Skip to content

2021ஆம் ஆண்டு 'குரு அதிசார பெயர்ச்சி"... அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்? யார்?

 

சூரிய குடும்பத்தில் சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற எல்லா கிரகங்களும் அதிசார வக்கிர நிலையால் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்வது உண்டு. அதை தான் அதிசார கிரகப்பெயர்ச்சி என்கிறோம்.

அந்த வகையில் இவ்வாண்டு குருபகவான், பங்குனி மாதம் 24ஆம் தேதி அதாவது ஏப்ரல் 6ஆம் தேதி அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசார பெயர்ச்சியாகிறார்.

சுப கிரகமாக விளங்கும் குருவானவர் கொடுப்பதில் கொடை வள்ளல் ஆவார். குரு இருக்கும் ராசியை விட குரு பார்க்கும் ராசிக்கு ஜாக்பாட் தான் என்பது ஜோதிட விதி.

அந்த வகையில் இவ்வாண்டு நடைபெற இருக்கும் அதிசார குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும்? எந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் உண்டாகும்? என்பதை தெரிந்து கொள்வோம்.

அதிசார பெயர்ச்சி ஆகும் குருபகவான் தன்னுடைய பார்வையின் மூலம் மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்கு யோக பலன்களை அள்ளிக் கொடுக்க போகிறார்.

பொதுவாக குருவின் பார்வை நம்முடைய ஜாதகத்தில் 5, 7, 9 ஆகிய நிலைகளில் இருக்கும் பொழுது நமக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாகும் என்பது ஜோதிட நியதி.

மிதுனம் :

மிதுன ராசிக்கு குரு 5ஆம் பார்வையாக இருப்பதால் நீண்ட நாள் தடைபட்ட சுபகாரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நிறைவேறும். தொழில், உத்தியோகம் சார்ந்த பிரச்சனைகள்; நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம் :

சிம்ம ராசியில் குரு ஏழாம் பார்வையாக இருப்பதால் ராஜயோகம் பெறுவீர்கள். இதுவரை தோல்விகளை சந்தித்து வந்த நீங்கள் இனி வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள். உங்களுக்கு இதுவரை தொல்லை கொடுத்து வந்த ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளும் சீராகி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த எதிரிகள் தொல்லை நீங்கி போட்டி, பொறாமைகள் போன்ற தொந்தரவுகள் இன்றி எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தைக் காண்பீர்கள்.

துலாம் :

குருவின் பார்வை துலாம் ராசியில் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும். உங்களை ஆட்டிப் படைத்த தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு நற்பாதையை நோக்கி பயணிக்க இருக்கிறீர்கள்.

தனுசு மற்றும் மீனம் :

தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு சுப பலன்கள் உண்டு.

அசுப பலன் பெறும் ராசிகள் :

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான், மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை கொடுக்க இருக்கிறார் என்பதால் இந்த ராசியில் இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பரிகாரம் :

அதிசார பெயர்ச்சி அடைந்த குருபகவான் 160 நாட்கள் வரை கும்ப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் குருபகவானை வழிபாடு செய்வது, குருபகவானுக்கு உரிய மந்திரங்களை உச்சரிப்பது, நவகிரக சன்னதியில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டைக்கடலை தானம் செய்வது போன்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் நல்ல பலன்களை காணலாம்.