Skip to content

தமிழகத்தில் யாருக்கெல்லாம் ஊதியக்குழுவில் ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

தற்போது வெளியான ஊதிய குறை தீர்ப்பு குழுவின் அரசாணைகள் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. 2010ல்  வெளியிடப்பட்ட ராஜீவ் ரஞ்சன் தலைமையிலான ஒரு நபர் ஊதிய குழுவில் பல பிரிவினருக்கு ஊதியம் உயர்த்தி வழங்கப்பட்டது.பின்னர் அது தவறு என   மூன்று நபர் ஊதியக் குழுவில் ஊதிய பிடித்தம் செய்ய ஆணை வெளியிடப்பட்டது. அதனை எதிர்த்து பத்தாண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றம், மேல்முறையீடு கடைசியாக உச்சநீதிமன்றம் சென்றதன் பெயரில் ஓய்வுபெற்ற நீதியரசர் முருகேசன் தலைமையில் உயர்த்தி

வழங்கப்பட்ட ஊதியம் சரியா...? தவறா...?? என ஆராய்ந்து அறிக்கை வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது . அதனடிப்படையில் ஊதிய குறை தீர்ப்பு குழு அமைக்கப்பட்டு அதன் முடிவு தற்போது வெளியாகியுள்ளது . தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த அரசாணைகளில் பார்வை 12 &13 இதுகுறித்து குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த குறை தீர்ப்பு குழுவானது உயர்த்தி வழங்கப்பட்ட ஊதியம் ஒரு சிலருக்கு சரியென்றும் ஒரு சிலருக்கு மாற்றியும் ஓய்வுபெற்ற நீதியரசர் திரு முருகேசன் அவர்கள் தலைமையில் அமைந்த குழு  அறிக்கை முதலமைச்சரிடம் சமர்பித்து அதனடிப்படையில் 20 க்கு மேற்பட்ட அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளது.


(இது தமிழக அரசு ஏற்படுத்திய ஒரு நபர் ஊதியக்குழுவான சித்திக் அவர்கள் தலைமையில் அமைந்த கமிட்டி அல்ல...)

ஊதிய குறைதீர் குழு அறிக்கை அடிப்படையில் ஊதியம் மாற்றி 24 துறைகள் சார்ந்த அரசாணைகள் வெளியீடு- CLICK HERE

செய்தி பகிர்வு

மாநில தலைமை

2009& TET போராட்டக்குழு

ஆசிரியர் பணியிடங்கள் அதிகரிக்க கோரிக்கை: தலைமையாசிரியர் சங்கம் வலியுறுத்தல்;

 

அரசு பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கான புதிய ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்' என தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சங்க மாநில தலைவர் பீட்டர்ராஜா கூறியதாவது: அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 5.18 லட்சம் மாணவர்கள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடால் 405 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.அதிகரித்துள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

பள்ளிகள் திறக்கப்பட்டால் கிடைக்கும் குறைந்த நாட்களில் கற்பித்தல் பணிக்கு மட்டும் திட்டமிட வேண்டும். இதனால் பொது மாறுதல் கலந்தாய்வு, ஆசிரியர்களுக்கான உட்கட்டமைப்பு மேம்பாடுகளை கல்வித் துறை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

BHEL REQUIREMENT OF ENGINEERS / OFFICERS SALARY 25000+ TO 35000+ CLICK TO APPLY LAST DATE DEC 03 Selection will be through interview :

 

Bharat Electronics Limited

Government of India, Ministry of DefenceA Navratna Company
LAST DATE DEC 03
Bharat Electronics Limited, a Navratna Company and India's Premier Professional Electronics Company under Ministry of Defence, requires the following personnel on contract basis for its Machilipatnam Unit: 

1. REQUIREMENT OF ENGINEERS / OFFICERS 

Post code Name of the post No. of posts Upper age limit as on 01.10.2020*

Minimum post qualification experience as on 01.10.2020 Reser vation Remuner ation per month in Rs.

 P001 Trainee OL Officer (Translator) – I 1 25 Years 1 year UR-1 25000/-
P002 Project Engineer (Electronics) – I 4 UR – 28 years OBC-31 years SC-33 years 2 years UR-5 OBC-2 SC-1 35000/-
P003 Project Engineer (Mechanical) – I 2
P004 Project Engineer (Civil) – I 1
P005 Project Officer (HR) – I 1 * Age: For candidates belonging to PWD category having minimum
இந்த தகவலை  உங்களுடைய  whatsapp குழுவில் பகிரவும் மற்றவர்களுக்கு பயனுள்ளதாக அமையும்

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை முதலமைச்சர் நாளை துவக்கி வைக்கிறார்:

 

ளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு துவக்கி வைக்க இருக்கிறார்.

சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் துவக்கி வைக்க இருப்பதால், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் கலந்தாய்வில், தினமும் 3 கட்டங்களாக தலா 175 மாணவர்கள், கலந்து கொள்வார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக உணவு, வாகன வசதி, தங்கும் இடம் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

உணர்வுப்பூர்வமான தொடர்பு ஆன்லைன் வகுப்புகளில் இல்லை; பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் கருத்து: அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு முடிவு;

 

ஆன்லைன் கல்வி குறித்த கட்டுக்கதைகள்' என்ற தலைப்பில் பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் அண்மையில் ஆய்வு நடத்தியது. கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தராகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 26 மாவட்டங்களைச் சேர்ந்த 1,522 பள்ளிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்போது உணர்வுப்பூர்வமான தொடர்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் ஏற்படவில்லை என்று பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் கல்வி மூலமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் அனுபவம் குறித்து இந்த ஆய்வை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மேற்கொண்டது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டவை:

'இந்த ஆய்வில் பங்கேற்ற ஆசிரியர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் வகுப்புகளின்போது தங்களுடைய மாணவர்களுடன் உணர்வுப்பூர்வமாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதேபோல ஆன்லைன் வழியில் தாங்கள் கற்பிக்கும் பாடம், மாணவர்கள் மனத்தில் சரியாகப் பதிகிறதா என்பதை மதிப்பீடு செய்ய முடியவில்லை என்று 90 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகு மாணவர்கள் வீட்டுப் பாடங்களைச் சரியாகச் செய்யாததால் கற்றலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக 50 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுடைய குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் முழுமையான கல்வி பெறவில்லை என்று 70 சதவீதப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். திறன்பேசி இல்லாததால் 60 சதவீதக் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி சென்றடையவில்லை. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக 90 சதவீதப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கூடங்கள் வழக்கப்படி திறக்கப்பட்டால் தங்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமில்லை என்று 65 சதவீதப் பெற்றோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், கல்வியை ஆன்லைன் வழியாகக் கொண்டு சேர்ப்பதில் போதாமையும் குறைபாடுகளும் காணப்படுவதாக இந்த ஆய்வில் பங்கேற்ற பெருவாரியான ஆசிரியர்களும் பெற்றோரும் தெரிவித்துள்ளனர். உரிய சுகாதார, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைக்க பெரும்பாலான பெற்றோர் தயாராக இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இணைய வசதி இல்லாதது, ஆன்லைன் பாடக் குறிப்புகள் கிடைக்காதது ஆகியவை மட்டுமே சிக்கல் அல்ல.

பள்ளி வயதுக் குழந்தைகளுக்கு நேரடியாக அல்லாமல் ஆன்லைன் வழியாகக் கற்பிப்பது போதுமானதாக இல்லை. பள்ளிப் பருவத்தினருக்குச் சிறந்த முறையில் கற்பிக்க ஆசிரியரும் மாணவரும் நேருக்கு நேர் சந்திப்பது, கவனம், சிந்தனை, உணர்வு இவை அனைத்தும் முக்கியத்துவம் பெறுகிறது. படிப்படியாக, ஒவ்வொரு மாணவருக்கு ஏற்றாற்போல கல்வி கற்பிக்கப்பட வேண்டியது அவசியம். பேச்சு மொழி மட்டுமின்றி உடல்மொழிக்கும் இதில் முக்கியப் பங்குள்ளது. இவை அனைத்தும் அசல் வகுப்பறையில்தான் சாத்தியப்படும்'.

இவ்வாறு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

*🌟ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் online பயிற்சி - SPD Proceedings*

 

*🌟ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் online பயிற்சி - SPD Proceedings*

*🌟ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் online பயிற்சி - SPD - SS- List of teachers for online training on teacher development programme on ICT facilities- Level 1 - reg*

தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. கொரோனா இல்லாத முதல் மாவட்டமாக மாறிய மாவட்டம்.!

 

தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் இருந்தனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 1,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,59,916 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2,384 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 7,32,656 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 17 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,495 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று மேலும் 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,09,167 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர் மாவட்டம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,228 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.

மருத்துவ தர வரிசைப் பட்டியல்: சாதித்து காட்டிய அரசு பள்ளி மாணவர்கள்:

 

தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் தர வரிசைப் பட்டியலில் இடம்பிடித்த அரசு பள்ளி மாணவர்களில் பலரும் குடும்ப பின்னணி, வறிய நிலை வாழ்க்கைச் சூழல் போன்ற தடைகளைத் தகர்த்து முன்னேறியிருக்கிறார்கள்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இந்தாண்டு முதல் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் ஆணையைத் தமிழக அரசு அறிவித்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் MBBS மற்றும் BDS படிப்புகளுக்கான மாணவர்களின் தரவரிசை பட்டியலை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று (நவம்பர் 16) வெளியிட்டார்.

உங்கள் வீட்டில் உள்ள கெட்ட சக்தியை விரட்ட சாம்பிராணி தூபத்தோடு இதையும் சேர்த்து போடுங்க:

 

கெட்ட சக்தி, பில்லி, சூனியம், மருந்து வைப்பது எதுவாக இருந்தாலும், அதை நம் வீட்டிலிருந்து விரட்டி அடிக்க கூடிய சக்தி இந்த 4 பொருளுக்கு உண்டு. 48 நாள் சாம்பிராணி தூபத்தோடு சேர்த்து இதையும் போடுங்கள்.

உங்களுடைய பிரச்சினைக்கு உங்கள் வீட்டில் இருக்கும் கெட்ட சக்தி தான் காரணம் என்று நீங்கள் நம்புகிறீர்களா? யாராவது உங்களுக்கு, உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கும் மருந்து வைத்து விட்டார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு உள்ளதா? ஏவல் பில்லி சூனிய பாதிப்பை நம்புபவர்களுக்கு மட்டும் சொல்லப்பட்டுள்ள பதிவு இது.

நாட்டு மருந்து கடைக்கு சென்று, அந்த கடையில் தேவதாரு பொடி, பூலான் கிழங்கு பொடி, பெரும் கோரை கிழங்கு பொடி, கட்டி சாம்பிராணி இந்த பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள். வாங்கிய பொருட்களை உங்களுடைய வீட்டிற்கு எடுத்துக்கொண்டு வந்து, பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, விநாயகப் பெருமானின் முன்பு இந்த பொருட்களை எல்லாம் வைத்துவிட்டு மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் உங்களுடைய கஷ்டம் தீர வேண்டும் என்று.

சர்க்கரை நோயாளிகளுக்கான சிறந்த உணவில் ஒன்று என்னன்னு தெரியுமா? முளைகட்டிய தானியங்கள் மற்றும் கீரை தோக்லா..

 எண்ணெயை அதிக அளவில் பயன்படுத்தி செய்யாத ஆரோக்கிய உணவுகளில் ஒன்று தோக்லா. பொதுவாகவே ஆவியில் வேகவைத்துச் செய்யப்படும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை. சத்துகள் நிறைந்தவை. குஜராத் மாநிலத்தின் உணவான தோக்லாவின் சுவையும் நன்மையும் மற்ற மாநிலத்தவரையும் கவர்ந்திழுக்க, இப்போது பரவலாக அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக மாறி வருகிறது.

உங்களுக்கு பிடித்த உணவின் ஆரோக்கியத்தைப் பற்றி பேசுகையில், முதலில் ஆரோக்கியமான தோக்லா செய்முறையை பற்றி காண்போம், இது உங்கள் நீரிழிவு உணவில் எந்த பிரச்சனையும் இல்லாமல் எளிதாக சேர்க்கலாம். தோக்லா என்பது அனைவராலும் விரும்பப்படும் ஒரு மிகச்சிறந்த சிற்றுண்டியாகும், சுஜி தோக்லா முதல் அரிசி தோக்லா வரை, எதிலும் நாம் தோக்லாவை உருவாக்க முடியும். முளை கட்டிய தானியங்கள் மற்றும் கீரை தோக்லா : முளை கட்டிய பாசிப்பயறு, ஃபைபர் மற்றும் புரதத்தை அதிகம் கொண்டிருப்பதால் இவை இரண்டும் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பதைத் தடுக்கின்றன. மேலும் பல சிறப்புகளை இந்த தோக்லா கொண்டுள்ளதால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த சிற்றுண்டியாக இருக்கிறது. கீரை மற்றும் பச்சை காய்கறிகள் மிகவும் சத்தானவை மற்றும் அதில் கலோரிகளும் குறைவாக உள்ளன. கீரைகளில் எளிதில் ஜீரணிக்கக்கூடிய கார்ப்ஸ் மிகக் குறைவு, எனவே அவை இரத்த சர்க்கரை அளவை பாதிக்காது. கீரைகளில் வைட்டமின் C உட்பட பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளதால் அவை பல ஆற்றலின் மூலமாக உள்ளது. வைட்டமின் சி ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது.



தேவையான பொருட்கள்:1.5 கப் - கடலை மாவு
3 டேபிள் ஸ்பூன் - ரவை
1/2 டிஸ்பூன் - இஞ்சி விழுது
2 - பிச்சைமிளகாய்
1/4 டிஸ்பூன் - மஞ்சள் தூள்
சிறிதளவு - பெருங்காய தூள்
1/2 டிஸ்பூன் - உப்பு
1 டிஸ்பூன் - சர்க்கரை
1 டேபிள் ஸ்பூன் - எலுமிச்சை சாறு
1 டேபிள் ஸ்பூன் - எண்ணெய்
1/2 டிஸ்பூன் - பேக்கிங் சோடா
1.25 கப் - தண்ணீர் [மாவு பதத்திற்கு ஏற்ப சேர்த்து கொள்ளலாம்]

தாளிக்க தேவையானவை

2 டிஸ்பூன் - எண்ணெய்
1/2 டிஸ்பூன் - கடுகு
1/ டிஸ்பூன் - சீரகம்
1 டிஸ்பூன் - வெள்ளை எள்ளு
1 - பச்சை மிளகாய் இரண்டாக கீறியது
சிறிதளவு - பெருங்காய தூள்
1 கப் - துருவிய தேங்காய்
சிறிதளவு - கொத்தமல்லி இலை

செய்முறை:

முதலில் எடுத்து வைத்துள்ள கடலை மாவு ரவையை ஒன்றாக கலந்து கொள்ளவேண்டும். பிறகு அதனுடன் சிறிதளவு இஞ்சி விழுது பச்சைமிளகாய் துண்டு பொடியாக நறுக்கிய பெருங்காயத்தூள், மஞ்சள் தூள்,எலுமிச்சைசாறு, உப்பு, பேக்கிங் சோடா, சிறிதளவு எண்ணெய் மற்றும் தண்ணீருடன் சேர்த்து நன்கு பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும். எந்த மாவை நிமிடம் ஊற விடவும்

ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிது நெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை சம அளவில் ஊற்றி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.

நன்றாக வெந்ததும் அதை ஒரு தட்டில் மாற்றிக்கொள்ளவும். பின்பு அதை சதுர வடிவில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் பெருங்காயத்தூள் மற்றும் கீறிய பச்சை மிளகாய் சேர்த்து தாளிக்கவும்.தாளித்தவற்றை வெட்டி வைத்துள்ள டோக்லா துண்டுகள் மீது சேர்க்கவும். இறுதியாக துருவிய தேங்காயை அணைத்து துண்டுகளின் மீதும் சேர்த்து பரிமாறவும். சுவையான டோக்லா தயார்.


பாசிப்பருப்பு தோக்லா:-

தேவையானவை

தயிர் - கால் கப்,
கடலை மாவு - ஒரு டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு - ஒரு கப்,
நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு,
பச்சை மிளகாய் விழுது - 2 டீஸ்பூன்,
சீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
ஃப்ரூட் சால்ட் - 2 டீஸ்பூன்,
கேரட் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு

பாசிப்பருப்பு தோக்லா செய்முறை:-

முதலில் நறுக்கிய காய்கறிகளுடன் உப்பை சேர்த்து பாசிப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, கரகரப்பாக அரைக்கவும்.

பிறகு அரைத்த மாவுடன் கடலை மாவு, தயிர், பச்சை மிளகாய் விழுது, சீரகத்தூள், உப்பு, கேரட் துருவல், நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து இட்லிமாவு பதத்தில் கலந்துகொள்ள வேண்டும் .

பின்னர் இட்லி பாத்திரத்தில் தண்ணீர் வைத்து சூடானதும், கலந்து வைத்துள்ள மாவில், ஃப்ரூட் சால்ட் சேர்த்து, அதன் மேல் கால் கப் தண்ணீர் விட, உடனே அது பொங்கி வரும். அதன் பின் மாவை நன்கு கலக்கவேண்டும்.

இட்லித்தட்டில், ஒரு சொட்டு எண்ணெய் விட்டுத் தடவி, அதில் மாவை விட்டு வேகவைத்து இறக்கி பரிமாறுங்கள்