Skip to content

Rs 2500 Samrt Phone BSNL :

ரூ.2,500/-க்குள் ஸ்மார்ட்போன்; ஏர்டெல் & ஜியோவிற்கு ஷாக் கொடுத்த பிஎஸ்என்எல்.!
தற்சமயம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ஜியோபோனை அறிமுகப்படுத்தி இப்போது விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. மேலும் கூடிய விரைவில் ஏர்டெல் நிறுவனம் குறைந்த விலையில் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த தயார் நிலையில் உள்ளது.
பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்), 17 ஆண்டு கால சேவை தொடர்கிறது. அதன்பின் இப்போது அந்நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி குறைந்த விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
மொபைல் போன் தயாரிப்பாளர்களான மைக்ரோமேக்ஸ் மற்றும் லவா ஆகியோருடன் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டபிறகு குறைந்த விலை தொலைபேசிகளை ரூ. 2,500 அல்லது அதற்கும் குறைவாக ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்தபிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவின் முன்முயற்சியின் ஒரு பகுதியாக உள்நாட்டில் வளர்ச்சியடைந்த மொபைல் நிறுவனங்களுடனும், சேர்ந்துஸ்மார்ட்போன்களை தயாரிக்கும் நோக்குடன் பிஎஸ்என்எல் நிறுவனம் செயல்படும் என ஹைதராபாத் டெலிகாம்
இயக்குநர் கே. ராம்சந்த் அறிவித்தார்.
  
பிஎஸ்என்எல் நிறுவனம் தெலுங்கானாவில் உள்ள 118 கிராமங்களில் வைஃபை வசதி செய்துதரப்பட்டுள்ளது எனபொது மேலாளர்கள் சி. ராமச்சந்திரன், என். சுஜாதா, ஹனுமான்த ராவ் மற்றும் பலர் பத்திரிகையாளர் மாநாட்டில்
உரையாற்றினார்.
  
பிஎஸ்என்எல் இப்போது புதிய ஜிஎஸ்எம் வசதியைக் கொண்டுவந்துள்ளது, மேலும் அனைத்து இடங்களிலும் சீரானமொபைல் சிக்னல் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பல மில்லியன் வாடிக்கையாளர்களை
கொண்டுள்ளது இந்நிறுவனம்.
  
அடுத்த மாதம் பிப்ரவரிக்கு முன்னர் ஆதரார் எண்ணை இணைக்க வேண்டும் என பிஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்குதகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  
ஏர்டெல் நிறுவனம் மோளம் திட்டமிடப்படும் இந்த இரட்டை சிம் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4 இன்ச் டிஸ்ப்ளே, முன் மற்றும் பின்புற கேமராக்கள்,
வோல்ட் அழைப்பு மற்றும் ஒரு திடமான பேட்டரி வாழ்க்கை ஆகிய பிராதன அம்சங்களை கொண்டிருக்கலாம்