Skip to content

மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை முதலமைச்சர் நாளை துவக்கி வைக்கிறார்:

 

ளநிலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு துவக்கி வைக்க இருக்கிறார்.

சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் இதற்கான பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. தமிழக முதல்வர் துவக்கி வைக்க இருப்பதால், அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடுக்கான கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் கலந்தாய்வில், தினமும் 3 கட்டங்களாக தலா 175 மாணவர்கள், கலந்து கொள்வார்கள். வெளி மாவட்டங்களில் இருந்து வரும் மாணவர்களுக்காக உணவு, வாகன வசதி, தங்கும் இடம் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.