Skip to content

தனியார் வேலைவாய்ப்பு முகாம் - 10 ஆம் வகுப்பு முதல் டிகிரி வரை.

சேலம் மாவட்டத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியான பட்டதாரிகள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பணி வாய்ப்பினை பெற்றுக் கொள்ளலாம். அதற்கான தகவல்களை கீழே வழங்கலாம்.

மத்திய அரசின் தேசிய தொழில் சேவை பிரிவில் இருந்து பல்வேறு தனியார் நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பிட முகாம் நடைபெற உள்ளது. தற்போதுய் கொரோனா காலகட்டம் என்பதனால் பாதுகாப்பு கருதி இந்த முகாம்கள் அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.

காலியிடங்கள் - ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் பலதரப்பட்ட நிறுவனங்களில் காலியாக உள்ளது. கல்வித்தகுதி - 10ம் வகுப்பு தேர்ச்சி முதல் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் வரை அனைவரும் முறையாக கலந்து கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் நாள் - ஜூன் 18,19,25 மற்றும் 26
முகாம் நடைபெறும் நேரம் - காலை 09.00 மணி முதல் மாலை 04.00 மணி இவ்வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
முகாம் நடைபெறும் இடம் - முகாம் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது.

அதற்கான வழிமுறைகளை கீழே உள்ள இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளலாம். இதில் பங்கு பெரும் பட்டதாரிகளுக்கு பணி வாய்ப்புகள் கிடைக்கவும் வாய்ப்புள்ளதால் தகுதியானவர்கள் தவறாது கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம். இணையம்: https://www.ncs.gov.in/_layouts/15/NCSP/Calendar.aspx