Skip to content

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்: ராமதாஸ்:

 

அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவம் பயில இடம் கிடைத்தும், அதிகளவு கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு அரசு பள்ளி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது என்றும், இவை அனைத்தும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் என்றாலும், மறைமுகமாக 3 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக தனியார் கல்லூரிகளால் வசூலிக்கப்படுகின்றன என குற்றம்சாட்டினார்.

சமூகநீதியின் அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிக்க ஏற்பாடு செய்த தமிழக அரசு, கட்டணம் செலுத்துவதற்கும் உதவி செய்து அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் படிக்க உதவ வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மாணவர்களுக்கு, அரசே கட்டணம் செலுத்துவதன் மூலம் தனியார் கல்லூரிகளில் மறைமுகக் கட்டணம் வசூலிக்கப் படுவதையும் தடுக்கலாம் என்றும், அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களின் கட்டணத்தையும் கல்வி உதவித் தொகையில் ஈடுசெய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

எனவே, மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேரத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 405 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்ற வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தாய கட்டையி்ல் விழும் எண்களின் மகிமை!

 


அரசர்களின் ராஜ தந்திர விளையாட்டு தாயம் உருட்டுதல் ஆகும்

தாயம் உருட்டும் போது 1 (தாயம்), 5, 6, 12 விழுந்தால் கட்டையை தொடர்ந்து உருட்டுவது ஏன் தெரியுமா!

தாயம் (1) சூரியனை குறிக்கும் சூரியனே பிரபஞ்சத்தின் ஆதாரம்!

5ம் எண் பஞ்ச பூதங்களை குறிக்கும் (நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், பூமி)

6ம் எண் மற்ற ஆறு கிரகங்களையும் (சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி) மற்றும்
ஆறு பருவங்களையும்
(இளவேனிற், முதுவேனிற், கார், குளிர், முன்பனி, பின்பனி )காலங்களை குறிக்கும்!

12 ம் எண் 12 இராசிகளையும் ( 12 மாதங்களையும்) குறிக்கும்

இந்த 1, 5, 6, 12 க்குறிய  மேற்கண்ட அம்சங்களை ஆராய்ந்தே எதிரி நாட்டுடன் படை எடுப்பர்

அதேபோல் 2ம் எண்
இரண்டு அயனங்களை ( உத்ராயனம், தட்சிணாயனம்)

3ம் எண் முக்குண வேளையை (சாத்வீகம், ராஜஸம், தாமஸம்) குறிக்கும்

4ம் எண் நான்கு யோகங்களை (அமிர்த, சித்த, மரண, பிரபலாரிஷ்ட) குறிக்கும்

எனவே இந்த எண்களில் 1, 5 ,6, 12 பகடையில் முக்கிய அம்சமாக கருதுவதால் அந்த எண்கள் விழுந்தால் மீண்டும் தாயகட்டையை உருட்டுகின்றனர்!

10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு… சிபிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்ட தகவல்..!!

 

கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு நிச்சயம் நடைபெறும் என்று சிபிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2020-21 ஆம் கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் 100% திறக்கப்படவில்லை. சில மாதங்களில் பள்ளிகள் திறக்கப்படும் என்றாலும் கொரோனா தொற்றால் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. பல மாநிலங்கள் பள்ளிகள் திறக்கும் திட்டத்தை தள்ளி போட்டுள்ளது. தற்போது வரை ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடத்தப்பட்டு வரும் நிலையில் பொது தேர்வு நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வி பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே எழுந்துள்ளது.

பொதுத் தேர்வு நடத்த வாய்ப்பில்லை என்ற கருத்தும் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என சிபிஎஸசி  நிர்வாகம் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்சி அமைப்பு நிர்வாகிகள் குழு செயலாளர் அனுராக் திரிபாதி இந்த தகவலை வெளியிட்டுள்ளார். விரைவில் பொது தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்படும் என்று அவர் தெரிவித்தார்.

B. Lit முடித்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்ற பிறகு MA, BEd முடித்து இரண்டு ஊக்க ஊதியம் பெற்ற பிறகு அது தவறு என்று வட்டாரக் கல்வி அலுவலர் மூலம் தணிக்கை தடை கடிதம் பெற்றுள்ளவர்களுக்கு கீழ்கண்ட Judgement பயன்படும்.

தகவல் திரு -சா.ஜான்சன்தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் ,திருச்செந்தூர் கல்வி மாவட்டம்.

B. Lit  முடித்து நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று அதன் பிறகு MA, BEd  முடித்து இரண்டு ஊக்க ஊதியம் பெற்றவர்களுக்கு அது தவறு என்று தணிக்கை தடை கடிதம் தற்போது வட்டாரக் கல்வி அலுவலர் மூலம்
பெற்றவர்களுக்ககு அதனை தடைசெய்து பெறப்பட்ட கீழ்கண்ட Judgement மற்றும் கருத்துக்கள் அதே போல் பாதிக்கப்பட்டுள்ள மற்றவர்களும் நீதிமன்றம் சென்று Judgement பெறுவதற்கு பயனுள்ளதாக அமையும்.DOWNLOAD THE JUDGEMENT COPY & G.Os  in BELOW 2 links- share to all

CLICK HERE-SUPPORTING G.Os

 

ஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை:

 ஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை

ஒற்றை பெண் குழந்தைக்கு உதவித்தொகை

9 ஆயிரம் உதவி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி:

 9 ஆயிரம் உதவி ஆசிரியர் பணியிடங்களை  நிரப்ப உச்ச நீதிமன்றம் அனுமதி


உத்தர பிரதேசத்தில், உதவி ஆசிரியர்களுக்கான, 69 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப, உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. 

இங்கு, கடந்த ஆண்டு ஜனவரி மாதம், உதவி ஆசிரியர்களுக்கான, 69 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப, தேர்வு நடைபெற்றது. அந்த தேர்வு முடிவுகள், கடந்த மே மாதம் வெளியாகின.

 தள்ளுபடிஅந்த தேர்வில், பொதுப் பிரிவினருக்கு, 65 சதவீதமும்; ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு, 60 சதவீதமும், தகுதி மதிப்பெண்ணாக நிர்ணயிக்கப்பட்டது.

கடந்த, 2018ல், இந்த மதிப்பெண்கள், 40 மற்றும், 45 சதவீதமாக இருந்த நிலையில், அதை உயர்த்தி, மாநில அரசு வெளியிட்ட உத்தரவுக்கு எதிர்ப்புகள் கிளம்பின.

இதை எதிர்த்து 'உ.பி., பிராத்மிக் சிக்ஷா மித்ரா சங்கம், தேர்வு எழுதியோர் என பலரும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுக்களை விசாரித்த நீதிபதி லலித் தலைமையிலான அமர்வு, உ.பி., மாநில அரசிடம் விளக்கம் பெற்றது.

தகுதி மதிப்பெண்

இந்நிலையில்மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உச்ச நீதிமன்றம், அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. 

அப்போது உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுஉள்ளதாவது:

தகுதி மதிப்பெண் தொடர்பாக, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

கடந்த மே மாதம் வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளை வைத்து, உதவி ஆசிரியர்களுக்கான, 69 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்பலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்கள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு :

சமூக வலைத்தளத்திற்கு செல்லும் குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும் எப்படி வழி நடத்த வேண்டும். மாணவர்கள் சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது பற்றி சிறிது சிந்திப்போம்...

மாணவர்கள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு
இளைய சமுதாயம் சமூக வலைத்தளங்களில் மூழ்கி கிடக்கிறது. மாணவர்களும் சமூகவலைத்தளங்களில் பொழுதை வீணடிப்பதாக பெற்றோர் நம்புகிறார்கள். பிள்ளைகளை கட்டுப்படுத்துவதும், பின்தொடர்வதும் பெற்றோரின் வாடிக்கையாக இருக்கிறது. இருந்தாலும் மாணவர்கள் சமூக வலைத்தளத்தில் நேரம் செலவழிப்பதை விரும்புகிறார்கள், நேரடியாகவும், ரகசியமாகவும் அதில் நேரத்தை செலவிடுகிறார்கள்.

தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கும் கனவு நனவானதால், அரசு பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், ஆனந்தக் கண்ணீர் :

தமிழகத்தின் முதன்மையான மருத்துவக் கல்லுாரிகளில் படிக்கும் கனவு நனவானதால், அரசு பள்ளி மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

நேற்று துவங்கிய, முதல் நாள் கவுன்சிலிங்கில், விரும்பிய கல்லுாரிகளை தேர்வு செய்து, மாணவர்கள் மகிழ்ச்சியில் திளைத்தனர். அதற்கு காரணமான, முதல்வர் இ.பி.எஸ்.,சுக்கு நன்றி தெரிவித்தனர். 'பல தடைகளை கடந்து, இந்த உள் ஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்திருப்பதாலும், அதன் வாயிலாக, ஏழை மாணவர்களின் மருத்துவ கனவு நனவாகி இருப்பதாலும், இது மறக்க முடியாத நாள்' 

இந்த கல்வியாண்டு முதல், மருத்துவ படிப்பில், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் சேருவதற்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க, அரசால் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது.அதன்படி, கவுன்சிலிங் துவக்கமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நேற்று துவங்கியது; நாளை முடிகிறது.இதில், அரசு ஒதுக்கீட்டில் உள்ள, 313எம்.பி.பி.எஸ்., இடங்கள்; 92 பி.டி.எஸ்., இடங்கள்என, 405 இடங்கள், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.முதல் நாளான நேற்று, அரசு பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அடிப்படையில், அறிவிக்கப்பட்ட தர வரிசையின்படி, 267 மாணவர்கள் அழைக்கப்பட்டு இருந்தனர். இதற்கான மாணவர் சேர்க்கையை, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் துவக்கி வைத்தார்.

இவர்களில், அர்ச்சனா என்ற மாணவிக்கு, அவரே வெள்ளை நிற அங்கியையும், ஸ்டெதஸ்கோப்பையும் கையில் கொடுத்து அணிய செய்தார். அப்போது, ஆனந்த கண்ணீர் வடித்த மாணவர்களும், பெற்றோரும், முதல்வர்இ.பி.எஸ்., காலில் விழுந்து, நன்றி தெரிவித்தனர்.தொடர்ந்து, கவுன்சிலிங்கில் பங்கேற்று இடங்களை உறுதி செய்த, அரசு பள்ளி மாணவர்களுடன், முதல்வர் புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, மாணவர்கள், '7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி' என்ற, வாசகங்கள் எழுதப்பட்ட பலுான்களை பறக்க விட்டனர்.

இந்நிகழ்ச்சியில், முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது:இந்த நாள், என் வாழ்க்கையில் மகிழ்ச்சிகரமான, மறக்க முடியாத நாள். தமிழக வரலாற்றில், ஒரு பொன்னான நாள். அரசு பள்ளி மாணவர்களின் வாழ்வில், திருப்புமுனையை ஏற்படுத்திய நன்னாள். 


அரசு பள்ளியில் படித்தேன் என்ற முறையில், எனக்கு மிகுந்த மனநிறைவை ஏற்படுத்திய திருநாள்.இது, ஒவ்வொரு ஆண்டும் தொடரும் என்பதில் எனக்கு மட்டுமல்ல; அனைவருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய நாள்.இந்த அரசு, 'நீட்' தேர்வை தொடர்ந்து எதிர்த்து வருகிறது.


தமிழகத்தில், பிளஸ் 2 படிப்பவர்களில், 41 சதவீத மாணவர்கள், அரசு பள்ளிகளில் படிப்பவர்கள். கடந்தாண்டில், ஆறு மாணவர்கள் மட்டுமே, மருத்துவ படிப்பில் தேர்வாகினர். இந்நிலையை மாற்ற, நான் உறுதியாக இருந்தேன்.அரசு பள்ளி மாணவர்களின், மருத்துவ கனவு லட்சியத்தை நிறைவேற்ற முடிவு செய்து, பல தடைகளை தாண்டி, சட்டத்தை கொண்டு வந்து, ஏழை, எளிய மாணவர்களின் கனவு நனவாக்கப்பட்டுள்ளது. 



இதுவரை, உங்களது குடும்பம், எவ்வாறாக அடையாளம் காணப்பட்டிருந்தாலும், இனிமேல், 'மருத்துவர் குடும்பம்' என்றே, அடையாளம் காணப்படும்.

மேலும், இம்மாணவர்களின் ஏழ்மை நிலைமை கருதி, அவர்களுக்கு கல்வி கட்டணம் மற்றும் இதர செலவினங்களால் சுமை ஏதும் ஏற்படாதவாறு, ‛போஸ்ட் மெட்ரிக்' கல்வி உதவி தொகை மற்றும் இதர உதவி தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வாயிலாக இடம் கிடைப்பதற்கு, எதிர்க்கட்சியும் குரல் கொடுக்கவில்லை; மக்களும் கருத்து தெரிவிக்கவில்லை. அரசு பள்ளிகளில் படிக்கும், 41 சதவீதம் மாணவர்களில், ஆறு பேர் தான் மருத்துவ படிப்பில் இடம் பெற்றனர் என்பதால், அரசு பள்ளி மாணவர்கள் புறக்கணிக்கப்படும் சூழல் என்ற அடிப்படையில், இந்த சட்டத்தை கொண்டு வந்தோம்.

ஏழைகளுக்கும், மருத்துவ கல்வி கிடைக்கக்கூடிய வசதியை, இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும். அவர்களுக்கு தேவையான உதவியை தொடர்ந்து செய்யும். கிராமம் முதல் நகரம் வரை, ஏழைகள் நிறைந்த பகுதியில், நல்ல தரமான மருத்துவ சிகிச்சை செய்ய, இப்படிப்பட்ட மாணவர்களை, அரசு ஊக்குவிக்கும். ஏழ்மையை உணர்ந்தவர்கள் என்பதால், அர்ப்பணிப்புடன், கிராமப்புறங்களிலும் மருத்துவ சேவையை, இம்மாணவர்கள் செய்வர்.இவ்வாறு, முதல்வர் பேசினார்.நிகழ்ச்சியில், அமைச்சர்கள் ஜெயகுமார், விஜயபாஸ்கர், தலைமை செயலர் சண்முகம், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பீஸ்' கட்டலையா? ஆன்லைன்' வகுப்பு ரத்து! அரசு பள்ளிஆசிரியர்கள் சொல்வது என்ன ?

கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களின், 'ஆன்லைன்' வகுப்புகளை, தனியார் பள்ளிகள் ரத்து செய்வதாக புகார் எழுந்துள்ளது.






ஊரடங்கில் உலகம் முடங்கிக்கிடந்த போதும், சமூக இடைவெளியுடன் மாணவர்களுக்குக் கல்விப் பணிகளிலும் மக்களுக்கு விழிப்புணர்வு சேவைகளிலும் ஈடுபட்டுவரும் சில ஆசிரியர்களின் அனுபவங்கள்

திலீப், ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியர்,

சத்தியமங்கலம், விழுப்புரம் மாவட்டம்

எங்கள் பள்ளியில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர்கள் பொதுத்தேர்வுக்குத் தயாராவதற்காக, ஒவ்வொரு வினாவிற்கான பயிற்சியை வீடியோக்களாக எடுத்து யூடியூப்பில் பதிவேற்றம் செய்துவருகிறேன். அந்த லிங்க்கை மாணவர்களுக்கு அனுப்பிவிடுவேன். இது மாணவர்கள் தடையின்றி கற்பதற்கு உதவியாக அமைந்துள்ளது.

வகுப்பறைகளில் ஆசிரியர்கள் கணினியைப் பயன்படுத்துவதற்கான பயிற்சியை NCERT நடத்திவருகிறது. அதில் கருத்தாளராகப் பங்கேற்று இந்தியா முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கியுள்ளேன். தமிழகத்தின் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் இணையவழியில் கற்பிக்கும் பயிற்சிகளை அளித்துள்ளேன். வகுப்பறைக்குத் தேவையான காணொலிகளைத் தயாரித்தல், கைப்பேசியைப் பயன்படுத்தி திறம்பட கற்பித்தல், தனித்திறனை மேம்படுத்துதல் போன்றவற்றில் ஆசிரியர்கள் பயிற்சிகள் பெற்றார்கள்.

அடுத்த ஆண்டு வகுப்பிற்குத் தேவையான வரைபடங்களை கணினியில் தயாரித்துள்ளேன். படங்களின் வழியாக மாணவர்களுக்குப் பாடம் நடத்தும்போது எளிதாகப் புரியும். இருபது ஆங்கில ஆசிரியர்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவை ஏற்படுத்தியுள்ளோம். அதன்மூலம் இந்தியா முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்கள் என 1150க்கும் அதிகமான பங்கேற்பாளர்களுக்கு ஆங்கில மொழிப்பயிற்சி அளித்துவருகிறோம்.

ஆங்கில மொழிப்பயிற்சி தொடர்பான பாடங்களையும் தேர்வுகளையும் தயாரித்து https://spokenenglishtn.blogspot.com என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துவருகிறோம். அதில் ஆசிரியர்கள் படிப்பதற்கான பாடங்களைப் புரிந்துகொள்வதற்கான வீடியோ மற்றும் அவர்கள் பேசுவதற்கான செயல்பாடுகள் என அனைத்தையும் வைத்திருக்கிறோம். ஆன்லைனில் தொடர்ந்து பயிற்சி வழங்குவது மற்றும் பேசவும் வாய்ப்புகள் தருவதன் மூலம் ஆசிரியர்களின் பேச்சுத்திறன் மேம்பட்டுவருவதை கண்கூடாகப் பார்க்கமுடிகிறது.

ஏ. அருண்குமார், பட்டதாரி ஆசிரியர்,

சிந்தகமானிபெண்டா, திருப்பத்தூர் மாவட்டம்

நான் ஒரு மலைக்கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றிவருகிறேன். கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடங்கி பொதுமக்கள் வரையில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணிகளில் ஈடுபட்டேன். மாவட்ட ஆட்சியர் சிவன்அருள் வழிகாட்டுதலின்படி, வாட்ஸ்ஆப் செயலியின் மூலம் கொரோனா விழிப்புணர்வு வாசகங்கள், சிறிய வீடியோ பதிவுகள், ஜிஐபி படங்கள் மூலம் தினந்தோறும் விழிப்புணர்வை ஏற்படுத்தினேன்.

பொதுமக்களிடம் நேரடியாகத் தொடர்புகொண்டு தெளிவை ஏற்படுத்த, காலை நேரங்களில் உழவர் சந்தையில் தன்னார்வலராகப் பணியாற்றினேன். அங்கு வரும் மக்களிடம் முகக்கவசம் அணிவதன் அவசியம், சமூக தனிநபர் இடைவெளியின் அவசியம் குறித்தும் விளக்கும் பணிகளில் ஈடுபட்டுவருவதுடன் ஒவ்வொரு நாளும் இருபதுக்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கினேன்.

அனைவருக்கும் பயன்படும் கொரோனா சார்ந்த வினாடி வினா செயலியினை உருவாக்கினேன். அதன் வழியாக, தற்போது 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் விழிப்புணர்வு பெற்றுள்ளனர். வாணியம்பாடி ரோட்டரி சங்கத்துடன் இணைந்து மருத்துவமனைகளில் தன்னார்வப் பணியும் தொடர்கிறது. நியாயவிலைக் கடைகளில் சமூக இடைவெளி பற்றிய சேவையில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பணியாற்றி வருவதில் மனம் நெகிழ்கிறது.

ஜி. ஆனந்தகண்ணன், எம். விஜயகுமார்,

பட்டதாரி ஆசிரியர்கள், கள்ளக்குறிச்சி

தமிழகம் முழுவதும் ஊரடங்கு நேரத்தில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயனுள்ள வகையில் ZOOM ஆப்ஸ் மூலமாக பயிற்சிகளை வழங்கிவருகிறோம். அதாவது தினமும் 100 ஆசிரியர்களுக்கு நவீன தொழில்நுட்பம் வழியாக கற்றல் – கற்பித்தலை எவ்வாறு வகுப்பறையில் மேற்கொள்வது பற்றிய ஆன்லைன் ஐசிடி (இன்ஃபர்மேஷன் அண்ட் கம்யூனிக்கேஷன் டெக்னாலஜி) வகுப்புகளை நடத்திவருகிறோம். ஏப்ரல் முதல் தேதியன்று தொடங்கி, இன்றுவரை 18 வகுப்புகள் நடத்தியதன் மூலம் 1794 ஆசிரியர்கள் பயன்பெற்றுள்ளனர்.

பயிற்சிக்காக கூகுள் ஃபார்ம் மூலம் பதிவு செய்த ஆசிரியர்கள், பேஸிக், இன்டர்மீடியட், அட்வான்ஸ்டு என பிரிக்கப்பட்டு, தொழில்நுட்பம்வழி கற்பித்தலில் அவர்கள் எந்த நிலை என கண்டறிந்து கற்பிக்கபடுகிறது. தினம் ஒரு கல்வி மென்பொருள் மற்றும் ஆன்ட்ராய்டு அப்ளிக்கேஷன் என பல தலைப்புகளில் கற்பிக்கப்பட்டு, தினந்தோறும் ஆசிரியர்கள் தெரிந்துகொண்டதை ஆர்வமுடன் புராஜெக்ட் செய்து ஒப்படைக்கிறார்கள்.

இந்தப் பயிற்சியில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் அனைவருமே நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, மாணவர்களுக்குக் கற்பிக்கும் அளவுக்கு தெரிந்துகொண்டோம் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்கள். ஒவ்வொரு ஆன்லைன் பயிற்சி முடியும்போதும், ஆசிரியர்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டு ஆட்டோமேட்டிக் சர்டிபிகேட் ஜெனரேஷன் மற்றும் மேனுவல் சர்டிபிகேட் ஜெனரேஷன் என நவீன தொழில்நுட்பம் மூலம் ஆன்லைன் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

மா.லோகநாதன்,

இடைநிலை ஆசிரியர், ஈரோடு மாவட்டம்

கொரோனா தொற்றால் முதன்முதலில் பாதிக்கப்பட்டது எங்கள் ஈரோடு மாவட்டம். எனக்கு சமூகப் பணிகளில் ஈடுபடுவது மிகவும் பிடிக்கும். அதனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் தன்னார்வலராகப் பணியாற்ற முன்வந்தேன். ஈரோடு மாநகராட்சி மூலம் கமலா நகர் பிரதான சாலைப் பகுதியில் குடியிருக்கும் மக்களை கொரோனா பாதிக்காத வண்ணம் விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஏப்ரல் முதல் இன்று வரை தொடர்ந்து செய்துவருகிறேன்.



வாட்ஸ் ஆப் குழு அமைத்து மக்களின் உடல்நலன் சார்ந்த கண்காணிப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தேவைகளை அறிந்து, என்னால் இயன்றவரை பூர்த்திசெய்துவந்தேன். தினமும் மக்கள் எவருக்காவது இருமல், தொடர் சளி, மூச்சு விடுவதில் பிரச்சினை, ரத்த அழுத்தம் இருக்கிறதா, கர்ப்பிணிகள் இருக்கிறார்களா என்று விவரங்களைச் சேகரித்தேன். அத்துடன் செல்போன் எண் பெற்று வாட்ஸ் ஆப் மூலம் அடிப்படை மருத்துவத் தகவல்களை அனுப்பிவருகிறோம். நேரடியாகவும் தகவல்களை மக்களிடம் சேர்த்துவருகிறேன். கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு முறையான விளக்கமும் அளிக்கப்படுகிறது.

எங்கள் வாட்ஸ்ஆப் குழுவில் சுகாதார நிலைய அதிகாரிகள், செவிலியர், மருத்துவர்களை இணைத்துள்ளேன். மக்களின் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளை உடனுக்குடன் கண்டறிந்து, உரிய பரிசோதனையை செய்து, மருத்துவர்கள் மூலம் மருந்துகளையும் வழங்குகிறோம். என்னைப் போன்ற பலரின் தன்னார்வத் தொண்டுகளால், ஈரோடு மாவட்டம் ஆரஞ்சு வண்ணத்தில் இருந்து பச்சைக்கு மாறியது உற்சாகம் அளிக்கிறது.

ச. மாலதி,

அரசு பட்டதாரி ஆசிரியை, வீரகேரளம்புதூர், தென்காசி மாவட்டம்

ஊரடங்கு நாட்களில் ஆசிரியர்களாகிய நாங்கள் கற்றுக்கொண்டும் கற்பித்துக் கொண்டும் வருகிறோம். அடுத்த கல்வியாண்டில் மாணவர்களுக்குக் கற்பிக்கவேண்டிய பாடங்களைத் தயாரித்துவருகிறோம். பல்வேறு பாடங்களை சிறந்த முறையில் கற்பிப்பதற்கு வசதியாக காணொலிக் காட்சி, பவர் பாயிண்ட் போன்றவற்றை தயாரிப்பது, தீக்சா மற்றும் இதர செயலிகளில் இருந்து பதிவிறக்கம் செய்வது எப்படி உள்ளிட்ட பல பயிற்சிகளை ஆசிரியர்களுக்கு வழங்கிவருகிறோம்.

வினாக்களைத் தயாரிப்பது, அவற்றை ஆன்லைனில் பயன்பாட்டுக்குக் கொண்டுவருவது, தேர்வுகள் நடத்துவது தொடர்பாக கல்வியாளர்களும், அனுபவமிக்க ஆசிரியர்களும் பயிற்சி அளிக்கிறார்கள். பள்ளி ஆசிரியர்களும் ஆர்வமாக கலந்துகொண்டு பயன்பெறுகிறார்கள். எங்கள் பள்ளி மாணவர்களுக்கு தினமும் ஒரு பாடத்தை தீக்சா ஆப்ஸ் மூலம் கற்றுக்கொடுத்து வருகிறேன். இன்றைய நிலையில் ஆன்லைன்வழி கல்வி என்பது கிராமம், நகரம் என்ற எல்லைகளைக் கடந்து அனைத்து மாணவர்களுக்கும் மிகச்சிறந்த தோழனாக இருக்கிறது.

-சுந்தரபுத்தன்

ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள்: 460 கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு மாத ஊதியம்: ரூ.pay level 15700+ to 50,000+ /- உடனே விண்ணப்பிக்க கிளிக் செய்யவும்:

 File:Aavin dairy logo.svg

The Tamil Nadu Cooperative Milk Producers’ Federation Limited invites online applications from the qualified and eligible persons for appointment to the post of Senior Factory Assistant on regular basis.

                                                                        CLICK TO LINK APPLY --BLOW 


A. Name of the post and Vacancies:

1. Senior Factory Assistant (Dairying): 170

2. Senior Factory Assistant (Lab): 20

3. Senior Factory Assistant (Animal Husbandry): 70

4. Senior Factory Assistant (Admn.): 70

5. Senior Factory Assistant (Marketing): 60

6. Senior Factory Assistant (Engg.): 70


B. Place of work: Federation jurisdictions i.e. Chennai, Erode, Nilgiris, Tiruvannamalai, Salem & Thanjavur


C. Revised Level of pay: Rs.15700-50000 [Pay Matrix Level (1)]



CLICK HERE TO APPLY

தமிழக விமானப்படை நிலையத்தில் வேலை 2020 :

 

தமிழக விமானப்படை நிலையத்தில் வேலை 2020

22.11.2020 அன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்

APPLICATION FORM FOR EMPLOYMENT IN ECHS

Official Notification PDF

Application Form 

SBI PO வேலைவாய்ப்பு 2020 – 2000 காலிப்பணியிடங்கள் :

 പ്രമാണം:SBI New Logo.jpg

 நாடு முழுவதும் உள்ள 2000 Probationary Officers (POs) காலியிடங்களை நிரப்ப ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதிவாய்ந்த இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் 14.11.2020 முதல் 04.12.2020 வரை வரவேற்கப்படுகின்றன.

State Bank of India Central Recruitment & Promotion Department Corporate Centre, Mumbai Phone: 022-22820427

RECRUITMENT OF PROBATIONARY OFFICERS ADVERTISEMENT NO: CRPD/ PO/ 2020-21/ 12 ONLINE REGISTRATION OF APPLICATION & PAYMENT OF FEES: FROM 14.11.2020 TO 04.12.2020

 Applications are invited from eligible Indian Citizens for appointment as Probationary Officers (POs) in State Bank of India. The selected candidates may be posted anywhere in India. 

Official Notification PDF

WIPRO பல துறைகளில் சிறப்பான வேலைவாய்ப்பு அறிவிப்பு 2020 :

 

DEdwards EnterpriseOne - Technical-Project Manager

Req ID: 2537674

LocationChennai, IN

Posted11/17/2020

Apply Now

Microsoft Dynamics AX-Developer

Req ID: 2521028

LocationChennai, IN

Posted11/16/2020

Apply Now

 

BigFix Patch Management-Administrator

Req ID: 2549487

LocationChennai, IN

Posted11/16/2020

Apply Now


Lead Analyst

Req ID: 2549005

LocationChennai, IN

Posted11/16/2020

Apply Now

Sr Analyst

Req ID: 2544360

LocationChennai, IN

Posted11/16/2020

Apply Now


Network Architecting-Architect

Req ID: 2549526

LocationChennai, IN

Posted11/16/2020

Apply Now


SWIFT message processing-Business Analyst

Req ID: 2545025

LocationChennai, IN

Posted11/12/2020

Apply Now

 


Privilege Password Management - PPM - CyberArk-Lead Administrator

Req ID: 2541565

LocationChennai, IN

Posted11/12/2020

Apply Now

Network Voice Admin-Consultant

Req ID: 2537640

LocationChennai, IN

Posted11/12/2020

Apply Now

ITIL Capacity Management-Project Manager

Req ID: 2549057

LocationChennai, IN

Posted11/12/2020

Apply Now

SWIFT MESSAGE PROCESSING-BUSINESS ANALYST, 

PRIVILEGE PASSWORD MANAGEMENT – PPM – CYBERARK-LEAD ADMINISTRATOR, 

NETWORK VOICE ADMIN-CONSULTANT,

 IIL CAPACITY MANAGEMENT-PROJECT MANAGER, 

VAPT –VULNERABILITY ASSESSMENT AND PENETRATION TESTING-TEST ENGINEER,

MONGODB ADMIN-LEAD & OTHER 

பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை!

 பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை!

பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசில் வேலை! நிர்வாகம் : இந்திய தொழில்நுட்பக் கழகம், தில்லி மேலாண்மை : மத்திய அரசு மொத்த காலிப் பணியிடம் : 01 பணி : திட்ட உதவியாளர் கல்வித் தகுதி : பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.50,000 மாதம் இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும். நேரடியாக விண்ணப்பப் படிவம் பெற : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக http://ird.iitd.ac.in/ என்ற இணையதளம் மூலம் 26.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு முறை : குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 26.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://ird.iitd.ac.in/rec அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


குருப்பெயர்ச்சி பலன்கள்: 15-11-2020 முதல் 13-11-2021 வரை - குரு பார்க்கக் கோடி நன்மை :

 குருப்பெயர்ச்சி பலன்கள்: 15-11-2020 முதல் 13-11-2021 வரை - குரு பார்க்கக் கோடி நன்மை

அனைவராலும் எதிர்பார்க்கப்படும் கிரகப்பெயர்ச்சிகளில், குருப்பெயர்ச்சி மிக முக்கியமான ஒன்றாகும். ‘நவக்கிரகங்களில் சுப கிரகம்’ என்று வர்ணிக்கப்படுபவர் குரு பக வான். அந்த குருவருள் இருந்தால் தான் நமக்குத் திருவருள் கிடைக்கும். அந்த குரு பகவான், சுபஸ்ரீ சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30-ந் தேதி (15.11.2020) ஞாயிற்றுக்கிழமை இரவு 9.36 மணிக்கு உத்ராடம் நட்சத்திரம் 2-ம் பாதத்தில் மகர ராசிக்கு பெயர்ச்சியாகி செல்கிறார்.

மகர ராசி குரு பகவானுக்கு நீச்ச வீடாகும். இருப்பினும் அவரது பார்வை பலத்தால் மக்களுக்கு நற்பலன்களை வழங்குவார். ‘குருவின் பார்வை பட்ட இடமெல்லாம் தோஷம் நீங்கும்’ என்பதால்தான் ‘குரு பார்க்கக் கோடி நன்மை’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். எல்லாவிதமான தோஷங்களையும் நீக்கும் சக்தி குருவின் பார்வைக்கு உண்டு.

‘தனகாரகன்’ என்றும், ‘புத்திரகாரகன்’ என்றும் குருவைச் சொல்வார்கள். ஒருவருக்கு புத்திர பாக்கியம் கிடைத்து திருப்தியான வாழ்க்கை வாழ வேண்டுமானாலும், செல்வச் செழிப்பு மிக்கவராக விளங்க வேண்டுமானாலும் குரு வின் அருள்தான் வேண்டும். அதுமட்டுமல்ல திருமணம் கைகூட வேண்டுமானாலும் குரு பகவான் பச்சைக்கொடி காட்ட வேண்டும். ஒருவரது ஜாதகத்தில் சாதகமான இடத்தில் குரு பகவான் அமர்ந்தால், அவர் செல்வாக்கு பெற்றவராகவும், சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தவராகவும், வாழ்க்கையில் மகிழ்ச்சியை அனுபவிப்பவராகவும் விளங்குவார்.

இப்பொழுது மகரத்தில் வந்திருக்கும் குரு பகவான் நீச்சம் பெறுகின்றார். அதே நேரத்தில் குருவும், சனியும் பரிவர்த்தனை யோகம் பெற்றுச் சஞ்சரிக்கின்றார்கள்.

டிசம்பர் 26-ந் தேதி சனி பகவான் பெயர்ச்சியாகி மகரத்திற்குச் சென்ற பிறகு, நீச்சம் பெற்ற வியாழனோடு இணைவதால் ‘நீச்ச பங்க ராஜயோகம்’ உருவாகின்றது.

இந்தக் குருப்பெயர்ச்சிக் காலத்தில் 5.4.2021 முதல் 13.9.2021 வரை அவிட்டம் மற்றும் சதயம் நட்சத்திரக்காலில் அதிசாரமாக கும்ப ராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார். மீண்டும் மகர ராசிக்கு மாறுதலாகி வந்து 13.11.2021 வரை சஞ்சரிக்கின்றார். இதற்கிடையில் 16.6.2021 முதல் 13.10.2021 வரை குரு வக்ர இயக்கத்திலும் இருக்கின்றார். எனவே அந்தந்த காலங்களுக்கு ஏற்பவும், உங்கள் சுய ஜாதகத்தில் குரு இருக்குமிடம், பார்க்குமிடம் மற்றும் திசா, புத்தி அடிப்படையிலும் பலன்கள் உங்களுக்கு கிடைக்கும்.

பொதுவாக இந்தப் பெயர்ச்சியில் குருவின் பார்வை பெறும் மூன்று ராசிகள்: ரிஷபம், கடகம், கன்னி

குரு பார்வை தன ஸ்தானத்தில் பதியும் ராசி: மேஷம்

குரு பார்வை லாப ஸ்தானத்தில் பதியும் ராசி: விருச்சிகம்

குரு பார்வை தொழில் ஸ்தானத்தில் பதியும் ராசி: தனுசு

மேற்கண்ட ராசிகள் அனைத்திற்கும் தொட்டது துலங்கும், தொழில் வளம் சிறக்கும், தொகை வரவும் திருப்தி தரும்.

குருப்பெயர்ச்சி நாளில் இல்லத்து பூஜையறையில் ‘வானவர்க்கு அரசனான வளம்தரும் குருவே’ என்ற குரு கவசப் பாடலைப் பாடுவதோடு, குரு பகவான் படத்திற்கு மஞ்சள் வண்ண வஸ்திரம் சாற்றி, முல்லைப்பூ மாலை அணிவித்து இனிப்புப் பொருள் நைவேத்தியம் வைத்து வழிபடுவது நல்லது.

மகரத்திற்கு ஜென்ம குருவாகவும், மிதுனத்திற்கு அஷ்டமத்து குருவாகவும், துலாத்திற்கு அர்த்தாஷ்டம குருவாகவும், கும்பத்திற்கு விரய குருவாகவும், சிம்மத்திற்கு ரோக ஸ்தான குருவாகவும் இந்த குருப்பெயர்ச்சி அமைகிறது. எனவே மேற்கண்ட ராசியில் பிறந்தவர்கள் தங்கள் சுயஜாதக அடிப்படையில், பாக்கிய ஸ்தானத்திலுள்ள கிரகத்தின் பலமறிந்து அதற்குரிய ஆலயங் களைத் தேர்ந்தெடுத்து யோகபலம் பெற்றநாளில் பொருத்தமான வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.

வழிபாட்டின் மூலம் வருமானப் பற்றாக்குறை அகலும். திருமணம், புத்திரப்பேறு, தொழில் முன்னேற்றம், வீடு கட்டும் யோகம், பொதுவாழ்வில் புகழ், இழந்த பதவியைப் பெறுதல், குடும்பத்தில் மகிழ்ச்சி போன்ற அனைத்தையும் வரவழைத்துக்கொள்ள இயலும். குருவருள் இருந் தால் சாதாரணமானவர்கள் கூட சக்கரவர்த்தியாக மாறமுடியும். - சுபம்.