Inspire award திருப்பத்தூர் ஒன்றிய பள்ளிகளின் படைப்புகள் :
Inspire award திருப்பத்தூர் ஒன்றிய பள்ளிகளின் படைப்புகள்.
புத்தாக்க அறிவியல் ஆய்வு 2017-2018 க்கான அறிவியல் கண்காட்சி சிவகங்கை மாவட்ட அளவில் சிவகங்கை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று (05.02.2018) நடைபெற்றது.
இதில் திருப்பத்தூர் ஒன்றியத்தில் கலந்து கொண்ட பள்ளிகளின் படைப்புகள் உங்கள் பார்வைக்கு
நீட் பயிற்சி மையங்கள் நாளை முதல் செயல்படும்!
தமிழகத்தில் ஏற்கனவே 100 நீட் பயிற்சி மையங்கள் தொடங்கப்பட்டுள்ளதைத்
தொடர்ந்து, நாளை (பிப்ரவரி 4) மீதமுள்ள 312 நீட் தேர்வு மையங்கள்
திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 450 பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டு, மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 'ஸ்பீட்' என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து 20 கோடி ரூபாய் செலவில் நீட் தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வழங்கத் தமிழக அரசு முடிவு செய்தது. முதற்கட்டமாக 100 நீட் தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட்டது. நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெறுவதற்காக தமிழக பள்ளிக்கல்வித் துறையின், http://tnschools.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மூலம் 2017 அக்டோபர் 31ஆம் தேதி வரை பதிவு செய்தனர்.