தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 1477 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 105 ஆக உயர்ந்துள்ள நிலையில், ஒட்டுமொத்தமாக 1477 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து கொரோனா
பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே இருந்தன. இதனால்
பாதிக்கப்பட்டவர்களின் எணிக்கை ஆயிரத்தை தாண்டியது.
கடந்த
ஐந்து நாட்களாக புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 56-க்கு கீழ்
இருந்தது. இந்நிலையில் இன்று 105 பேர் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதில் 50
பேர் சென்னை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இன்றைய 105
எண்ணிக்கையுடன் ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் இதுவரை 1477 பேர் கொரோனாவால்
பாதிக்கப்பட்டுள்ளனர். 411 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.