Skip to content

82 அரசுப்பள்ளி குழந்தைகள் பங்கு பெற்ற "குழந்தைகளை கொண்டாடுவோம்" திருவிழா போட்டிகள்:




குழந்தைகளை கொண்டாடுவோம் திருவிழா காஞ்சிபுரம் மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் 28.10.2018 ஞாயிறு அன்று காஞ்சி டிஜிட்டல் டீம் மற்றும் காட்டாங்கொளத்தூர் ஒன்றிய ஆசிரியர்கள் இணைந்து குழந்தைகளை கொண்டாடுவோம் திருவிழா போட்டிகள், நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்றது அதில் 82 அரசுப்பள்ளி குழந்தைகள் பங்கு பெற்றனர்.போட்டியில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன .நிகழ்ச்சியை காட்டாங்கொளத்தூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் முனைவர் ப.இரமேஷ் சிறப்பாக ஏற்பாடு செய்துஇருந்தார்.