Skip to content
Showing posts with label GENERAL TIPS. Show all posts
Showing posts with label GENERAL TIPS. Show all posts

வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1-ந் தேதி வரை கால நீட்டிப்பு -மத்திய அரசு உத்தரவு.

 

1623892967148426

வருங்கால வைப்புநிதி கணக்கில் ஆதாரை இணைக்க செப்டம்பர் 1-ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது

சமூக பாதுகாப்பு குறியீடு 2020 சட்டத்தின் 142-வது பிரிவில் கொண்டு வரப்பட்ட புதிய விதியின் படி ஊழியர்களின் பி.எப். கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்போர் தங்களது கணக்கில் ஆதாரை ஜூன் 1-ந் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்று வருங்கால வைப்பு நிதி ஆணையகம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக காலநீட்டிப்பு வேண்டும் என்று பலரும் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.

கிரஹாம் ஷேமா என்னும் சிறுவன் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்.

கிரஹாம் ஷேமா என்னும் சிறுவன் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்.

கிரஹாம் ஷேமா என்னும் சிறுவன் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்.

உகாண்டா தலைநகரம் கம்பாலாவின் புறநகரில் கிரஹாம் ஷேமா என்னும் ஏழு வயது சிறுவன் வசித்து வருகிறான். இவர் உகாண்டா நாட்டில் ஜூனியர் பைலட்டாக விமானம் ஓட்டி அசத்தி வருகிறார். இவரது வியக்கவைக்கும் விமான அறிவு மற்றும் விமானம் ஓட்டும் திறமையால் உகாண்டா பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளார்

தற்போது ஜூனியர் பைலட்டாக விமான பயிற்சி பெற்று வருகிறார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை விரும்பிப் படிக்கும் இந்த சிறுவன் இதுவரை மூன்று முறை விமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். விமானம் தொடர்பாக இவரிடம் எந்த கேள்விகள் கேட்கப்பட்டாலும் சற்றும் யோசிக்காமல் சட்டென்று பதில் சொல்லுகிறார். சிறுவனின் இந்த வியக்க வைக்கும் விமானத் திறமையால் உகாண்டா மக்களாலும், சமூக வலைதளங்களிலும், இவர் கேப்டன் என்ற அடைமொழியோடு அழைக்கப்படுகிறார். சிறுவனின் திறமையை கண்டு வியந்து உள்ள உகாண்டாவின் ஜெர்மனி தூதர் மற்றும் உகாண்டாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் சிறுவனை சந்திப்பதற்காக அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்த சிறுவனுக்கு விமானத்தின் மீது அதிகமான ஆர்வம் ஏற்படுவதற்கு காரணம் ஒரு துயர நிகழ்வு தான் என கூறப்படுகிறது. மூன்று வயது இருந்த போது, அவனது பாட்டி வீட்டின் கூரையில் போலீஸ் ஹெலிகாப்டர் ஒன்று விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்து தான் அவருக்கு விமானத்தின் மீது ஆர்வம் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

மேலும் விமானங்கள், ராக்கெட்டுகள் இவைகளெல்லாம் எப்படி இயங்குகின்றன என தனது கேள்விக் கணைகளால் பெற்றோரைப் துளைத்துள்ளார். இந்த சிறுவனின் கேள்விகளுக்கு பெற்றோர்கள் தங்களுக்கு தெரிந்த வரை பதிலளித்துள்ளனர். ஒரு கட்டத்திற்கு மேல் அவனது தாயாரால் பதில் கூற இயலாத நிலையில், அதிலிருந்து விமானம் பற்றியும், ஹெலிகாப்டர் பற்றியும் அறிந்து கொள்வதற்கான ஆர்வம் ஏற்பட்ட நிலையில், இந்தக் கேள்விகளுக்கு பதில் தேடி அலைந்த சிறுவன் தான் தற்போது ஜூனியர் பைலட்டாக மாறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் ஒரு பைலட் ஆகவும், விண்வெளி வீரராகவும் இருக்க விரும்புகிறேன். ஒரு நாள் நிச்சயமாக நான் செவ்வாய் கிரகத்துக்கு செல்வேன். எனக்கு எலான் மஸ்க் தான் முன் மாதிரி. எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். அவருடன் கை குலுக்க ஆசைப்படுகிறேன். அவருடன் சேர்ந்து விண்வெளி பற்றி அறிந்து கொள்ளவும் , விண்வெளியில் பயன் பயணிக்கவும் ஆசைப்படுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க்-க்கு சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சமீபத்தில் நாசா விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு அழைத்துச் சென்றது. மேலும், விரைவில் செவ்வாய் கிரகத்திற்கு மனிதர்களை அனுப்பி வைக்க உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உங்களின் பெயர் விண்வெளிக்குச் செல்ல ஒரு வாய்ப்பு :பதிவு செய்யும் 50 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன:

உங்களின் பெயர் விண்வெளிக்குச் செல்ல ஒரு வாய்ப்பு :பதிவு செய்யும் 50 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன:

இந்திய விண்வெளித் துறையின் கீழ் இஸ்ரோ சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இயங்கி வருகிறது. அந்நிறுவனம் சார்பாக ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா முயற்சியோடு சதீஷ் தவான் செயற்கைக்கோள் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது.

விண்வெளி கதிர்வீச்சு, காந்த மண்டலம் ஆகியவற்றை இந்த செயற்கைக்கோள் ஆய்வு செய்யும். இந்த செயற்கைக்கோளானது ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோளில் நமது பெயர்களை எழுதி விண்வெளிக்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பிய செயற்கைக்கோளில் இதுபோலப் பெயர்களைப் பதிவு செய்து அனுப்பியது. அதில் லட்சக்கணக்கானோர் தங்களது பெயர்களைப் பதிவு செய்தனர்.

தற்போது இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சார்பாக அனுப்பப்படுகின்ற இந்த செயற்கைக்கோளில் உங்களது பெயர்களைப் பதிவு செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் https://www.spacekidzindia.in/sdsat-pass/ என்ற இணைப்புக்குச் சென்று பெயர்களைப் பதிவு செய்யலாம்.

பெயர்களைப் பதிவு செய்யக் கடைசித் தேதி ஜனவரி 3, 2021.

பெயர்களைப் பதிவு செய்யும் 50 நபர்களுக்குக் குலுக்கல் முறையில் சிறப்புப் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.

தேங்காய் உரிக்கும்போது அதற்கு ஏன் குடுமி வைக்கிறார்கள் தெரியுமா?


பெண்ணாக இருந்தாலும், தேங்காயாக இருந்தாலும் குடுமி இருந்தாலே தனி அழகு தான். எந்த கடையிலாவது குடுமி நீக்கப்பட்ட தேங்காய் விற்பனையாகி பார்த்து இருக்கீங்களா? நிச்சயம் அப்படி மட்டும் விற்கவே மாட்டாங்க. குடுமிக்கு பின்னால் பெரிய வரலாறே இருக்குங்க. நம்முடைய தலையை மண் டை ஓடு பாதுகாப்பது போல, தேங்காய் உள்ளே இருக்கும் ஊண், தண்ணீரை பாதுகாப்பது குடுமி. தேங்காய் கெட் டுப்போகாமல் நீண்ட நாள் பாதுகாக்க வேண்டுமென்றால், குடுமி நீக்கப்படாமல் இருக்க வேண்டும்.

அதில் வெறும் நார் மட்டுமே இருப்பதில்லை. குடுமியை நீக்கிவிட்டுப்பார்த்தால், மூன்று கண் போன்ற துளைகள் இருக்கும். அதில் துளை உண்டானால் தேங்காய் சீக்கிரம் கெட் டுப்போகும். இதைத்தாண்டி இன்னொரு காரணமும் உண்டு. தேங்காய் தென்னை மரத்தின் உயரத்தில் இருந்து கீழே விழும் போது, சித றாமல் இருக்கவும், அதிர்வை தாங்கவும் நார் போன்ற அமைப்பு உதவுகிறது. அதுவும் தரையில் மோ தும் அடிப்பகுதியில் நார் அதிகமாகவும், கணு இணையும் இடத்தில் நார் குறைவாகவும் இருக்கும்.

தேங்காய் முளைப்பு விடும் இடத்தில் நார் மிகுந்து இருந்தும், அது மண்ணில் ஊன்றி வளரும் பகுதி நார் குறைந்து இருக்கும். எல்லாமே இயற்கை படைப்பின் விசித்திரம். இயற்கை படைப்பின் ஒவ்வொரு செயலுக்கு பின்னாலும் ஒரு அதிசயம் இருப்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. கிராமப்புறத்தில் மட்டை உரிக்கும் போது, தவறுதலாக குடுமியுடன் சேர்த்து உரித்துவிட்டால், பெரியவர்கள் சண் டைக்கு வந்துவிடுவார்கள். தேங்காயை குடுமி இல்லாமல் பார்ப்பது, கெ ட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் ஒரு சில பதார்த்தங்கள் செய்யும் போது, முழு தேங்காயின் மீது குடுமி உரிக்கப்பட்டு, அதனுள் வெல்லம், நெய் கலந்து தீயில் வாட்டி எடுக்கப்படும். பூஜைக்கு வைக்கும் தேங்காய் மட்டும் குடுமி இல்லாமல் இருக்கக்கூடாது. இந்து மத வழக்கப்படி, தேங்காய் கண் தெரியும் படி கடவுளுக்கு படைக்கக்கூடாது என்பது நம்பிக்கை. ஒரு குடுமிக்கு பின்னால் இத்தனை விஷயங்கள் இருப்பத்தை அறிந்துகொண்ட கையோடு தேங்காய் உடைக்கப் போகிறேன், இன்று இரவு சட்னிக்காக! நமக்கு சோறு முக்கியம்ல.


இந்திய முழுவதிலும் BYJU’S Young Genius-ன் இளம் திறமையாளர்களுக்கான தேடல்:

 இந்திய முழுவதிலும் BYJU’S Young Genius-ன் இளம் திறமையாளர்களுக்கான தேடல்

ஜீனியஸ் என்ற வார்த்தையை கேட்டவுடன் உங்கள் நினைவுக்கு வரும் முதல் விஷயம் என்ன? அதிகம் அறிவுள்ள நபரா? வெறுமையான விஷயங்களில் இருந்து பல கருத்துக்கள் எடுத்து முக்கிய திருப்பங்கள் கொண்டு வருபவர்களா? அவர்களின் தீவிர ஆசைகள் மற்றும் அவர்களின் நோக்கத்திற்காக அயராது உழைப்பவர்களா?    

தாய கட்டையி்ல் விழும் எண்களின் மகிமை!

 


அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல் ஆகும்

தாயம் உருட்டும் போது 1 (தாயம்), 5, 6, 12 விழுந்தால் கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன் தெரியுமா!

தாயம் (1) சூரியனை குறிக்கும் சூரியனே பிரபஞ்சத்தின் ஆதாரம்!

5ம் எண் பஞ்ச பூதங்களை குறிக்கும் (நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி)

6ம் எண் மற்ற ஆறு கிரகங்களையும் (சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி) மற்றும்
ஆறு பருவங்களையும்
(இளவேனிற், முதுவேனிற், கார், குளிர், முன்பனி, பின்பனி )காலங்களை குறிக்கும்!

12 ம் எண் 12 இராசிகளையும் ( 12 மாதங்களையும்) குறிக்கும்

இந்த 1, 5, 6, 12 க்குறிய  மேற்கண்ட அம்சங்களை ஆராய்ந்தே எதிரி நாட்டுடன் படை எடுப்பர்

அதேபோல் 2ம் எண்
இரண்டு அயனங்களை ( உத்ராயனம், தட்சிணாயனம்)

3ம் எண் முக்குண வேளையை (சாத்வீகம், ராஜஸம், தாமஸம்) குறிக்கும்

4ம் எண் நான்கு யோகங்களை (அமிர்த, சித்த, மரண, பிரபலாரிஷ்ட) குறிக்கும்

எனவே இந்த எண்களில் 1, 5 ,6, 12 பகடையில் முக்கிய அம்சமாக கருதுவதால் அந்த எண்கள் விழுந்தால் மீண்டும் தாயகட்டையை உருட்டுகின்றனர்!

ஒவ்வொரு வீட்டிலும் 100 பறவைகள்; அந்த ஊரே ஒரு சரணாலயம்:


சிதம்பரம் அடுத்த சீர்காழிக்கு அருகே இருக்கிறது பெரம்பூர் கிராமம். இந்த கிராமமே ஒரு பறவைகள் சரணாலயமாகிவிட்டது. அந்த அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரங்களில் 100க்கும் மேற்பட்ட பறவைகள் வசிக்கின்றன.

இக்கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. அதனாலேயே அக்கிராமத்தினர் இதுவரையிலும் தீபாவளி பண்டிகையினை கொண்டாடுவதில்லை.

வவ்வால்களை தங்கள் கிராமத்தின் கடவுகளாகவே பாவித்து வருகிறார்கள் அம்மக்கள். பட்டாசு வெடித்தால் பறவைகள் பறந்துவிடும் என்பதால், பட்டாசு வெடிக்கக்கூடாது என்று அக்கிராமத்தினர் ஊர்க்கட்டுப்பாடு போட்டிருக்கிறார்கள். கிராமத்தினரும் பல வருடங்களாக அந்தகடுப்பாட்டினை மீறாமல் இருந்து வருகிறார்கள்.

தீபாவளி திருநாளில் மட்டுமல்லாது சுப, அசுப நிகழ்ச்சிகளுக்கும் கூட அவர்கள் வெடி வெடிப்பதில்லை.

வவ்வால்கள் மட்டும் இருந்த இந்த ஊரில் சில ஆண்டுகளாகவே வெளிநாட்டுப்பறவைகளும் வருவதால் அரசு அங்கே சரணாலயம் அமைக்க வேண்டும் எதிர்பார்க்கிறார்கள் பெரம்பூர் கிராமத்தினர்.

வங்கக் கடலில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி; சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை: வானிலை ஆய்வு மையம் தகவல்

 https://lh3.googleusercontent.com/-sSZlr1PqpgE/X6_DITYBirI/AAAAAAAA6J0/r7ZW1fnzGFUrCQh57UjvgaNS0RtmRY3BwCLcBGAsYHQ/s1600/601717.jpg

 வங்கக் கடலில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி தமிழகக் கடற்பகுதி நோக்கி நகர்வதன் காரணமாக, தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 மேலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட தகவல்:
 “குமரிக்கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை நிலவும் மேலடுக்குச் சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யும். 
 திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
 நாளை (15.11.2020) வங்கக்கடலில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி தமிழகக் கடற்பகுதி நோக்கி நகர்வதன் காரணமாக தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.
 கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
 நாளை மறுநாள் (16.11.2020) தமிழகம், புதுவையில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும். கடலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
 அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
 அடுத்த 48 மணி நேரத்தில் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். 
 மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை”.
 இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குரு பெயர்ச்சி 2020: பொன்னவன் குருபகவான் பயோடேட்டா:

 

நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். குரு பகவானுக்கு என்ன பிடிக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று குரு பயோடேட்டாவை பார்க்கலாம்.

பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை. அறிவிலே மேம்பட்டவர். தேவர்களின் குரு. இந்திரனுக்கு அமைச்சர். குரு பகவானை பிரகஸ்பதி என அழைப்பர். பிரகஸ்பதி என்றால் ஞானத் தலைவன் என்று பொருள். அமைச்சர், ஆசான், வியாழன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக் கிரகர். சாத்வீகம் கொண்டவர். மஞ்சள் நிறமானவர் என்பதால், இவரை பொன்னன் என்றும் அழைக்கப்படுகிறார். தயாள குணம் கொண்டவர்.

குரு பகவானின் 5, 7,9ஆம் பார்வை சகல நன்மைகளையும் தரும். திருமணத்திற்கு குரு பலம் வருவது முக்கியம். தன்னை வழிபடுகிறவர்களுக்கு உயர்வான பதவியையும், மனமகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம், சுகம் ஆகியவற்றையும் கொடுப்பவர். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவருக்குப் பெரும் பதவிகள் கிட்டும். குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்கின்றனர்.

யானையை வாகனமாக கொண்ட குருபகவானுக்கு, கொண்டைக் கடலை பிடித்த உணவு. நவரத்தினங்களில் புஷ்பராகத்தை அணிவார். அரச மரம் இவருக்கு பிடித்தமான மரம். இனிப்பு பிடிக்கும். நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளி இருப்பவர். ரதத்தின் ஓரத்தில் வில்லும், மீனும் அடையாளமாக இருக்கும். அது தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் அதிபதி இவர் என்பதை குறிப்பிடுகிறது.

குரு பகவான் நீதிமானாகவும் திகழ்கிறார். ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம். குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். அதன்படி ராசி சக்கரத்தை கடக்க பன்னிரெண்டு ஆண்டுகளாகின்றன. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் 'மகா மகம்' நடக்கிறது.

குரு பகவான் பயோடேட்டா

சொந்த வீடு: தனுசு - மீனம்

உச்ச வீடு : கடகம்

நீச்ச வீடு : மகரம்

கிழமை : வியாழன்

தேதி : 3, 12, 21, 30

நட்சத்திரம் : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி

நிறம் : தூய மஞ்சள்

ரத்தினம் : கனக புஷ்பராகம்

உலோகம் : தங்கம்

தானியம் : கொண்டைக்கடலை

ஆடை : மஞ்சள்

தசாபுத்தி காலம்: 16 ஆண்டு

அதிதேவதை : தட்சிணாமூர்த்தி

குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும். குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம். குருவிற்கு ஏற்ற நாள் வியாழக் கிழமையாகும். அந்த நாளில் விரதம் இருந்து குருபகவானை வணங்கி சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் தானமாக வழங்கலாம்.

source: oneindia.com

உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா...❗நீங்கள் ? | உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்? | உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா? | வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை❗*


 வாழ்வில் நாம் ஆரோக்கியமாக இருக்க கடைபிடிக்க வேண்டியவை❗*

*1. 4 மணி நேரத்திற்கு ஒருமுறை கட்டாயம் சிறுநீர் கழியுங்கள். கோடை காலத்திலும் கட்டாயம் நான்கு மணி நேரத்திற்கு ஒருமுறை கழித்தாக வேண்டும்.*

*2. காலையிலும், இரவு உணவுக்கு முன்பும் கட்டாயம். மலம் கழிக்க வேண்டும். கண்ட நேரத்தில் கழிப்பது மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும்.*

*காலை, மாலை இருவேளை குளிக்கவும். மழைக்காலங்களில் காலையில் குளித்தால் போதும்.*

அதிசய பறவை அதுவும் நம்ம ஊர் பறவை-ஆஸ்திரேலியா அல்ல வாங்க பார்க்கலாம் :

"அரிய வகை ஆஸ்திரேலியப் பறவை நம்மூரில் அகப்பட்டது" என்னும் அடைமொழியிட்டு  அவ்வப்போது செய்திகளில் வரும்.
பாவம் அவர்களுக்குத் தெரியாது இது நம்மூர் பறவை என்று.
சங்க இலக்கியத்தில் கூகை என்று அழகு தமிழில்
அழைத்துள்ளனர் நம் முன்னோர்கள்.
திருக்குறளில் கூட கூகைப் பற்றி வரும்.
"பகல்வெல்லுங் கூகையை காக்கை இகல்வெல்லும் வேந்தர்க்கு வேண்டும் பொழுது".(குறள் 481)
இதில் கூகையென வள்ளுவர் சுட்டுவது கூகை எனும் வெண் ஆந்தையே ஆகும்.

6 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும்; எங்கெங்கே வாய்ப்பு?

ஆறு மாவட்டங்களில், இன்று(ஏப்., 17) வெப்ப சலன மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

'கோவை, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

'மற்ற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், வறண்ட வானிலை நிலவும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில், காலை நேரத்தில், வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்; மாலையில் தெளிவாக காணப்படும்.அதிகபட்ச வெப்பநிலை, 35; குறைந்தபட்சம், 26 டிகிரி செல்ஷியஸ் பதிவாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

உலர்பழங்கள் உடலுக்கு உகந்தவைதானா?

உலர்பழங்கள் உடலுக்கு உகந்தவைதானா?

பழங்கள் சத்து நிறைந்தவை என்பது நமக்குத் தெரியும். அதேபோல் உலர் பழங்களிலும் ஏராளமான சத்துகள் நிறைந்திருக்கின்றன.

ஸ்நாக்ஸ் நேரங்களில் இவற்றைச் சாப்பிடுவதால் எனர்ஜி கிடைக்கும். அந்தவகையில்

நெல்லி, பேரீச்சை, திராட்சை, அத்தி போன்ற பழங்களை உலர வைத்து உண்பது பல நூற்றாண்டுகளாக நடைமுறையில் இருந்து வருகிறது.

சீசன்களில் அதிகமாகக் கிடைக்கும் பழங்களை வீணாக்காமல், அவற்றை உலர்த்திப் பயன்படுத்தும் வழக்கம் கி.மு. 1200-க்கு முன்பிருந்தே நடைமுறையில் இருந்து வருவதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன.

Non-Stick Cookware Dangers: Hundreds of Scientists Issue Warning:

நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்தால் சர்க்கரை நோய் வருமா?
நான் ஸ்டிக் பாத்திரங்களில் சமைத்தால் சர்க்கரை நோய் வருமா?
மண் பாண்டத்தில் தொடங்கி, பித்தளை, வெண்கலம், இரும்பு, ஈயம், எவர்சில்வர் எனத் தொடர்ந்து, தற்போது... ஈசியாக செய்யக்கூடிய, உணவோடு ஒட்டாத நவீன நான்ஸ்டிக் பாத்திரங்களும் விற்பனைக்கு வந்து பெண்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. மண் அடுப்பு, மண் பாண்டம், கல் சட்டி, தேங்காய்ச் சிரட்டை, மரக்கரண்டி போன்ற பழங்காலச் சமையல் சாமான்கள், இன்று காட்சிப் பொருள்களாக மாறிவிட்டன. விளைவு உணவின் சுவை மட்டும் போகவில்லை, ஆரோக்கியமும் அதனுடன் சேர்ந்து போய்க்கொண்டு இருக்கிறது.

Basic Tips to Keep Children in Child Care Safe Outdoors

சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள். நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.
1. இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. ஏழெட்டு வயதுக் குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில் இருப்பவர்களின் தேவைகள் வேறு. எல்லா பருவங்களிலும் குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும் வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்பப் பக்குவமாக கையாள்வது முக்கியம்.

The Risks of Eating Too Much Pepper:

விஷத்தை முறிக்கும் அளவுக்கு மருத்துவக் குணங்களை கொண்ட மிளகில் நம்ப முடியாத அளவுக்கு பக்க விளைவுகளும் உள்ளது என்று உங்களுக்கு தெரியுமா?
அதிகமாக மிளகை உணவில் சேர்ப்பதன் மூலம், வயிற்றில் எரிச்சல் மற்றும் எப்பொதும் அசௌகரியத்தை உணரக்கூடும். எனவே மிளகை அளவாக உணவில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.
மிளகை அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது கண் சிவப்பு, கண் அரிப்பு மற்றும் கண் எரிச்சல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.