Skip to content

ஃப்ரீடயபாட்டீஸ் வந்தாலே சர்க்கரை நோய் வருமா, அதை தடுக்க முடியுமா?

சர்க்கரை நோய் வந்தால் அதை முழுவதும் குணப்படுத்தவே முடியாது. வாழ்நாள் முழுக்க மாத்திரையும் உணவு கட்டுப்பாடும் மட்டுமே இதற்கு தீர்வு.


சர்க்கரை நோய் வந்த பிறகு தான் தொல்லை அதை வராமலே செய்துவிட்டால் என்று நினைக்கும் அளவுக்கு மக்கள் இது குறித்து விழிப்புணர்வு கொண்டிருக்கிறார்கள். சிலருக்கு பரிசோதனையின் போது சர்க்கரை நோய் வருவதற்கான முந்தைய நிலையை காண்பிக்கும். இது ஃப்ரீ டையபட்டீஸ் என்று அழைக்கப்படுகிறது. ரத்தத்தில் சர்க்கரை அளவு வழக்கத்துக்கு அதிகமாக உள்ளது என்பதால் விரைவில் நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு என்று சொல்லலாம்.
இன்சுலின் சுரப்பு குறைந்து வரும் இந்நிலையை சற்று கவனமாக கடந்தால் டைப் 2 நீரிழிவை வராமல் தடுத்துவிட முடியும்.

குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு இருந்தாலோ , ஆரோக்கியமற்ற உணவு பழக்கத்தை கொண்டிருந்தாலோ ஒழுங்கற்ற வாழ்க்கை முறையை கொண்டிருந்தாலோ அவர்களுக்கு நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் 35 வயதுக்கு பிறகு ஆறுமாதங்களுக்கு ஒருமுறை அறிகுறிகளே இல்லையென்றாலும் ரத்த சர்க்கரை அளவை பரிசோதனை செய்வது நல்லது. பரிசோதனையில் நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு இருப்பவர்கள் உணவு முறைகளில் சிலவற்றை தவிர்த்தாலே நீரிழிவு அபாயத்தை குறைக்க முடியும்.

​ஃப்ரீடயாபட்டீஸ்

ஃப்ரீடயாபட்டீஸ் என்றால் நீரீழிவு நோய் என்று பயப்பட வேண்டாம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வழக்கத்தை விட சற்று அதிகமாக கொண்டிருக்கும். ஆனால் டைப் 2 நீரிழிவு கிடையாது. ஆனால் இந்த நிலையை பலரும் கொண்டிருக்க வாய்ப்புண்டு. இந்த நிலை வந்தவர்களுக்கு நீரிழிவு நொயால் பாதிக்கப்படும் உறுப்புகளில் இதயம், ரத்த நாளங்கள், சிறுநீரகங்கள் தொடங்கி இருக்கலாம். ஆனால் இதில் ஒரு நல்ல விஷயமும் உண்டு. ஃப்ரீடயபாட்டிஸ் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாக நீரிழிவு 2 எதிர்கொள்ள கூடும் என்பது நிச்சயமில்லை.

இந்த நிலை வந்தவர்கள் ஆரோக்கியமான உணவு, உடல் உழைப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது ரத்த சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அப்படியான ஆரோக்கிய உணவுகள் போன்று தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.

​அறிகுறிகள்

ஃப்ரீடயபட்டீஸ் பரிசோதனையின் போது மட்டுமே கண்டறிய கூடியதல்ல. இந்த நிலையிலும் அறிகுறிகள் உண்டு. பொதுவான அறிகுறிகள் இல்லை என்றாலும் சிலருக்கு சருமத்தில் கருமை நிறம் உண்டாக கூடும். கழுத்து, அக்குள், முழங்கைகள், முழங்கால்கள் போன்றவற்றிலும் கருமை படரும். இது ஃப்ரீடயாபட்டீஸை கண்டறியாமல் அலட்சியப்படுத்தும் போது அறிகுறிகள் அதிகரிக்கும்.

படிப்படியாக அவை அதிகரிக்கும் போது தாகம் அதிகரித்து அடிக்கடி சிறுநீர் வரும், பசி உணர்வு அதிகரிக்கும், உடல் சோர்வு உண்டாகும். பார்வையில் மங்கல் வரக்கூடும். சிலருக்கு எடை அதிகரிக்கும். சரும பிரச்சனை உண்டாகும். இவையெல்லாம் நீங்கள் ஃப்ரீடயபாட்டீஸிலும் முதிர்ந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று சொல்லலாம்.

​காரணங்கள்

ஃப்ரீடயபாட்டீஸ் காரணம் இதுதான் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் குடும்ப பிண்ணனி, மரபியல் காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.உடல் எடை கட்டுக்குள் இல்லாமல் அதிக எடையுடன் அடிவயிற்றில் அதிக கொழுப்புடன் இணைக்கப்பட்டு இருப்பதும் இதற்கான முக்கிய காரணம் என்று சொல்லலாம்.

உடல் செயல்பாடுகள் வழக்கத்தை காட்டிலும் குறைவாக இருந்தாலும் இந்த நிலை உருவாகலாம்.இந்த ஃப்ரீடயாபட்டீஸ் வந்தால் உடலில் தசைகள் மற்றூம் பிற திசுக்களை உருவாக்கும் உயிரணுக்களுக்கு ஆற்றலை கொடுக்கும் வேலையை செய்வதற்கு பதிலாக குளுக்கோஸ் ரத்தத்தில் சேர்கிறது. இந்த குளுக்கோஸ் உடலில் உண்ணும் உணவிலிருந்து வருகிறது. உணவு செரிமானம் ஆகும் போது உணவில் இருக்கும் குளுக்கோஸ் ஆனது ரத்த ஓட்டத்தில் சர்க்கரையை சேர்க்கிறது. உயிரணுக்களுக்கு குளுக்கோஸ் செல்ல இன்சுலின் தேவை.

உடலில் கணையத்தின் பின் அமைந்துள்ள சுரப்பியிலிருந்து இன்சுலின் சுரப்பு சுரக்கிறது. இது உணவு சாப்பிடும் போது ரத்தத்துக்கு இன்சுலின் சுரப்பை அனுப்புகிறது. இது குளுக்கோஸை உயிரணுக்களுக்கும், ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் பயன்படுகிறது. இந்த சுரப்பு குறையும் போது ரத்த்ததில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது.

ஃப்ரீடயபாட்டீஸ் நிலை வரும்போது கணையம் போதுமான இன்சுலின் சுரக்காது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தவும் செய்யாது, இதனால் உயிரணுக்களுக்கு குளுக்கோஸ் செல்லாமல் அவை ரத்த ஓட்டத்தில் கலக்கிறது.

​சேர்க்க வேண்டிய உணவுகள்

ஃப்ரிடயாபட்டீஸ் வந்தாலே நீங்கள் ஆரோக்கியமான உணவு வகைகளில் கவனம் செலுத்த வேண்டும். பரிசோதனையில் ஃப்ரீடயபட்டீஸ் கண்டறிந்தால் உரிய இடைவேளையில் மீண்டும் பரிசோதனை செய்வது அவசியம். அதே நேரம் இது மீளக்கூடியதும் என்பதால் உணவுகளில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும்.

குறைந்த க்ளைசெமிக் உணவுகள்பட்டியலிட்டு எடுத்துகொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துகொள்ளும் போது குறைவான அளவு கொண்ட உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். பழுப்பு அரிசி முழு தானியங்கள் சேர்க்கலாம். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள்.

கீரைகள், காய்கறிகள், மெலிந்த இறைச்சி, சோயாபீன், குறைந்த கொழுப்பு , பால், கொட்டைகள், விதைகள், தயிர், பருப்பு வகைகள், பச்சை பீன்ஸ், பாலாடைக்கட்டி, டோஃபு புரதச்சத்து நிறைந்த உணவுகள் சேர்க்கலாம்.

​தவிர்க்க வேண்டிய உணவுகள்

அதிக கிளைசெமிக் உணவுகள் வேகமாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி சுத்திகரிக்கப்பட்ட மாவு, உருளைக்கிழங்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்க்க வேண்டும். இனிப்பு நிறைந்த உணவுகள் எடுத்துகொள்ளும் போது அவை ரத்த ஓட்டத்தில் வேகமாக கலப்பதால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு காரணமாக குளுக்கோஸ் கட்டுப்படுத்தமுடியாமல் அதிகரிக்க கூடும்.

செயற்கை பானங்கள் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து நிறைந்த உணவு பொருள்களும் தவிர்க்க வேண்டியதே. நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பை குறைவாக எடுத்துகொள்ள வேண்டும். இவை நீரிழிவு அபாயத்தோடு இதய பிரச்சனையையும் உண்டாக்கிவிட வாய்ப்புண்டு.

கவனம்
ஃப்ரீடயாபட்டீஸ் இருப்பவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பை உண்டாக்கவில்லை என்றாலும் சிறுநீரகங்களை சேதப்படுத்த வாய்ப்புண்டு.
மேலும் உயர் ரத்த அழுத்தம், அதிக கொழுப்புச்சத்து, இதய நோய், பக்கவாதம் சிறுநீரக நோய், நரம்பு சேதம், பார்வை குறைபாடு போன்ற குறைபாட்டையும் உண்டாக்கிவிடும்,.
ஆரோக்கியமான உணவு, உடல் உழைப்பு, உடல் எடை கட்டுப்பாடு என எல்லாமே ஃப்ரீடயாபட்டீஸை டைப் 2 நீரிழிவை தடுக்க கூடும்.
குறிப்பு
ஃப்ரீடயபாட்டீஸை கொண்டிருப்பவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவதன் மூலம் நீரிழிவு டைப் 2 வராமல் தடுக்கலாம்.