Skip to content

Guru Peyarchi Palangal 2017 to 2018 in Tamil | Thanks to vikadan:

 
குருப்பெயர்ச்சி பலன்கள் - துல்லிய பலன்கள்... எளிய பரிகாரங்களுடன்...
சாதுர்யமாகப் பேசி சாதிக்கும் அன்பர்களே!

உங்கள் ராசிக்கு 7-ல் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். அறிவாற்றலை வெளிப் படுத்த வாய்ப்புகள் அமையும். உடல் நலம் சீராகும். தடைப்பட்ட காரியங்கள் முடியும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். கொடுத்த கடன் திரும்ப வரும். பண வரவும் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனை நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும்.

குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் லாப வீட்டைப் பார்ப்பதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். 7-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். மகளின் திருமணம் சிறப்பாக நடைபெறும். வாழ்க்கைத்துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். 9-ம் பார்வையால் 3-ம் இடத்தைப் பார்ப்பதால் ஆளுமைத்திறன் அதிகரிக்கும். தன்னம்பிக்கைக் கூடும். கடன் பிரச்னைகள் தீரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசியாதிபதியும் அஷ்டமாதி பதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் திடீர் யோகம்  உண்டாகும். போட்டிகளில் வெற்றி கிடைக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு பெருகும். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். ஆனால், எதிர்பாராத செலவுகளும் பயணங்களும் இருந்துகொண்டே இருக்கும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்வதால் மனதில் இனம் தெரியாத கவலை ஏற்படும். தம்பதியர் அனுசரித்துச் செல்வது நல்லது. பணப் பற்றாக்குறை ஏற்படும். பிறமொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும்.

உங்கள் ராசிக்கு 9 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான், தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 4.7.18 வரை சஞ்சரிப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். மகனுக்கு வேலை கிடைக்கும். வீடு கட்டும் பணியை முடித்து கிரக பிரவேசம் செய்வீர்கள்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்
: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் ராசிக்கு 8-ம் இடத்தில் செல்வதால் செலவுகள் ஏற்படும். வேலைச் சுமையால் மனதில் சோர்வு ஏற்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் வீண் பிரச்னை, வழக்கால் நிம்மதியின்மை வந்து செல்லும்.வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீர்கள். காலத்துக்கு ஏற்ப முதலீடு செய்வீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். அனுபவம்மிக்க வேலையாட் களைப் பணியில் அமர்த்துவீர்கள். வேலைச்சுமை குறையும். தடைப்பட்ட பணிகள் முடியும். ஆளுமைத் திறனும் நிர்வாகத் திறனும் பாராட்டப்படும்.

மாணவர்கள் படிப்பில் முன்னேற்றம் காண்பீர்கள். விரும்பிய கல்விப் பிரிவில் சேருவீர்கள். உங்களுடைய தனித் திறமையை வளர்த்துக்கொள்வீர்கள். கலைத்துறையினரே! உங்கள் படைப்பு களால் புகழ் அடைவீர்கள். விருதுக்கு உங்கள் பெயர் பரிசீலிக்கப்படும். வர வேண்டிய சம்பளப் பாக்கி வந்து சேரும்.

இந்த குருப்பெயர்ச்சி பட்டுப்போன உங்கள் வாழ்க்கையைப் பசுமையாக மாற்றி, எங்கும் புகழைப் பெற்றுத் தரும்.

பரிகாரம்:

திருவாதிரை நட்சத்திரத்தன்று  மயிலாடுதுறைக்குச் சென்று, ஸ்ரீவதாரண்யேஸ்வரர் கோயிலில் அருளும் ஸ்ரீமேதா தட்சிணாமூர்த்தியை வணங்கி வாருங்கள்; தேவைகள் பூர்த்தியாகும்.

முயற்சியை எப்போதும் கைவிடாத அன்பர்களே!

2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் பிரவேசிக்க இருக்கிறார். சகட குரு கலக்கத்தைத் தருவாரே என்று அச்சப்பட வேண்டாம். சின்னச் சின்னப் போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருந்தாலும், அதனால் பெரிதும் பாதிப்பு ஏற்படாது. செலவுகளும் துரத்தும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தம்பதிகள் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்லவும். கடன்கள் கவலை தரும். புதியவர்களை நம்பி முடிவு எடுக்க வேண்டாம். 

குரு பகவானின் பார்வை குரு பகவான் தனது 5-ம் பார்வையால் 10-ம் வீட்டைப் பார்ப்பதால் தடைப்பட்ட வேலைகள் முடியும். வெளிநாட்டில் இருக்கும் நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வி.ஐ.பி-க்களின் அறிமுகம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு பகவான் தன்னுடைய 7-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். சிலருக்கு விசா கிடைக்கும். காணாமல் போன முக்கியமான ஆவணம் திரும்பக் கிடைக்கும். குரு பகவான் தன்னுடைய 9-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்த வகையில் பணம் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
2.9.17 முதல் 5.10.17 வரை உங்கள் ராசிக்கு 7 மற்றும் 12 ஆகிய வீடுகளுக்கு உரிய செவ்வாயின் நட்சத்திரமான சித்திரை 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் செல்வதால் கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். நீண்ட காலமாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். திருமண முயற்சிகள் சாதகமாகும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் செல்வதால் பிரச்னைகளைப் போராடி சமாளிக்கும் ஆற்றல் கிடைக்கும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். உங்கள் ராசிக்கு 8 மற்றும் 11-ம் இடங்களுக்கு அதிபதியான குரு பகவானின் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால் பரபரப்பாகச் செயல்படுவீர்கள். செலவுகள் அதிகமாகும். பண  விவகாரத்தில் கவனமாக இருக்கவும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்
: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் குரு பகவான் அமர்ந்து உங்களுடைய ராசியைப் பார்ப்பதால் திறமைகள் வெளிப்படும். பணவரவு அதிகரிக்கும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். விலை உயர்ந்த மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடி வரும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் மனதில் இனம் தெரியாத கவலைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் மிகுந்த கவனம் தேவை. உத்தியோகத்தில் எவ்வளவுதான் உழைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்லவும். மாணவர்கள் படிப்பில் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். விளையாட்டுப் போட்டிகளில் அடிபடக்கூடும் என்பதால் எச்சரிக்கை யாக இருக்கவும்.

கலைத்துறையினர்களே! புதிய வாய்ப்புகளை அலைந்து திரிந்துதான் பெறவேண்டி இருக்கும். மூத்த கலைஞர்கள் உதவி செய்வார்கள்.

இந்த குருப்பெயர்ச்சி அவ்வப்போது சுகவீனங்களையும் தோல்விகளையும் தந்தாலும், ஆராய்ந்து செயல்படவேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாக அமையும்.

பரிகாரம்:

அமாவாசை தினத்தன்று தென்குடித்திட்டை திருத்தலத்துக்குச் சென்று, பசுபதிநாதரையும் தட்சிணாமூர்த்தி பகவானையும்  வணங்கி வாருங்கள்; முயற்சிகள் பலிதமாகும்.

மற்றவர்களை மகிழ்வித்து மகிழ்பவர்களே!

உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமாகிய 5-ம் வீட்டில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர இருக்கிறார். எனவே, அடிப்படை வசதிகள் பெருகும். பிரச்னை களுக்குத் தீர்வு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாயாரின் உடல் நலம் சீராகும். வழக்கு சாதகமாகும். விலகிச் சென்றவர்கள் மீண்டும் வந்து பேசுவார்கள். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவானின் பார்வை  குரு பகவான் 5-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். தொழிலதிபர்களின் நட்பு கிடைக்கும். வேலை கிடைக்கும். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.  வெளிநாட்டுப் பயணம் அமையும். குரு பகவான் தன்னுடைய 7-ம் பார்வையால் உங்கள் லாப வீடான 11-ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ், கௌரவம் உயரும். கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வீடு வாங்கி கிரக பிரவேசம் செய்வீர்கள். குரு பகவான் தன் 9-ம் பார்வையால் ராசியைப் பார்ப்ப தால் எவரையும் வசீகரிப்பீர்கள். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். விலை உயர்ந்த பொருள்கள் வாங்குவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்
: உங்கள் ராசிக்கு 6 மற்றும் 11-ம் வீட்டுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் எதிர்ப்புகளும் விமர்சனங்களும் இருந்தாலும் அஞ்ச வேண்டாம். முன்கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. சகோதரர்களுடன் மனஸ்தாபம் ஏற்படும்.

 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வீகச் சொத்தில் பிரச்னை ஏற்படக்கூடும். உறவினர் களுடன் அளவோடு பழகவும்.
உங்களின் ராசிக்கு 7 மற்றும் 10-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால் எதையும் திட்டமிட்டுச் செய்வீர்கள். வாழ்க்கைத் துணை உங்களுடைய முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார். உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்
: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக குரு சென்று மறைவதால் ஆரோக்கியம் பற்றிய கவலை வந்து செல்லும். அரசாங்கக் காரியங்கள் தடைப்பட்டு முடியும்.  

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் புதிய முயற்சிகள் வெற்றி அடையும். செலவுகளும் துரத்தும். புதிய நட்பால் ஆதாயமும் உண்டாகும். கோயில் விழாக்களில் கலந்துகொள்வீர்கள்.

 வியாபாரத்தில் நஷ்டங்களைச் சரிசெய்வீர்கள். உத்தியோகத்தில் செல்வாக்கு கூடும். புதிய வாய்ப்புகள் வரும். பதவி உயர்வு உண்டு.  மாணவர்கள்  அதிக மதிப்பெண் பெறுவார்கள். விளையாட்டு, கலை, இலக்கியப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவார்கள்.

கலைத்துறையினரே! வதந்திகளி லிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய படைப்புகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக் கும். மக்கள் மத்தியில் பிரபலமாவீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி விரக்தியின் விளம்பிலிருந்த உங்களுக்கு புதிய சகாப்தத்தைத் தொடங்கிவைத்துச் சாதனையாளராக மாற்றும். 

பரிகாரம்:

பூரம் நட்சத்திரத்தில், மதுரை மாவட்டம் திடியன் மலை எனும் ஊரில் அருளும் ஸ்ரீகயிலாசநாதரையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வாருங்கள்; நினைத்தது நிறைவேறும்.

 மற்றவர்களுக்கு ஆறுதல் சொல்பவர்களே!

உங்கள் ராசிக்கு 4-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்ந்து பலன் தர இருக்கிறார். பொறுமை காப்பது நல்லது. நல்லவர்களின் தொடர்பை வளர்த்துக்கொள்ளுங்கள். வீட்டுச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது நல்லது. கணவன் மனைவி விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சிலருக்கு வீடு மாற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

குரு பகவானின் பார்வை குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் செலவுகள் அதிகரிக்கும். உறவினர், நண்பர் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பயணங்களால் ஆதாயம் உண்டாகும்.  குரு பகவான் தன் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய வேலை கிடைக்கும். சிலர் வேலையில் இருந்துகொண்டே பகுதி நேரமாகத் தொழில் தொடங்கவும் வாய்ப்பு அமையும். அடகில் இருந்த நகை, பத்திரங்களை மீட்பீர்கள். குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும்.

வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். நீண்டகாலமாகச் செல்ல நினைத்த புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

 குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் பிரபல யோகாதிபதி யான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் பாதியில் நின்ற கட்டட வேலையை மறுபடியும் தொடங்குவீர்கள். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். மற்றவர்களுக்கு ஜாமீன் கொடுக்க வேண்டாம்.
 உங்களின் ராசிக்கு 6 மற்றும் 9-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் புகழ், கௌரவம் உயரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம் படும். வழக்கில் நெருக்கடிகள் நீங்கும். 

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்
: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 5-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். வருமானம் உயரும். கடன்கள் அடைபடும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். பூர்வீகச் சொத்து பிரச்னை முடிவுக்கு வரும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன்னுடைய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் பயணிப்பதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகரிக்கும். உங்கள்மீது வீண்பழி சுமத்தப்படும். புதிய நபர்களை நம்ப வேண்டாம். எதிலும் மாற்று வழியை யோசிப்பது நெருக்கடிகள் ஏற்படாமல் இருக்க உதவும்.

  வியாபாரத்தில் கடினமாக உழைக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் கவனம் தேவை. மாணவர்களே!  படிப்பில் தீவிர கவனம் தேவை.கலைத் துறையினரே! சின்ன படங்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுடைய படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு பிரச்னைகளையும், இடப்பெயர்ச்சியையும் தந்தாலும் ஓரளவு முன்னேற வைக்கும்.

பரிகாரம்:

அஸ்தம் நட்சத்திர நாளில், சென்னை திருவலிதாயம்  (பாடி) தலத்துக்குச் சென்று, அங்கே அருள்பாலிக்கும்  குருபகவானை வழிபட்டு வாருங்கள். நல்லது நடக்கும்.

தன்னம்பிக்கையும் இரக்கமும் கொண்டவர்களே !
குரு பகவான் உங்கள் ராசிக்கு 3-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்துகொண்டு பலன் தர இருக்கிறார். சகிப்புத் தன்மை அவசியம்.பணப் பற்றாக்குறை நீடிக்கும். முக்கிய விஷயங்களில் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. குடும்ப விஷயத்தில் மற்றவர்களின் தலையீட்டை அனுமதிக்க வேண்டாம்.

குரு பகவானின் பார்வை: குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். ஆடை, ஆபரணங்கள் சேரும். பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்துவந்த மனக்கசப்பு நீங்கும். புது வேலை அமையும். திருமணம் கூடி வரும். குரு பகவான் தன் 7-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் சிந்தித்துச் சாதிப்பீர்கள். தந்தையின் ஆரோக்கியம் சீராகும். சொத்துப் பிரச்னை தீரும்.  செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். கடன்களைத் தீர்க்க யோசிப்பீர்கள்.

 குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். வழக்கு சாதகமாகும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள்  ராசிக்கு 4 மற்றும் 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். வீட்டை மாற்றியமைக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். தாயாரின் உடல் ஆரோக்கியம் சீர்படும். 

06.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் முக்கிய முடிவுகளைத் தைரியமாக எடுப்பீர்கள். பிறமொழி பேசுபவர்களால் அனுகூலம் உண்டாகும். வீடு களைகட்டும்.  உங்கள் ராசிக்கு 5 மற்றும் 8-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவானின் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை செல்வதால் பண வரவு உண்டு. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். பிள்ளைகளால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் குரு பகவான் அதிசார வக்கிரமாகச் செல்வதால் சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தூக்கமின்மை, நெஞ்சு எரிச்சல் வந்து நீங்கும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் உடல் அசதியும் மனச் சோர்வும் ஏற்படக்கூடும். மற்றவர்களின் விஷயங்களில் தலையிடாதீர்கள்.

வியாபாரத்தில் யாரையும் நம்பாமல் நீங்களே முடிவெடுங்கள்.உத்தியோகத் தில் கடினமாக உழைத்தாலும்; யோசித்தே செயல்படவும்.

மாணவர்களே! தொடக்கத்தில் இருந்தே படிப்பில் கவனம் செலுத்துங்கள். கஷ்டப்பட்டுப் படித்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

கலைத்துறையினரே! விமர்சனங் களும் வதந்திகளும் இருந்துகொண்டு தான் இருக்கும். ஆனாலும், கலைநயம் மிகுந்த உங்களின் படைப்புகள் பேசப்படும்.

மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி உங்களை சில நேரம் தவிக்க வைத்தாலும், அனுபவ அறிவாலும், கடின உழைப்பாலும் சாதிக்க வைக்கும்.

பரிகாரம்:

சித்திரை நட்சத்திர நாளில், சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள பட்டமங்கலம் தலத்துக்குச் சென்று ஸ்ரீசுந்தரேஸ்வரரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியை யும் வழிபடுங்கள்; துன்பங்கள் தீரும்.

சுயக்கட்டுப்பாட்டுடன் நடந்து கொள்பவர்களே!

உங்கள் ராசிக்கு தனஸ்தானமான 2-ம் இடத்தில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். மனதில் உற்சாகம் ஏற்படும். பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் நிலவும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். கட்டடப் பணியை மீண்டும் தொடங்க வங்கிக் கடனுதவி கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குரு பகவானின் பார்வை: குரு தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும். அரசால் அனுகூலம் உண்டாகும். பழுதான மின்னணு, மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். அதிகச் சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். குரு தனது 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டைப் பார்ப்பதால் திட்டமிட்டுச் செய்வது நல்லது. உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.  புண்ணிய ஸ்தலங் களுக்குச் செல்வீர்கள். குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டைப் பார்ப்பதால் சவாலான காரியங்களையும் செய்வீர்கள். புதிய பொறுப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். பணிச் சுமை குறையும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 3 மற்றும் 8-ம் வீடுகளுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் அடிக்கடி உணர்ச்சிவசப்படுவீர்கள். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பது நல்லது.

 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். உங்கள் ராசிக்கு 4 மற்றும் 7-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் கணவன் மனைவிக்குள் வாக்குவாதங்கள் வந்து செல்லும். தாயாருடன் மனவருத்தம் ஏற்படக்கூடும். தாயாரின் உடல் ஆரோக்கியமும் சிறு அளவில் பாதிக்கப்படக்கூடும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாகச் செல்வதால் முயற்சிகள் நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படும். வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். தாழ்வு மனப்பான்மை தலைதூக்கும். சொத்து விஷயத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரத்தில் வக்கிரகதியில் செல்வதால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். தடைப் பட்டிருந்த நீங்கி திருமணம் கூடிவரும்.
வியாபாரத்தில் மாற்றங்கள் செய்வ தால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத் தில் முக்கியத்துவம் கிடைக்கும். மாணவர்களே! படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எழுத்துப் போட்டி, ஓவியப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பாராட்டும் பெறுவீர்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெறுவீர்கள்.  கலைத்துறையினரே! தடைகளைத் தாண்டி சாதிப்பீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி, பொறுப்பு களையும் புதிய அனுபவங்களையும் தருவதோடு, எதிர்பார்த்த பலன்களைப் பெற்றுத் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்:

பெளர்ணமி திதியில் தக்கோலம் தலத்துக்குச் சென்று, அங்கே அருளும் ஸ்ரீஜலநாதஸ்வரர்,  ஸ்ரீநர்த்தன தட்சிணா மூர்த்தி ஆகிய இருவரையும் வழிபடுங்கள்;
வளம் பெருகும்.

மற்றவர்களுக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்பவர்களே!

குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசியில் ஜன்ம குருவாக அமர்வதால் சகிப்புத் தன்மையுடன் நடந்துகொள்வது நல்லது. வேலைச் சுமை அதிகரிக்கும். தம்பதிகள் அனுசரித்துச் செல்வது நல்லது. நண்பர்களை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்க வேண்டாம்.  சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும்.

குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 5-ம் இடத்தைப் பார்ப்பதால் எதிலும் தெளிவு பிறக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். மகளின் திருமணம் நல்லபடி நடக்கும். மகனுக்கு வேலை கிடைக்கும்.குலதெய்வப் பிரார்த்தனைகளை  நிறைவேற்றுவீர்கள். குரு பகவான் தன் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 7-ம் இடத்தைப் பார்ப்பதால் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். தங்க நகைகள் வாங்குவீர்கள். ஜன்ம குருவால் கணவன் மனைவிக்கு இடையில் சின்னச் சின்ன கசப்பு உணர்வுகள் ஏற்பட்டாலும் அன்பு குறையாது. ஒருவரின் முயற்சிக்கு மற்றவர் உறுதுணையாக இருப்பார்.

குரு பகவான் தனது 9-ம் பார்வையால் 9-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும்.  சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். மதிப்பு கூடும். காணாமல்போன முக்கிய ஆவணம் கிடைக்கும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 2 மற்றும் 7-ம் இடத்துக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் பண வரவு அதிகரிக்கும். அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி ஏற்படும். ஆனாலும் வாழ்க்கைத் துணையுடன் விவாதங்கள், அவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படக் கூடும்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் நெஞ்சு வலி, மூச்சுத் திணறல் வந்து செல்லும். சுப செலவுகள் அதிகரிக்கும்.  ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.
உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உடைய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் தடைகளையும் கடந்து முன்னேறுவீர்கள்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 2-ல் அமர்வதால் நோய்களிலிருந்து விடுபடுவீர்கள். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வசதியான வீட்டுக்குக் குடி புகுவீர்கள்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:  7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் வாக்குவாதங்கள் வந்து செல்லும். வேலைச்சுமை அதிகரிக்கும். திடீர்ப் பயணங்களும் ஏற்படும். கடனாகக் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும்.

வியாபாரத்தில் லாபம் சுமாராகத்தான் இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி களிடம் பணிவாக நடந்துகொள்ளவும். 

மாணவர்களுக்குத் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்த கடின முயற்சி அவசியம். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டிவரும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் சற்றே சோதனைகளைத் தந்தாலும், விட்டுக்கொடுத்துப் போவதன்மூலம் காரியம் சாதிக்கவைக்கும்.

பரிகாரம்:

வளர்பிறை மூன்றாம் பிறை நாளில், ஆலங்குடியில் வீற்றிருக்கும் ஸ்ரீஆபத்சகாயேஸ்வரரையும், குரு பகவானையும் வழிபடுங்கள். தடைகள் நீங்கும்.

மனசாட்சிக்கு மதிப்பளித்து நடப்பவர்களே!

   உங்கள் ராசிக்கு விரயஸ்தானமாகிய 12-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை அமர்வதால் சவால்களைச் சந்திக்க வேண்டி வரும். செலவுகள் துரத்தும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சொத்துப் பிரச்னைக்குச் சுமுகமாகத் தீர்வு காண முயலவும். பணப்பற்றாக் குறையின் காரணமாக வெளியில் கடன் வாங்கவும் நேரிடும். வீடு கட்ட வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

குரு பகவானின் பார்வை: குரு பகவான் தன் 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் எத்தனை நெருக்கடிகள் வந்தாலும் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். தாய்வழி சொத்துப் பிரச்னை முடிவுக்கு வரும். புது வீட்டுக்குக் குடிபுகுவீர்கள்.

உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டை குரு பகவான் தனது 7-ம் பார்வையால் பார்ப்பதால் எடுத்த வேலைகளை முடிக்காமல் விடமாட்டீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். உங்களை நம்பி புது பொறுப்புகள் ஒப்படைக்கப்படும்.

குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 8-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்காலம் குறித்து யோசிப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.  குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வீர் கள். பூர்வீகச் சொத்து கைக்கு வரும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிநாதனும் 6-ம் வீட்டுக்கு அதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் செல்வதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பேச்சில் கம்பீரம் பிறக்கும்.  வருமானம் உயரும்.  சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் மனோபலம் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சுப நிகழ்ச்சிகள், பொது விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் ராசிக்கு 2 மற்றும் 5-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசியிலேயே செல்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படக்கூடும். கர்ப்பிணிகள் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. செலவுகளும் அதிகரிக்கும்.  

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதியவர் களின் நட்பால் உற்சாகம் அடைவீர்கள். மகான்கள், சித்தர்களைச் சந்தித்து ஆசி பெறுவீர்கள்.

வியாபாரத்தில் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மாணவர்களே!  படிப்பில் அலட்சியம் கூடாது. கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளை மற்றவர்களிடம் சொல்லாதீர்கள்.

இந்த குருப்பெயர்ச்சி அலைச்சல், செலவினங்களைத் தந்தாலும், சந்தர்ப்பச் சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் நடந்துகொண்டு முன்னேற வைக்கும்.

பரிகாரம்:

சஷ்டி திதியன்று திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமானையும், ஸ்ரீதட்சிணா மூர்த்தியையும் வணங்கி வழிபட்டு வாருங்கள். மகிழ்ச்சி பொங்கும்.

எதிலும் தனித்து நிற்பவர்களே!

உங்கள் ராசிக்கு லாப ஸ்தானமாகிய 11-ம் வீட்டில் குரு பகவான் 2.9.17  முதல் 2.10.18 வரை அமர்வதால் கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் தொடர்பான முயற்சிகள் வெற்றி பெறும். அரசாங்கக் காரியங்கள் சாதகமாக முடியும். வழக்குகள் சாதகமாகும்.  

குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் நினைத்தது நிறைவேறும். மனதில் தைரியம் கூடும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  குரு பகவான் தனது 7-ம் பார்வையால் ராசிக்கு 5-ம் வீட்டைப் பார்ப்பதால் மகளின் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

குரு பகவான் தனது 9-ம் பார்வையால் ராசிக்கு 7-ம் வீட்டைப் பார்ப்பதால் உங்களுடைய தனித் திறமை வெளிப்படும். வாழ்க்கைத்துணைக்கு புது வேலை அமையும். செல்வாக்குக் கூடும். பிரபலங்கள் நண்பர்கள் ஆவார்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டாகும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 5 மற்றும் 12-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் 2.9.17 முதல் 5.10.17 வரை செல்வதால் மாறுபட்ட சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிப்புக் கூடும்.  வழக்குகளில் வெற்றி உண்டு.

6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் உங்களின் புகழ் உயரும். பிதுர்வழி சொத்து கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு. நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். உங்களின் ராசிநாதனும் சுகாதிபதியுமான குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். ஏமாந்த தொகை வரும். தாய்வழி உறவினர்களால் திடீர் நன்மைகள் உண்டாகும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரமாக உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் குரு பகவான் சென்று மறைவதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். வேலைச் சுமையால் டென்ஷன் அதிகரிக்கும். கடன் பிரச்னை களால் கலக்கம் உண்டாகும். 
 
குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் விமர்சனங்களைப் பொறுமையாக ஏற்றுக்கொள்ளவும். வீடு மாற வேண்டிய நிலை ஏற்படும். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

வியாபாரம் மேம்படும். உத்தியோகத் தில் உயரதிகாரிகளின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். மாணவர்களே! உயர்கல்வியில் விரும்பிய பாடப்பிரிவில் இடம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பும் அமையும். கலைத்துறையினரே! இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் தோல்விகளால் துவண்டுகிடந்த உங்களைச் சிலிர்த்தெழச் செய்வதுடன், வசதி வாய்ப்புகளையும் அள்ளித் தருவதாக அமையும்.

பரிகாரம்:

தசமி திதியன்று, கும்பகோணத்துக்கு அருகேயுள்ள தேப்பெருமா நல்லூரில் அருளும் ஸ்ரீவிஸ்வநாதரையும், ஸ்ரீஅன்னதான குருவையும் வணங்குங்கள்; தொட்டது துலங்கும்.

தோல்விகளால் சோர்வு அடையாத வர்களே!
உங்கள் ராசிக்கு 10-ம் இடத்தில் 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் அமர்வதால் வேலைகளைத் திட்டமிட்டபடி முடிக்க முடியாது. உழைப்புக்கான அங்கீகாரமோ, பாராட்டோ கிடைக்காது. பல வேலை களையும் நீங்களே பார்க்க வேண்டி வரும். தன்னம்பிக்கை குறையும். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும். சிலர் பணியின் காரணமாகக் குடும்பத்தைப் பிரிந்து செல்ல நேரிடும்.

குரு பகவானின் பார்வை: குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 2-ம் இடத்தைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குப் புது வேலை கிடைக்கும். 
குரு பகவான் தன் 7-ம் பார்வையால் ராசிக்கு 4-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் ஆதரவு கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். வீடு, மனை வாங்கக் கடனுதவி கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். சிலருக்கு இடமாற்றம் உண்டாகும். குரு பகவான் தன் 9-ம் பார்வையால் உங்களின் 6-ம் வீட்டைப் பார்ப்பதால் செயலில் வேகம் கூடும். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும். செலவுகள் குறையும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 4 மற்றும் 11 ஆகிய இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் செல்வதால் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள். வழக்கில் தீர்ப்பு சாதகமாகும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். திருமணம் கூடி வரும். உங்கள் ராசிக்கு 3, 12-ம் இடங்களுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் நட்சத்திரம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால், திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களை கட்டும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எனினும், மனதிலே ஒருவித அச்ச உணர்வு வந்து நீங்கும். பிள்ளை களிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். வீடு கட்டுவதற்கு வங்கிக் கடன் தாமதமாக கிடைக்கும். முன்கோபம் கூடாது. மற்றவர்களுக்காக சாட்சிக் கையொப்பமிட வேண்டாம். அரசாங்கத்தால் நெருக்கடிகள் வந்து நீங்கும். இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 11-ம் வீட்டில் குரு பகவான் அமர்வதால் புகழ், கௌரவம் கூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். மகனுக்கு வேலை கிடைக்கும். பயணங்களால் ஆதாயமடைவீர்கள்.

 வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும்.   உத்தியோக ஸ்தானமான 10-ம் வீட்டில் குரு அமர்வதால் உங்கள் உழைப்புக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவர். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இழுபறி நிலையே நீடிக்கும். மாணவர்களே! படிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கலைத்துறையினர்களே! இழந்த புகழை மீண்டும் பெற யதார்த்த படைப்புகளைக் கொடுக்கவும்.

இந்த குரு மாற்றம் உங்களின் முன்னேற்றப் பாதையில் சிறுசிறு தடைகளை ஏற்படுத்தினாலும், உங்களைக் கொஞ்சம் செம்மைப் படுத்துவதாக அமையும்.

பரிகாரம்:

புனர்பூசம் நட்சத்திர  நாளில், அரியலூர் மாவட்டம் திருமழபாடி எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீவைத்தியநாத சுவாமி கோயிலுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்; வாழ்வில் திருப்பம் உண்டாகும்.

ஏற்றத்தாழ்வுகளைக் கண்டு அஞ்சாதவர்களே!

 உங்கள் ராசிக்கு 2.9.17 முதல் 2.10.18 வரை குரு பகவான் 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தர இருக்கிறார். வாழ்க்கையின் நெளிவுசுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். பேச்சில் கனிவு பிறக்கும். முடியாத காரியங்களையும் முடித்துக் காட்டுவீர்கள். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும். கணவன்  மனைவிக்கு இடையில் அந்நியோன்யம்  அதிகரிக்கும். கோயில்களுக்குச் சென்று வருவீர்கள்.

குரு பகவானின் பார்வை:  குரு பகவான் தனது 5-ம் பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தோற்றப் பொலிவு கூடும். ஆடை ஆபரணம் வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும்.  முக்கியப் பொறுப்புகள் ஒப்படைக்கப்படும். பங்குச் சந்தை மூலமாகப் பணம் வரும். குரு பகவான் 7-ம் பார்வையால் உங்கள் ராசிக்கு 3-ம் வீட்டைப் பார்ப்பதால் தைரியம் கூடும். சொத்துப் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உதவியாக  இருப்பார்கள்.  அதிகாரிகளின் நட்பு  கிடைக்கும். பொதுக் காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.

 குரு பகவான் தனது 9-ம் பார்வையால் உங்களின் 5-ம் வீட்டைப் பார்ப்பதால் சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். மகனின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள் நல்லவிதத்தில் முடியும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் ராசிக்கு 3 மற்றும் 10-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் குரு பகவான் பயணிப்பதால் சவால்களில் வெற்றி பெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். சொத்து கைக்கு வரும்.  6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் ஒருவித தயக்கம், படபடப்பு, எதிர்காலம் குறித்த பயம், தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். பிறமொழி பேசுபவர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.  அயல்நாட்டில் இருப்பவர்களால் நன்மை உண்டாகும்.  உங்களின் ராசிக்கு 2 மற்றும் 11-ம் வீடுகளுக்கு உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1,2,3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 வரை மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் வசதி வாய்ப்புகள் பெருகும். குடும்பத்தில் நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் கூடி வரும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் வேலைச் சுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும். இடமாற்றங்கள் உண்டாகும். தர்ம சங்கடமான சூழ்நிலை ஏற்படும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் எதிர்பார்ப்புகள் சற்று தாமதமாகி முடியும். அடிக்கடி மனதில் குழப்பம் ஏற்படும்.

 வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை மாறும். சிலர் சில்லறை வியாபாரத்தில் இருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவீர்கள். உத்தியோகத்தில் அலுவலகச் சூழ்நிலை நிம்மதி தரும். உங்களின் நிர்வாகத் திறமை பளிச்சிடும்.

மாணவர்களே! படிப்பில் முன்னேறுவீர்கள். பொது அறிவை வளர்த்துக்கொள்வீர்கள். கலைத்துறையினர்களே! வேற்று மொழி வாய்ப்புகளால் புகழ் அடைவீர்கள். பொது நிகழ்ச்சிகளில் தலைமை தாங்கும்  அளவுக்குப் பிரபலமாவீர்கள். மூத்த கலைஞர்களிடம் நுணுக்கங்களைக் கற்றுக்கொள்வீர்கள்.

இந்த குரு மாற்றம் மன நிம்மதியைத் தருவதுடன், எதிலும் வெற்றி பெறுவோம் என்கிற தன்னம்பிக்கையை அதிகப்படுத்துவதாக அமையும்.

பரிகாரம்:

பூசம் நட்சத்திர நாளில், சிதம்பரம் அருகிலுள்ள ஓமாம்புலியூர் எனும் ஊரில் அருளும் ஸ்ரீபிரணவ வியாக்ர புரீஸ்வரரையும் தட்சிணாமூர்த்தியையும் வில்வ அர்ச்சனை செய்து வழிபடுங்கள்; சுபிட்சம் உண்டாகும்.

எப்போதும் நல்லவழியில் செல்பவர்களே!

குரு பகவான் 2.9.17 முதல் 2.10.18 வரை உங்கள் ராசிக்கு 8-ல் அமர்ந்து பலன்களைத் தர இருக்கிறார். அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். கடன்களால் கலக்கம் உண்டாகும். திடீர்ப் பயணங்களால் அலைச்சலும் டென்ஷனும் ஏற்படும். வழக்குகள் சுமுகமாகும்.

குரு பகவானின் பார்வை:  குரு பகவான்  தனது 5-ம் பார்வையால் 12-ம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் கணிசமாக உயரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். அரசால் அனுகூலம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். குரு பகவான் தனது 7-ம் பார்வையால் 2-ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாரின் ஆரோக்கியம் சீராகும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். உறவினர், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்.  குரு பகவான் தனது 9-ம் பார்வையால் 4-ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.உங்கள் ரசனைக்கேற்ப வீடு வாங்குவீர்கள்.

குரு பகவானின் சஞ்சாரம்
: உங்கள் ராசிக்கு 2, 9-ம் இடங்களுக்கு உரிய செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் 3, 4-ம் பாதம் துலாம் ராசியில் 2.9.17 முதல் 5.10.17 வரை குரு பகவான் பயணிப்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். வீடு, மனை வாங்குவது, விற்பது நல்லபடி முடியும். தடைப்பட்ட காரியங்களை முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். 6.10.17 முதல் 7.12.17 வரை ராகு பகவானின் சுவாதி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். குடும்பத்தில் அடிக்கடி சச்சரவுகள் வரக்கூடும். கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. பிற மொழி பேசுபவர்களால் ஆதாயம் உண்டாகும். உங்களின் ராசிக்கு 10-ம் இடத்துக்கும் உரிய குரு பகவான் தன் சுய நட்சத்திரமான விசாகம் 1, 2, 3-ம் பாதம் துலாம் ராசியிலேயே 8.12.17 முதல் 13.2.18 மற்றும் 4.7.18 முதல் 2.10.18 வரை பயணிப்பதால் வங்கிக் கடன் கிடைக்கும். சுப காரியங்கள் ஏற்பாடாகும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் சம்பந்தப்பட்ட முயற்சிகள்  நல்லவிதத்தில் முடியும்.

குரு பகவானின் அதிசார வக்கிர சஞ்சாரம்: 14.2.18 முதல் 10.4.18 வரை விசாகம் நட்சத்திரம் 4-ம் பாதத்தில் அதிசார வக்கிரத்தில் உங்கள் ராசிக்கு 9-ம் வீட்டில் குரு பகவான் சென்று அமர்வதால் அரசாங்க விஷயம் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் மரியாதை கூடும். இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பெரிய பதவிகளுக்கு உங்கள் பெயர் பரிந்துரை செய்யப்படும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்: 7.3.18 முதல் 3.7.18 வரை தன் சுய சாரமான விசாகம் நட்சத்திரம் துலாம் ராசியில் குரு பகவான் வக்கிர கதியில் செல்வதால் பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர் கள். புதிய வீட்டுக்கு மாறுவீர்கள்.

வியாபாரத்தில் அவசர முதலீடுகள் வேண்டாம். உத்தியோகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். மாணவர்களே! முதலில் இருந்தே பாடங்களை கவனமாகப் படிப்பது அவசியம். உங்கள் தனித் திறமையை வளர்த்துக்கொள்ளப் பாருங்கள். கலைத்துறையினர்களே! உங்களின் படைப்புகளுக்கு வேறு சிலர் உரிமை கொண்டாடுவார்கள்.

 இந்த குரு மாற்றம் கடின உழைப்பு, குறைந்த வருமானம் என ஒருபக்கம் அலைக்கழித்தாலும், சின்னச் சின்ன ஆசைகளையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்:

மகம் நட்சத்திர நாளில், உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புலிவனம் ஸ்ரீவியாக்ர புரீஸ்வரரையும் ஸ்ரீசிம்மகுரு தட்சிணா மூர்த்தியையும் வணங்குங்கள்; வாழ்வில் சாதிப்பீர்கள்.