Skip to content

8ஆம் வகுப்பு தேர்ச்சியா? தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு :விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2021 மாலை 5.00 மணி வரை:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கடலூர் மண்டல அலுவலகத்தில் தற்காலிக அடிப்படையில் பட்டியல் எழுத்தர், உதவுபவர் மற்றும் காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

காலிப் பணியிடங்கள் :

பட்டியல் எழுத்தர் - 82 காலிப்பணியிடங்கள்
உதவுபவர் - 19 காலிப்பணியிடங்கள்
காவலர் - 89 காலிப்பணியிடங்கள்

சம்பளம் :

பணியின் தன்மை அடிப்படையில் ரூ.2,359 முதல் 2,410/- மற்றும் அகவிலைப்படி வழங்கப்படும். மேலும் விபரங்களை தெரிந்துக்கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வித் தகுதி :

பி.எஸ்.சி, +2 மற்றும் 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கிறவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

01.07.2020 அன்றைய தேதி படி குறைந்தபட்சம் 18 வயது நிறைவடைந்திருக்க வேண்டும், அதிகபட்சமாக OC - 30, BC/BCM/MBC - 32, SC/SCA/ST - 35 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை :

நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள https://ispnasik.spmcil.com/UploadDocument/Detail%20Advt.%20-20.11.2020.6947e89c-0302-4126-8ab1-cbe97266d394.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 19.01.2021 மாலை 5.00 மணி வரை