12 வது தேர்ச்சி பெற்றவரா ? தமிழகத்தில் Data Entry Operator பணிவாய்ப்பு !
தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் செங்கல்பட்டு மாவட்டம் அரசினர் சிறப்பு இல்ல வளாகத்தில் செயல்பட்டு வரும் காஞ்சிபுரம் மாவட்ட இளைஞர் நீதி குழுமத்தில் காலியாகவுள்ள உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்கு 26/12/2020 வரை ஆர்வமுள்ளவர்கள் தபால் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
நிறுவனம் | தமிழ்நாடு அரசு, சமூகப் பாதுகாப்புத்துறை |
பணியின் பெயர் | உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் |
பணியிடங்கள் | Various |
கடைசி தேதி | 26.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
தமிழகத்தில் Data Entry Operator காலிப்பணியிடங்கள்:
தற்காலிகமாக ஓராண்டுகால ஒப்பந்தத்தின் அடிப்படையில் உதவியாளருடன் கலந்த கணினி இயக்குபவர் பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
DEO கல்வி தகுதி:
குறைந்தபட்ச கல்வித்தகுதியாக பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சில் இளநிலைஃமேல்நிலை தேர்ச்சி பெற்றிருப்பதுடன் கணினி இயக்குவதில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
Assistant cum Data Entry Operator – ரூ.9,000/-
கணினி இயக்குபவர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட தகுதிகளை பெற்றவர்கள் மேற்படி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பூர்த்தி செய்த விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களின் நகல்களை ‘மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண். 317 K.T.S மணி தெரு, மாமல்லன் நகர், காஞ்சிபுரம் 631502 என்ற முகவரிக்கு மாலை 5.30 மணிக்குள் கிடைக்கும்படி அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.