இது குறித்து, உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என, ஆசிரியர்கள்
கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம் முழுதும், பள்ளி, கல்லுாரிகள்
திறக்கப்படாத நிலையில், ஆசிரியர்கள் ஒரு நாள் விட்டு ஒரு நாள்,
பள்ளிகளுக்கு வந்து பணியாற்ற உத்தரவிடப்பட்டு உள்ளது. இடமாறுதல்
கவுன்சிலிங்வீட்டில் இருந்தவாறு, மாணவர்களுக்கு, 'வாட்ஸ் ஆப்' வழியே பாடம்
நடத்தவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது. பள்ளிகள் இன்னும் திறக்கப்படாத
நிலையில், ஆசிரியர்களுக்கு பொது இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படவில்லை.
அதனால், ஆசிரியர்களுக்கு விருப்ப மாறுதல் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில், ஆறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள்,
ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சம்பவம், சர்ச்சையை
ஏற்படுத்தியுள்ளது. இதற்கான உத்தரவை, திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி
அலுவலர், வெற்றி செல்வி பிறப்பித்து உள்ளார். இடமாறுதல் செய்யப்பட்ட தலைமை
ஆசிரியர்கள் விபரம்:ஜீவா -- பள்ளிப்பட்டு பெண்கள் மேல்நிலைப்பள்ளி; அனிதா -
-ஊத்துக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளி; நிர்மலா - -கே.ஜி.கண்டிகை அரசு
மேல்நிலைப் பள்ளி; பூபால முருகன் - -பாடியநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளி;
பிரேமா- - பொதட்டூர்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி; சாந்திமூர்த்தி-
- கொரட்டூர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி.வழக்கமாக தலைமை
ஆசிரியர்களுக்கான இடமாறுதல்கள், பள்ளி கல்வி துறையின் பொது கவுன்சிலிங்
வழியாக, விருப்ப மாறுதலாகவே வழங்கப்படும்.குற்றச்சாட்டுஅதேபோல், மேல்நிலைப்
பள்ளி தலைமை ஆசிரியர்களின் இடமாறுதல் உத்தரவை, பள்ளி கல்வி விதிகளின்படி,
மேல்நிலை கல்வி இணை இயக்குனர் மட்டுமே பிறப்பிப்பார்.ஆனால், திருவள்ளூர்
மாவட்டத்தில், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியே, நேரடியாக இடமாறுதல் உத்தரவை
பிறப்பித்துள்ளதாக, ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், இடமாற்றம் செய்யப்பட்ட பள்ளிகளின் காலியிடங்களில், உடனடியாக வேறு
பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும், அவர்களுக்கான இடங்களில், வேறு
ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.நிர்வாக மாறுதல் என்ற பெயரில்
கூண்டோடு இடமாற்றம் செய்துள்ளதால், தலைமை ஆசிரியர்களும், முதுநிலை
ஆசிரியர்களும் அதிருப்தி அடைந்து உள்ளனர். இதன் பின்னணியில், முறைகேடுகள்
ஏதும் நடந்துள்ளதா என, உயர்மட்ட அளவில் விசாரிக்க வேண்டும் என, இணை
இயக்குனர் குமார் மற்றும் பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன் ஆகியோரிடம்,
தலைமை ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்