Skip to content

என்எல்சி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு :

இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி(என்எல்சி) நிறுவனத்தில் 65 எஸ்எம்இ ஆபரேட்டர் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.04/2021

நிறுவனம்: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம்

பணியிடம்: நெய்வேலி, தமிழ்நாடு

பணி: எஸ்எம்இ ஆபரேட்டர்

காலியிடங்கள்: 65

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். தமிழில் எழுத, பேச படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.38,000

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.nlcindia.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
ADDITIONAL CHIEF MANAGER (HR) / RECRUITMENT
RECRUITMENT CELL, HUMAN RESOURCE DEPARTMENT, CORPORATE OFFICE,
NLC INDIA LIMITED, BLOCK-1, NEYVELI, TAMILNADU - 607801.

மேலும் விவரங்கள் அறிய https://www.nlcindia.in/new_website/careers/SME%20Operator%20FTE.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.06.2021