Skip to content

IAS., IPS., IFS., IRS., - மெயின் தேர்வு ரிசல்ட் மார்ச் 2ம் வாரம் வெளியீடு & மே, ஜூனில் நேர்முக தேர்வு:

IAS., IPS., IFS., IRS உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பதவிக்கான மெயின் Antiqua";">தேர்வுக்கான ரிசல்ட் மார்ச் 2வது வாரத்தில் வெளியிடப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது . மே, ஜூனில் நேர்முக தேர்வு தொடங்க உள்ளது.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் உள்ளிட்ட சிவில் சர்வீஸ் பணிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.

2020ம் ஆண்டில் சிவில் சர்வீஸ் பணியில் அடங்கிய 796 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலை தேர்வு கடந்த அக்டோபர் 4ம் தேதி நடந்தது.

இத்தேர்வை சுமார் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினர். தொடர்ந்து அக்டோபர் 23ம் தேதி முதல்நிலை தேர்வு ரிசல்ட் வெளியிடப்பட்டது.

இத்தேர்வில் இந்தியா முழுவதும் 10,564 பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் 750 பேர் வரை தேர்ச்சி பெற்றனர். தொடர்ந்து மெயின் தேர்வு இந்தியா முழுவதும் 24 நகரங்களில் கடந்த 8ம் தேதி தொடங்கியது. தமிழ்நாட்டை பொறுத்தவரை சென்னையில் மட்டும் இத்தேர்வு நடைபெற்றது.

8ம் தேதி தொடங்கிய தேர்வு 9ம் தேதி, 10ம் தேதி மற்றும் 16ம் தேதி, 17ம் தேதி என மொத்தம் 5 நாட்கள் நடந்தது. இந்த நிலையில் மெயின் தேர்வுக்கான ரிசல்ட்டை மார்ச் மாதத்தில் வெளியிட மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இது குறித்து சங்கர் ..எஸ். அகடாமி நிர்வாக இயக்குனர் டாக்டர் எஸ்.டி.வைஷ்ணவி கூறியதாவது: சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு மொத்தம் 5 நாட்கள் நடைபெற்றது. இந்த தேர்வுக்கான ரிசல்ட் மார்ச் இரண்டாவது வாரத்தில் வெளியிட அதிக வாய்ப்புள்ளது.

மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அடுத்தக்கட்டமாக நேர்முக தேர்வு நடைபெறும். நேர்முக தேர்வு 2 மாதம், அதாவது மே, ஜூன் மாதம் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து மெயின் தேர்வு, நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

அவர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி வழங்கப்படும். அதன் பிறகு அவர்கள் அரசு பணியில் அமர்த்தப்படுவார்கள். ஒரு வருடம் அவர்கள் அந்த பணியில் பயிற்சியில் இருப்பார்கள். அதன் பிறகு அவர்களுக்கான முழுமையான பணிகள் ஒதுக்கப்படும்.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்கள் மற்றும் அனைத்து துறை வேலை வாய்ப்புகள் 28 பக்கங்களில்:

ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் இந்து அறக்கட்டளைத் துறையில் வேலை:

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையின் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் காலியாக உள்ள கிடங்கு பொறுப்பாளர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை

பணி : கிடங்கு பொறுப்பாளர்

பணியிடம் : அர்த்தநாரீஸ்வரர் கோவில்

மொத்த காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சம்பளம் : ரூ.15,900 முதல் ரூ.50,400

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழ்க்கண்ட முகவரிக்கு 22.02.2021 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : உதவி ஆணையர்/செயல் அலுவலர் அலுவலகம், அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில், திருச்செங்கோடு நகர் மற்றும் வட்டம், நாமக்கல் மாவட்டம் - 637211.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.02.2021

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://bit.ly/TNHRCENotification அல்லது கீழே இணைக்கப்பட்டுள் அறிவிப்பினைக் காணவும்.

டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலூர் சிஎம்சி-யில் வேலை வாய்ப்பு!

வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் CMC எனும் கிருத்துவ மருத்துவக் கல்லூரியில் காலியாக உள்ள டெக்னிக்கல் அசிஸ்டன்ட் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்று மருத்துவ ஆய்வகத் துறையில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கிருத்துவ மருத்துவக் கல்லூரி, வேலூர்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 01

பணி : Technical Assistant

கல்வித் தகுதி : 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று Medical Laboratory Technology பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://clin.cmcvellore.ac.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 01.02.2021ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவக்ள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://clin.cmcvellore.ac.in/cmcapp/listapplication.aspx என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant, JRF, SRF உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு :

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Technical Assistant, JRF, SRF உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 21 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிப்ளமோ, எம்.எஸ்சி, பி.எஸ்சி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 21

பணி : Technical Assistant, JRF, SRF

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித் தகுதி : பணிக்கு சம்பத்தப்பட்ட ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Diploma/ M.Sc/ Bachelor's Degree, B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.16,000 முதல் ரூ.31,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியில் 29.01.2021 kற்றும் பிப்ரவரி 2ம் தேதியன்று நடைபெறும் நேர்முகத் தேர்வில் பங்கேற்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். Technical Assistant பணிக்கு 29.01.2021 அன்றும், JRF, SRF பணிகளுக்கு 02.02.2021 அன்றும் நேர்முகத் தேர்வு நடைபெறும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnausms.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

தியாகராய கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு:

சென்னை தியாகராய செட்டி கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Chennai Theagaraya Chetty College

மொத்த காலியிடங்கள்: Various

வேலை செய்யும் இடம்: சென்னை (தமிழ்நாடு)

வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள், பல்கலைக்கழக வேலைகள்

வேலை: பாதுகாப்பு, ஆய்வக உதவியாளர், பதிவு எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் (Security, Lab Assistant, Record Clerk & Office Assistant)

கல்வித்தகுதி: 8th, 10th முடித்திருக்க வேண்டும்.

வயது: 18 முதல் 32 வயது வரை இருக்கும்.

மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை.

விண்ணப்பக் கட்டணம்: இல்லை.

தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.sirtheagarayacollege.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.

முகவரி - The Secretary, Sir Theagaraya College, No: 1047 T.H Road,
Old Washermenpet, Chennai-600021

மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள

ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.01.2021.

சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் காலியாக உள்ள நீதியரசருக்கான உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு:

சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் காலியாக உள்ள நீதியரசருக்கான உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.77 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னை உயர்நீதிமன்றம்

பணி : நீதியரசருக்கான உதவியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 66

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள், பொறியியல் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தட்டச்சுத் துறையில் தேர்ச்சி பெற்றிருப்பது கட்டாயம்.

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர் 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://www.mhc.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் 03.02.2021 தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.1000
  • இதர விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mhc.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினை காணவும்.

124 பக்கங்கள் கொண்ட இன்றைய 26-01-21- கல்வி -வேலைவாய்ப்பு தகவல்களின் தொகுப்பு:

நர்சிங் முடித்தவர்களுக்கு மாதம் 2.5 லட்சம் சம்பளம். உடனே அப்ளை பண்ணுங்க.!!!

நர்சிங் முடித்தவர்களுக்கு மாதம் 2.5 லட்சம் சம்பளம். உடனே அப்ளை பண்ணுங்க.!!!

பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்களுக்கு மாதம் 2.5 லட்சம் சம்பளத்தில் தமிழக அரசு வேலை வாங்கித் தருகிறது.

பி.எஸ்.சி நர்சிங் முடித்து ஆங்கில திறன் அறியும் தேர்வான IELTS அல்லது OET போன்றவற்றில் 7 பேன்ட் அல்லது பி, சி கிரேடு வைத்துள்ளவர்களுக்கு அயர்லாந்து, பிரிட்டன் ஆகிய நாடுகளில் 2 முதல் 2.5 லட்சம் மாத சம்பளத்தில் தமிழக அரசே வேலை வாங்கி தருகிறது.

அயலக வேலைவாய்ப்பு நிறுவனம் என்ற நிறுவனத்தை தமிழக அரசு நடத்தி வருகிறது. கிண்டியிலுள்ள இந்நிறுவனம் மூலம் வெளிநாட்டு வேலைகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். டிப்ளமோ, பொறியியல், நர்சிங், துணை மருத்துவ படிப்புகள், எம்.பி.பி.எஸ்., பிட்டர், வெல்டர் போன்றவற்றில் ஐ.டி.ஐ., முடித்தவர்களை இவர்கள் வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது நர்சிங் முடித்தவர்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது. பிரிட்டன் அரசே 100 நர்சுகளை தங்கள் நாட்டு அரசு மருத்துவமனைகளுக்காக எடுக்கிறது. அவர்களுக்கான ஊதியம் 2.5 லட்சம் வரை. அதே போல் அயர்லாந்து தலைநகர் டப்ளினில் வேலை பார்க்க 20 நர்சுகளை தேர்ந்தெடுக்க உள்ளனர்.

இது தவிர கத்தார் தலைநகர் தோஹாவில் வேலை பார்க்கவும் நர்சுகள் தேவை என அறிவிப்பு வெளியாகியுள்ளது. கத்தார் பணிக்கு ரூ.70 ஆயிரம் வரை சம்பளம். அதற்கென கத்தார் டேட்டா ப்ளோ அல்லது கத்தார் புரோமெட்ரிக் முடித்திருக்க வேண்டும். இந்த வேலைகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜன., 31 ஆகும். மேலும் விவரங்களுக்கு https://www.omcmanpower.com/currentopenings.php தொடர்பு எண்: 044- 22505886.