Skip to content

வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர், கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது!

 

 மத்திய அரசின் கீழ் தமிழகத்தில் செயல்பட்டு வரும் சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகத்தில் காலியாக உள்ள ஸ்டெனோகிராபர், கிளார்க் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.69 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம்

மேலாண்மை : மத்திய அரசு

துறை : வனவிலங்கு குற்றக் கட்டுப்பாட்டு பணியகம்

பணி : ஸ்டெனோகிராபர், கிளார்க்

மொத்த காலிப் பணியிடம் : 10

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 56 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : மத்திய அரசு, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசு நிறுவனங்களில் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகித்தவராக (Holding an Analogous Post on regular basis) இருப்பவர்கள் மட்டுமே இந்த மத்திய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க இயலும்.

ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.69,100 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://wccb.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தபால் மூலம் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 14.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://wccb.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.