Skip to content

1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புக்களுக்கான புதிய பாடத்திட்டத்தை முதலமைச்சர் வரும் 4ஆம் தேதி வெளியிடுவார் - பள்ளிக்கல்வித்துறை தகவல்:

தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வதற்காக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் வரும் கல்வியாண்டு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக கல்வியாளர்கள், பேராசிரியர்கள், துணைவேந்தர்கள் உள்ளிட்ட 200 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, புதிய பாடத்திட்டத்திற்கான வரைவு தயார் செய்யப்பட்டு, இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இந்நிலையில் அரசின் புதிய பாடத்திட்டத்தின்படி 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புத்தகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவை நாளை வெளியிடப்படும் என ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தை முதலமைச்சர் வரும் 4ஆம் தேதி வெளியிடுவார் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.