Skip to content

வேலையில்லையா?. தமிழக அரசு சார்பில் வெளிநாட்டில் வேலை.!!!


தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் உள்ள இளைஞர்களுக்கு வெளிநாடு மற்றும் உள்நாட்டில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் என தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசின் தொழிலாளர் நலத்துறை மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் அரசு நிறுவனமான ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேசன் லிமிடெட் நிறுவனம் மூலம் வெளிநாடு மற்றும் உள்நாட்டில் கீழ்க்கண்ட வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்களுக்கு வழங்கப்படவுள்ளது.

அதன்படி, கே.எம்.எஸ் கத்தார் மெடிக்கல் சென்டரில் ஆண் மற்றும் பெண் டெக்னீஷியன்கள் 50 பேர். மாதசம்பளம் 72,000 வரை வழங்கப்படும். ஸ்டாப் செவிலியர் படிப்பு நிறைவு செய்திருக்க வேண்டும். இங்கிலாந்து தேசிய சுகாதார மையம் சார்பில் பணியாற்ற ஆண் மற்றும் பெண் செவிலியர்கள் 100 நபர்கள் தேவை. மாத சம்பளம் 2.5 லட்சம் வரை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதே போன்று அந்த அறிவிப்பில், ஓமன், கத்தார், அயர்லாந்து போன்ற நாடுகளிலும் வேலைவாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் உள்நாட்டைப் பொருத்தவரை சென்னை, ஆந்திரா போன்ற இடங்களில் வேலைவாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழக அரசின் இந்த வேலைவாய்ப்பு குறித்து தெளிவாக தெரிந்துக்கொள்ள 9176434488 மற்றும் 8667407470 ஆகிய தொலைபேசி எண்ணுக்கும், [email protected] என்ற மெயில் மற்றும் www.omcmanpower.com. என்ற இணையத்தில் தொடர்பு கொள்ளலாம்.