Skip to content

ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனத்தில் காலியாக உள்ள நூலகர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.35 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தேசிய நல்வாழ்வு மற்றும் குடும்பநல நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Steno - Grade III, Librarain, Staff Nurse, Technical Assistant (Lab), Senior Technical Assistant, Assistant Research Officer உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 08

கல்வித் தகுதி :

ஒவ்வொரு பணிக்கும் தனித் தனியே கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ, முதுநிலைப் பட்டம், பி.எஸ்சி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 25 முதல் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://www.nihfw.org/ எனும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 08.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : எஸ்சி, எஸ்டி, பெண் விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை. இதர விண்ணப்பதாரர்கள் ரூ.300 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.nihfw.org/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.