Skip to content

10-வது தேர்ச்சியா? சென்னையிலேயே மத்தியஅரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

10-வது தேர்ச்சியா? சென்னையிலேயே மத்தியஅரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் காலியாக உள்ள பெண்கள் விடுதி காப்பாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியித்திற்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

அனைத்து பாடத்திற்கும் முதுகலை ஆசிரியர் தேர்விற்கான STUDY MATERIALS AND QUESTION PAPERS பெற இங்கு கிளிக் செய்யவும்.

நிர்வாகம் : கலாக்ஷேத்ரா பவுண்டேஷன் (Kalakshetra Foundation)

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : சென்னை

பணி : பெண்கள் விடுதி காப்பாளர்

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஆங்கிலத்தில் நன்கு உரையாடத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 30 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரருக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.19,864 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.kalakshetra.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு 15.03.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Kalakshetra Foundation (An autonomous body under Ministry of Culture, Government of India) Thiruvanmiyur, Chennai - 600 041

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.kalakshetra.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

இன்றைய அனைத்து வேலை வாய்ப்பு செய்திகளையும் அறிய இங்கு கிளிக் செய்யவும்.