Skip to content

மத்திய அரசின் NLC நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? ஊதியம் ரூ.90 ஆயிரம்!!

மத்திய அரசின் NLC நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா? ஊதியம் ரூ.90 ஆயிரம்!!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் காலியாக உள்ள தோட்டக்கலை உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடத்திற்கு ரூ.90 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தோட்டக்கலை உதவியாளர்

மொத்த காலிப் பணியிடங்கள் : 04

கல்வித் தகுதி : Horticulture, Floriculture பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.22,000 முதல் ரூ.90,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://www.nlcindia.com என்ற இணையதளம் மூலம் 07.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 07.01.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் எழுத்துத் தேர்வு, செய்முறைத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு ரூ. 486

எஸ்சி, எஸ்டி உள்ளிட்ட இதர விண்ணப்பதாரர்களுக்கு ரூ.236

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லது www.nlcindia.com எனும் லிங்க்கை கிளிக் செய்யவும்.