Skip to content

Govt Job -ஊராட்சி ஒன்றியத்தில் வேலை: விண்ணப்பிக்க கடைசிநாள்: பிப்ரவரி 10!


கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி, கிருஷ்ணராயபுரம், கடவூர், தோகைமலை ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிடுவதற்கான விண்ணப்பங்கள் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவரால் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்.

முழு விவரம்:

நிறுவனம் : கரூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி

பணிகள் : பதிவறை எழுத்தர், அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர்

காலிப்பணியிடங்கள்: 17

ஊதியம்: ரூ.15,900 - 50,400

விண்ணப்பிக்க கடைசிநாள்: 10/02/2021

இந்த நியமனங்களுக்கான விண்ணப்பப் படிவம் மற்றும் அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.

https://www.tamilyugam.in/wp-content/uploads/2021/01/Recruitment-in-Panchayat-Development-Department.pdf