சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க 25% மானியத்தில் வங்கிக்கடன் அளிக்கப்பட உள்ளது.
சென்னை ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
வேலையற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற சிறப்பு திட்டத்தை தமிழக அரசு 2011-ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.
நடப்பு நிதி ஆண்டில் 285 பயனாளிகளுக்கு ரூ.1.8 கோடி மானியத்தொகை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது தகுதி உள்ள்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்
கடனுதவி தொகை:-
உற்பத்தி தொழில்களுக்கு அதிகபட்சம் ரூ.10 லட்சமும்,
சேவை தொழில்க்கு ரூ.5 லட்சமும்
வியாபாரத்திற்க்கு ரூ 5 லட்சம் வங்கிக்கடன் பெறலாம்.
இதற்கு 25 சதவீதம் மானியமும் உண்டு.
தகுதி:-
விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு:-
பொதுப்பிரிவினருக்கு 35, இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் (பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி), பெண்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், திருநங்கைகள் ஆகியோருக்கு 45 ஆகும்.
விண்ணப்பிக்க:-
www.msmeonline.tn.gov.in/uyegp
மேலும் விவரங்களுக்கு:-
கிண்டிதொழிற்பேட்டையில் அமைந்துள்ள தொழில் மற்றும் வணிகத் துறை இணை இயக்குநர் அலுவலகத்தை நேரில் அல்லது 044-22501621/22, 9487239561 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
அதிகாரபூர்வ அறிவிப்பு:-
https://cdn.s3waas.gov.in/s313f3cf8c531952d72e5847c4183e6910/uploads/2020/10/2020102010.pdf