Skip to content
Showing posts with label Rasi Palan. Show all posts
Showing posts with label Rasi Palan. Show all posts

2021ஆம் ஆண்டு 'குரு அதிசார பெயர்ச்சி"... அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்? யார்?

 

சூரிய குடும்பத்தில் சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற எல்லா கிரகங்களும் அதிசார வக்கிர நிலையால் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்வது உண்டு. அதை தான் அதிசார கிரகப்பெயர்ச்சி என்கிறோம்.

அந்த வகையில் இவ்வாண்டு குருபகவான், பங்குனி மாதம் 24ஆம் தேதி அதாவது ஏப்ரல் 6ஆம் தேதி அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசார பெயர்ச்சியாகிறார்.

சுப கிரகமாக விளங்கும் குருவானவர் கொடுப்பதில் கொடை வள்ளல் ஆவார். குரு இருக்கும் ராசியை விட குரு பார்க்கும் ராசிக்கு ஜாக்பாட் தான் என்பது ஜோதிட விதி.

அந்த வகையில் இவ்வாண்டு நடைபெற இருக்கும் அதிசார குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும்? எந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் உண்டாகும்? என்பதை தெரிந்து கொள்வோம்.

அதிசார பெயர்ச்சி ஆகும் குருபகவான் தன்னுடைய பார்வையின் மூலம் மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்கு யோக பலன்களை அள்ளிக் கொடுக்க போகிறார்.

பொதுவாக குருவின் பார்வை நம்முடைய ஜாதகத்தில் 5, 7, 9 ஆகிய நிலைகளில் இருக்கும் பொழுது நமக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாகும் என்பது ஜோதிட நியதி.

மிதுனம் :

மிதுன ராசிக்கு குரு 5ஆம் பார்வையாக இருப்பதால் நீண்ட நாள் தடைபட்ட சுபகாரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நிறைவேறும். தொழில், உத்தியோகம் சார்ந்த பிரச்சனைகள்; நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம் :

சிம்ம ராசியில் குரு ஏழாம் பார்வையாக இருப்பதால் ராஜயோகம் பெறுவீர்கள். இதுவரை தோல்விகளை சந்தித்து வந்த நீங்கள் இனி வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள். உங்களுக்கு இதுவரை தொல்லை கொடுத்து வந்த ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளும் சீராகி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த எதிரிகள் தொல்லை நீங்கி போட்டி, பொறாமைகள் போன்ற தொந்தரவுகள் இன்றி எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தைக் காண்பீர்கள்.

துலாம் :

குருவின் பார்வை துலாம் ராசியில் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும். உங்களை ஆட்டிப் படைத்த தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு நற்பாதையை நோக்கி பயணிக்க இருக்கிறீர்கள்.

தனுசு மற்றும் மீனம் :

தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு சுப பலன்கள் உண்டு.

அசுப பலன் பெறும் ராசிகள் :

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான், மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை கொடுக்க இருக்கிறார் என்பதால் இந்த ராசியில் இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பரிகாரம் :

அதிசார பெயர்ச்சி அடைந்த குருபகவான் 160 நாட்கள் வரை கும்ப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் குருபகவானை வழிபாடு செய்வது, குருபகவானுக்கு உரிய மந்திரங்களை உச்சரிப்பது, நவகிரக சன்னதியில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டைக்கடலை தானம் செய்வது போன்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் நல்ல பலன்களை காணலாம்.

குருப்பெயர்ச்சி பலன்கள்: 15-11-2020 முதல் 13-11-2021 வரை - குரு பார்க்கக் கோடி நன்மை :

 குருப்பெயர்ச்சி பலன்கள்: 15-11-2020 முதல் 13-11-2021 வரை - குரு பார்க்கக் கோடி நன்மை

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கிரகப்பெயர்ச்சிகளில், குருப்பெயர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். ‘நவக்கிரகங்களில் சுப கிரகம்’ என்று வர்ணிக்கப்படுபவர் குரு பக வான். அந்த குருவருள் இருந்தால் தான் நமக்குத் திருவருள் கிடைக்கும். அந்த குரு பகவான், சுபஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30-ந் தேதி (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை இரவு 9.36 மணிக்கு உத்ராடம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் மகர ராசிக்கு பெயர்ச்சியாகி செல்கிறார்.

மகர ராசி குரு பகவானுக்கு நீச்ச வீடாகும். இருப்பினும் அவரது பார்வை பலத்தால் மக்களுக்கு நற்பலன்களை வழங்குவார். ‘குருவின் பார்வை பட்ட இடமெல்லாம் தோஷம் நீங்கும்’ என்பதால்தான் ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். எல்லாவிதமான தோஷங்களையும் நீக்கும் சக்தி குருவின் பார்வைக்கு உண்டு.

‘தனகாரகன்’ என்றும், ‘புத்திரகாரகன்’ என்றும் குருவைச் சொல்வார்கள். ஒருவருக்கு புத்திர பாக்கியம் கிடைத்து திருப்தியான வாழ்க்கை வாழ வேண்டுமானாலும், செல்வச் செழிப்பு மிக்கவராக விளங்க வேண்டுமானாலும் குரு வின் அருள்தான் வேண்டும். அதுமட்டுமல்ல திருமணம் கைகூட வேண்டுமானாலும் குரு பகவான் பச்சைக்கொடி காட்ட வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் சாதகமான இடத்தில் குரு பகவான் அமர்ந்தால், அவர் செல்வாக்கு பெற்றவராகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவராகவும், வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பவராகவும் விளங்குவார்.

இப்பொழுது மகரத்தில் வந்திருக்கும் குரு பகவான் நீச்சம் பெறுகின்றார். அதே நேரத்தில் குருவும், சனியும் பரிவர்த்தனை யோகம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்கள்.

டிசம்பர் 26-ந் தேதி சனி பகவான் பெயர்ச்சியாகி மகரத்திற்குச் சென்ற பிறகு, நீச்சம் பெற்ற வியாழனோடு இணைவதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ உருவாகின்றது.

இந்தக் குருப்பெயர்ச்சிக் காலத்தில் 5.4.2021 முதல் 13.9.2021 வரை அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் அதிசாரமாக கும்ப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். மீண்டும் மகர ராசிக்கு மாறுதலாகி வந்து 13.11.2021 வரை சஞ்சரிக்கின்றார். இதற்கிடையில் 16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். எனவே அந்தந்த காலங்களுக்கு ஏற்பவும், உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்குமிடம் மற்றும் திசா, புத்தி அடிப்படையிலும் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

பொதுவாக இந்தப் பெயர்ச்சியில் குருவின் பார்வை பெறும் மூன்று ராசிகள்: ரிஷபம், கடகம், கன்னி

குரு பார்வை தன ஸ்தானத்தில் பதியும் ராசி: மேஷம்

குரு பார்வை லாப ஸ்தானத்தில் பதியும் ராசி: விருச்சிகம்

குரு பார்வை தொழில் ஸ்தானத்தில் பதியும் ராசி: தனுசு

மேற்கண்ட ராசிகள் அனைத்திற்கும் தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும், தொகை வரவும் திருப்தி தரும்.

குருப்பெயர்ச்சி நாளில் இல்லத்து பூஜையறையில் ‘வானவர்க்கு அரசனான வளம்தரும் குருவே’ என்ற குரு கவசப் பாடலைப் பாடுவதோடு, குரு பகவான் படத்திற்கு மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி, முல்லைப்பூ மாலை அணிவித்து இனிப்புப் பொருள் நைவேத்தியம் வைத்து வழிபடுவது நல்லது.

மகரத்திற்கு ஜென்ம குருவாகவும், மிதுனத்திற்கு அஷ்டமத்து குருவாகவும், துலாத்திற்கு அர்த்தாஷ்டம குருவாகவும், கும்பத்திற்கு விரய குருவாகவும், சிம்மத்திற்கு ரோக ஸ்தான குருவாகவும் இந்த குருப்பெயர்ச்சி அமைகிறது. எனவே மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுயஜாதக அடிப்படையில், பாக்கிய ஸ்தானத்திலுள்ள கிரகத்தின் பலமறிந்து அதற்குரிய ஆலயங் களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்றநாளில் பொருத்தமான வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

வழிபாட்டின் மூலம் வருமானப் பற்றாக்குறை அகலும். திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், பொதுவாழ்வில் புகழ், இழந்த பதவியைப் பெறுதல், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற அனைத்தையும் வரவழைத்துக்கொள்ள இயலும். குருவருள் இருந் தால் சாதாரணமானவர்கள் கூட சக்கரவர்த்தியாக மாறமுடியும். - சுபம்.