Skip to content
Showing posts with label HEALTH TIPS. Show all posts
Showing posts with label HEALTH TIPS. Show all posts

மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சள் பொடி:

 

இந்திய மசாலாக்களில் மிகச் சிறந்த மசாலா வாசனைப் பொருள் மஞ்சள். இது பல ஆண்டுகாலமாக மக்கள் பயன்படுத்தி வரும் கிருமி நாசினிகளில் ஒன்றாகும். சரும படை, தேமல், தொற்று மற்றும் எரிச்சல் ஆகியவற்றை குணப்படுத்த மஞ்சளை பயன்படுத்துவார்கள். சருமத்தில் ஏற்பட்ட கருமையை நீக்குவதற்கும் இதை பயன்படுத்துகின்றனர். அது மட்டுமில்லாமல் முகத்தில் வளரும் முடியை நீக்குவதற்கும் மஞ்சளை தினசரி பயன்படுத்தலாம்.

அடேங்கப்பா கருப்பு திராட்சை பழத்தில் இவ்வளவு சத்து இருக்கா? இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே..!

 
திராட்சைப் பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆனால் நாம் அதை சுவைக்காக மட்டுமே சாப்பிடுவோம். சுவை என்கிற விசயத்தைத் தாண்டி அதில் ஏராளமான சத்துக்களும் இருக்கின்றன. கருப்பு, சிவப்பு, பச்சை என மூன்றுநிற திராட்சைகளும் உடல் ஆரோக்கியத்தைக் கூட்டும்.

அதிலும் கருப்பு திராட்சைக்கு ஏராளமான நல்ல குணங்கள் உண்டு. நம் உடலுக்கு அது பல சத்துக்களையும் உருவாக்கும். ஒரு கையளவு கருப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் பல நன்மைகளும் கிடைக்கும். கருப்பு திராட்சையில் பாலிபீனால்கள் உள்ளது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி அல்சைமர் நோய் வராமல் தடுக்கிறது. அதேபோல் கருப்பு திராட்சை புற்றுநோய் வராமலும் எதிர்த்து போரிடும்.

அதேபோல் கருப்பு திராட்சையை தொடர்ந்து சாப்பிட்டால் பல்வேறு வயிற்றுப்_பிரச்னைகளும் தீரும். வயிறு உப்பிசம், அஜீரணக்கோளறும் நீங்கும். இதேபோல் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் கருப்பு திராட்சை முக்கியப்பங்கு வகிக்கிறது. யூரிக் அமில அளவைக் குறித்து, சிறுநீரகங்களில் கொடுக்கப்படும் அழுத்தத்தில் இருந்து விடுவித்து சிறுநீரகத்தை ஆரோக்கியம் ஆக்கும். கருப்பு திராட்சை சர்க்கரை வியாதியையும் கட்டுக்குள் வைத்திருக்கும்.

கொலஸ்டிராலை சமநிலையோடு வைத்திருக்கும். சீக்கிரம் முதுமை எட்டாமலும், சருமம் வறட்சியை அடையாமலும் பார்த்துக்கொள்ளும். அதேபோல் கருப்பு திராட்சையின் விதைகளை அரைத்து, அதனை தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் அலசினால் முடி உதிர்வு, பொடுகு பிரச்னை தீரும். கண்கள் ஆரோக்கியத்திலும் கருப்பு திராட்சை முக்கியப்பங்கு வகிக்கிறது. தினம் ஒரு கையளவு திராட்சை சாப்பிட்டால் போதும். கருப்பு திராட்சை ஜீஸ் தினமும் காலையில் குடித்துவர ஒற்றைத் தலைவலியும் போய்விடும். மலச்சிக்கலையும் தடுக்கும்.

கரும்பு திங்க கூலியா? எனக் கேட்பதைப்போல் நாமும் தினமும் ஒரு கையளவு இனி கருப்பு திராட்சையை சாப்பிடுவோம்.

எத்தனை மாதங்களுக்கு ஒருமுறை டூத் பிரஷை மாற்ற வேண்டும் தெரியுமா?

 
பொதுவாக ஒரு நாளைக்கு இருமுறை பல் துலக்குவது நல்லது. அதிலும் குறிப்பாக ஒரு நாளில் எத்தனை முறை பல் துலக்குவது என்பதைவிட, எப்படி முறையாக பல் துலக்குவது என்பது மிகவும் முக்கியமான ஓன்று.
முதலில் பல் துலக்குவதற்கு பிரஷ் தேர்வு செய்யும்போது, மிகக்கடினமாக இல்லாமல், சாப்டாக இருக்கும் பிரஸ்களை தேர்வு செய்வதே சிறந்தது.
மேலும் பல் துலக்கும்போது, நீளவாக்கில் தேய்க்காமல், மேலும், கீழுமாய் தேய்க்க வேண்டும். ஏனெனில் நீளவாக்கில் தேய்க்கும்போது, பற்களில் தேய்மானம் அதிகம் ஏற்பட்டு, விரைவில் பல் கூச்சம் வரும். பற்கள், ஈறுகள் மற்றும் நாக்கு என வாயின் அனைத்து பகுதிகளையும் கவனித்து சுத்தம் செய்வது முக்கியமானது.

குறிப்பாக 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். “புளூரைடு’ உள்ள பேஸ்ட் கொண்டு பல் துலக்குவது நல்லது.
பற்களில் கூச்சம் இருந்தால் அதற்கான பிரத்யேகமான பேஸ்ட் பயன்படுத்த வேண்டும். சரியான பராமரிப்பின் மூலம் பற்சொத்தை வருவதை குறைக்கலாம்.