Skip to content

8-வது தேர்ச்சியா? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் வங்கியில் பணியாற்றலாம் வாங்க!

 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில் (BOI) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், Faculty, Attendant, காவலர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.20 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : பேங்க் ஆப் இந்தியா (BOI)

மேலாண்மை : மத்திய அரசுப் பணி

மொத்த காலிப் பணியிடம் : 05

பணி : Faculty, Office Assistant, Attendant மற்றும் Watchman

கல்வித் தகுதி:

மேற்கண்ட பணியிடத்திற்கு 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • ஒவ்வொரு பணியிடத்திற்கும் வயது வரம்பு மாறும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.

ஊதியம் : ரூ.50,000 முதல் 20,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://bankofindia.co.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் Presentation மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப் படிவத்தினைப் பெறவும் www.bankofindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.