வருவாய் துறை வேலைவாய்ப்பு 2020 – விண்ணப்பிக்க இறுதி நாள்
தமிழ்நாட்டில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப திண்டுக்கல் வருவாய் துறை வேலைவாய்ப்பு அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதில் Village Assistant பணிகளுக்கு என 05 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
வேலைவாய்ப்பு செய்திகள்
வருவாய் துறை வேலைவாய்ப்பு விவரங்கள் :
- குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 35 வயது வரை உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
- விண்ணப்பதாரர்கள் 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமுள்ளவர்கள் கல்வித்தகுதி, இருப்பிடச் சான்று, வயது, சாதி குறித்த ஆவணங்களில் சான்றொப்பமிட்ட நகல்களுடன் வேடசந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 15.12.2020-ம் தேதி 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என முன்னதாக வெளியான அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான இறுதி தேதி தற்போது நெருங்கி விட்டதனால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | திண்டுக்கல் வருவாய் துறை |
பணியின் பெயர் | கிராம உதவியாளர் |
பணியிடங்கள் | 05 |
கடைசி தேதி | 15.12.2020 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |