒரு நாள் நிச்சயமாக நான் செவ்வாய் கிரகத்துக்கு செல்வேன். எனக்கு எலான் மஸ்க் தான் முன் மாதிரி. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருடன் கை குலுக்க ஆசைப்படுகிறேன். அவருடன் சேர்ந்து விண்வெளி பற்றி அறிந்து கொள்ளவும் , விண்வெளியில் பயன் பயணிக்கவும் ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்-க்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சமீபத்தில் நாசா விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் சென்றது. மேலும், விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி வைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உங்களின் பெயர் விண்வெளிக்குச் செல்ல ஒரு வாய்ப்பு :பதிவு செய்யும் 50 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன:

உங்களின் பெயர் விண்வெளிக்குச் செல்ல ஒரு வாய்ப்பு :பதிவு செய்யும் 50 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன:

இந்திய விண்வெளித் துறையின் கீழ் இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் சார்பாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா முயற்சியோடு சதீஷ் தவான் செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.

விண்வெளி கதிர்வீச்சு, காந்த மண்டலம் ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் ஆய்வு செய்யும். இந்த செயற்கைக்கோளானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளில் நமது பெயர்களை எழுதி விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பிய செயற்கைக்கோளில் இதுபோலப் பெயர்களைப் பதிவு செய்து அனுப்பியது. அதில் லட்சக்கணக்கானோர் தங்களது பெயர்களைப் பதிவு செய்தனர்.

தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக அனுப்பப்படுகின்ற இந்த செயற்கைக்கோளில் உங்களது பெயர்களைப் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://www.spacekidzindia.in/sdsat-pass/ என்ற இணைப்புக்குச் சென்று பெயர்களைப் பதிவு செய்யலாம்.

பெயர்களைப் பதிவு செய்யக் கடைசித் தேதி ஜனவரி 3, 2021.

பெயர்களைப் பதிவு செய்யும் 50 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

தேங்காய் உரிக்கும்போது அதற்கு ஏன் குடுமி வைக்கிறார்கள் தெரியுமா?


பெண்ணாக இருந்தாலும், தேங்காயாக இருந்தாலும் குடுமி இருந்தாலே தனி அழகு தான். எந்த கடையிலாவது குடுமி நீக்கப்பட்ட தேங்காய் விற்பனையாகி பார்த்து இருக்கீங்களா? நிச்சயம் அப்படி மட்டும் விற்கவே மாட்டாங்க. குடுமிக்கு பின்னால் பெரிய வரலாறே இருக்குங்க. நம்முடைய தலையை மண் டை ஓடு பாதுகாப்பது போல, தேங்காய் உள்ளே இருக்கும் ஊண், தண்ணீரை பாதுகாப்பது குடுமி. தேங்காய் கெட் டுப்போகாமல் நீண்ட நாள் பாதுகாக்க வேண்டுமென்றால், குடுமி நீக்கப்படாமல் இருக்க வேண்டும்.

அதில் வெறும் நார் மட்டுமே இருப்பதில்லை. குடுமியை நீக்கிவிட்டுப்பார்த்தால், மூன்று கண் போன்ற துளைகள் இருக்கும். அதில் துளை உண்டானால் தேங்காய் சீக்கிரம் கெட் டுப்போகும். இதைத்தாண்டி இன்னொரு காரணமும் உண்டு. தேங்காய் தென்னை மரத்தின் உயரத்தில் இருந்து கீழே விழும் போது, சித றாமல் இருக்கவும், அதிர்வை தாங்கவும் நார் போன்ற அமைப்பு உதவுகிறது. அதுவும் தரையில் மோ தும் அடிப்பகுதியில் நார் அதிகமாகவும், கணு இணையும் இடத்தில் நார் குறைவாகவும் இருக்கும்.

தேங்காய் முளைப்பு விடும் இடத்தில் நார் மிகுந்து இருந்தும், அது மண்ணில் ஊன்றி வளரும் பகுதி நார் குறைந்து இருக்கும். எல்லாமே இயற்கை படைப்பின் விசித்திரம். இயற்கை படைப்பின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு அதிசயம் இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. கிராமப்புறத்தில் மட்டை உரிக்கும் போது, தவறுதலாக குடுமியுடன் சேர்த்து உரித்துவிட்டால், பெரியவர்கள் சண் டைக்கு வந்துவிடுவார்கள். தேங்காயை குடுமி இல்லாமல் பார்ப்பது, கெ ட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் ஒரு சில பதார்த்தங்கள் செய்யும் போது, முழு தேங்காயின் மீது குடுமி உரிக்கப்பட்டு, அதனுள் வெல்லம், நெய் கலந்து தீயில் வாட்டி எடுக்கப்படும். பூஜைக்கு வைக்கும் தேங்காய் மட்டும் குடுமி இல்லாமல் இருக்கக்கூடாது. இந்து மத வழக்கப்படி, தேங்காய் கண் தெரியும் படி கடவுளுக்கு படைக்கக்கூடாது என்பது நம்பிக்கை. ஒரு குடுமிக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருப்பத்தை அறிந்துகொண்ட கையோடு தேங்காய் உடைக்கப் போகிறேன், இன்று இரவு சட்னிக்காக! நமக்கு சோறு முக்கியம்ல.


இந்திய முழுவதிலும் BYJU’S Young Genius-ன் இளம் திறமையாளர்களுக்கான தேடல்:

 இந்திய முழுவதிலும் BYJU’S Young Genius-ன் இளம் திறமையாளர்களுக்கான தேடல்

ஜீனியஸ் என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்கள் நினைவுக்கு வரும் முதல் விஷயம் என்ன? அதிகம் அறிவுள்ள நபரா? வெறுமையான விஷயங்களில் இருந்து பல கருத்துக்கள் எடுத்து முக்கிய திருப்பங்கள் கொண்டு வருபவர்களா? அவர்களின் தீவிர ஆசைகள் மற்றும் அவர்களின் நோக்கத்திற்காக அயராது உழைப்பவர்களா?    

தாய கட்டையி்ல் விழும் எண்களின் மகிமை!

 


அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல் ஆகும்

தாயம் உருட்டும் போது 1 (தாயம்), 5, 6, 12 விழுந்தால் கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன் தெரியுமா!

தாயம் (1) சூரியனை குறிக்கும் சூரியனே பிரபஞ்சத்தின் ஆதாரம்!

5ம் எண் பஞ்ச பூதங்களை குறிக்கும் (நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி)

6ம் எண் மற்ற ஆறு கிரகங்களையும் (சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி) மற்றும்
ஆறு பருவங்களையும்
(இளவேனிற், முதுவேனிற், கார், குளிர், முன்பனி, பின்பனி )காலங்களை குறிக்கும்!

12 ம் எண் 12 இராசிகளையும் ( 12 மாதங்களையும்) குறிக்கும்

இந்த 1, 5, 6, 12 க்குறிய  மேற்கண்ட அம்சங்களை ஆராய்ந்தே எதிரி நாட்டுடன் படை எடுப்பர்

அதேபோல் 2ம் எண்
இரண்டு அயனங்களை ( உத்ராயனம், தட்சிணாயனம்)

3ம் எண் முக்குண வேளையை (சாத்வீகம், ராஜஸம், தாமஸம்) குறிக்கும்

4ம் எண் நான்கு யோகங்களை (அமிர்த, சித்த, மரண, பிரபலாரிஷ்ட) குறிக்கும்

எனவே இந்த எண்களில் 1, 5 ,6, 12 பகடையில் முக்கிய அம்சமாக கருதுவதால் அந்த எண்கள் விழுந்தால் மீண்டும் தாயகட்டையை உருட்டுகின்றனர்!