Skip to content

டிப்ளமோ தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் மத்திய SAI துறையில் பணியாற்றாம் வாங்க!

மத்திய அரசிற்கு உட்பட்ட இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SAI) காலியாக உள்ள Young Professional பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 09 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Young Professional

மொத்த காலிப் பணியிடங்கள் : 09

கல்வித் தகுதி : அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பி.டெக், டிப்ளமோ, எம்.பிஏ, சட்டம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் 1 முதல் இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.40,000 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://sportsauthorityofindia.nic.in/ என்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து rckolkata-sai@nic.in என்னும் மின்னஞ்சர் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 30.04.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://sportsauthorityofindia.nic.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

ரூ.2 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! அழைக்கும் MCL நிறுவனம்!

 

மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான மகாநதி கோல் இந்தியா (MCL) நிறுவனத்தில் காலியாக உள்ள மூத்த மருத்துவ அதிகாரி மற்றும் மூத்த சிறப்பு மருத்துவ அதிகாரி பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 70 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.2 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மகாநதி கோல் இந்தியா நிறுவனம் (MCL)

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 70

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:

  • Sr. Medical Specialist - 40
  • Sr.Medical Officer - 28
  • Sr.Medical Officer (Dental) - 02

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், டிஎன்பி போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 முதல் 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.60,000 முதல் ரூ.2,00,000 வரையில் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.mahanadicoal.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து mcl.doctor.2021@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரிக்குக் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mahanadicoal.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

மாதம் ரூ.40,000 சம்பளத்தில்.. இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க..!!!

இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: young professional
சம்பளம்: ரூ.40,000
வயது: 35 வயதிற்குள்
விண்ணப்பிக்க கடைசித் தேதி: ஏப்ரல் 30

இதில் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் -Apply Click Here

அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து r [email protected] என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

Degree முடித்தவர்களுக்கு.. மாதம் ரூ.2,10,000 சம்பளத்தில்.. மத்திய அரசு வேலை..!!!!

தேசிய தொழில்நுட்ப அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Director பணிக்கு 8 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: Degree / Ph.D

சம்பளம்: மாதம் ரூ. 2,10,000

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு / நேர்காணல்

விண்ணப்பிக்க கடைசி தேதி: மே 20

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://nitcouncil.org.in/index.php/site/console

டிகிரி முடித்தவர்களுக்கு.. சென்னை IMSc நிறுவனத்தில் வேலை. மிஸ் பண்ணிடாதீங்க..!!

 

ணித அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Upper Division Clerk

காலி பணியிடங்கள் - 2

விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.04.2021

கல்வித் தகுதி: டிகிரி

வயது வரம்பு: 32 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேரடி நேர்காணல்.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://www.imsc.res.in/other_positions

பி.இ / பி.டெக் முடித்தவர்களுக்கு. மாதம் ரூ.2,80,000 சம்பளத்தில். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் வேலை.!!

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் (IOCL) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Director (Pipelines)

விண்ணப்பிக்க கடைசி தேதி - 17.05.2021

கல்வித் தகுதி: பி.இ / பி.டெக்

சம்பளம்: மாதம் ரூ.11,500/- முதல் ரூ.2,80,000/- வரை வழங்கப்படுகிறது

தேர்வு முறை: தேர்வு அல்லது நேர்காணல்

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும்
https://iocl.com/PeopleCareers/job.aspx

12 ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை மாதம் ரூ 69,100 வரை சம்பளம்.!

 

இந்திய கடற்படையில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு செய்தியை வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் இளைஞர்களுக்கான கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இந்திய கடற்படை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அணுப்பலாம்.

மொத்த காலி பணியிடங்கள்: 2500

மாத ஊதியம்: ருபாய் 21,700 முதல் Rs.69,100

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு: 01 பிப்ரவரி 2001 முதல் 31 ஜூலை 2004 இதற்க்குள் பிறந்து இருக்க வேண்டும்

விண்ணப்பக் கட்டணம்: 60 ருபாய்

தேர்வு முறை: கணினி வழி தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 30 ஏப்ரல் 2021

வேலைக்காண அறிவிப்பு: 26 ஏப்ரல் 2021

மேலும் விவரங்களுக்கு https://www.joinindiannavy.gov.in/en

டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் இதுவே முதல்முறை... அதிரடி அறிவிப்பு..!!!

 

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலமாக அரசு பணியில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களை தேர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வு லட்சக்கணக்கானவர்களுக்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி வரலாற்றில் முதல் முறையாக தேர்வு எழுதியவர்கள் தங்களது விடைத்தாள் நகலை இணையதளம் மூலம் பெறும் வசதியை டிஎன்பிஎஸ்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் முதற்கட்டமாக கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற குரூப்-1 பதவிக்கான முதல்நிலை தேர்வு விடைத்தாள்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இது விண்ணப்பதாரர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Diplomo,Degree முடித்தவர்களுக்கு மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு கடைசி தேதி 27.04.2021 சம்பளம் 25000.

மத்திய செம்மறி மற்றும் கம்பளி ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Young Professional

காலி பணியிடம் - 1

விண்ணப்பிக்க கடைசி தேதி - 27.04.2021

கல்வித் தகுதி: Diploma / Degree

வயது வரம்பு : 45 வயதிற்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்

தேர்வு முறை: WRITTEN TEST - CUM - WALK-IN INTERVIEW

சம்பளம்: மாதம் ரூ.25,000/- வரை வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://www.cswri.res.in/upload/927155735-yp1.pdf

நீங்கள் DEGREE முடித்தவரா ? உங்களுக்கு மத்திய அரசில் ஒரு அருமையான வேலை காத்திருக்கிறது. வேலையின் பெயர் :Young Professional, Consultant & Sr. Consultantமாதம் சம்பளம் ரூ.50,000/- முதல் ரூ.1,25,000/- வரை வாங்க விண்ணப்பிக்கலாம். .

 

தேசிய கைத்தறி மேம்பாட்டுக் கழகம் (NHDC) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Young Professional, Consultant & Sr. Consultant

காலி பணியிடங்கள் - 12

விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.04.2021

கல்வித் தகுதி: Any Degree

வயது வரம்பு : 58 வயதிற்குட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.50,000/- முதல் ரூ.1,25,000/- வரை வழங்கப்படுகிறது.

தேர்வு முறை: Interview / Document Verification

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த லிங்கை அணுகவும் https://nhdc.org.in/ApplicationForm2.aspx

10th, Degree முடித்தவர்களுக்கு மாதம் ரூ.70 ஆயிரம் சம்பளத்தில்..NCDIR நிறுவனத்தில் வேலை..!!!!

நோய் தகவல் மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCDIR) வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Research Associate, Project Assistant, Medical Consultant, Project Multi Tasking Staff , Project Scientist D (Satistics), Consltant ஆகிய பணிகளுக்கு மொத்தம் 4 காலி பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 10th, M.D/M.S, DNB, Master Degree

சம்பளம்: ரூ.15,800 - ரூ.70000

தேர்வு முறை: Written Exam,Certification Verification,Direct Interview

வயது வரம்பு: 25 - 60

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 16

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்
https://ncdirindia.org/Common_Application/Online_Application.aspx

மத்திய தபால் துறையில் (Indian Post) உள்ள காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு :

 

மத்திய தபால் துறையில் (Indian Post) உள்ள காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு :

மத்திய தபால் துறையில் (Indian Post) உள்ள காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் : Indian Post (DEPARTMENT OF POST, INDIA)

பணியின் பெயர் :

Tyreman (Skilled Artisan) , Blacksmith (Skilled Artisan), Staff Car Driver

கல்வித்தகுதி : 10th

பணியிடம் : Madurai

தேர்வு முறை : Interview

மொத்த காலிப்பணியிடம் : 4

சம்பளம் : 19,900 – 63,200/-

கடைசி நாள் : 30.4.2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும்.

முழு விவரம் :https://tamilnadupost.nic.in/Documents/2021/Mar-2021/MMS-driver.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

RIMS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வெளிவரக்கூடிய வேலைவாய்ப்பு அறிவிப்பு :

 

RIMS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வெளிவரக்கூடிய வேலைவாய்ப்பு அறிவிப்பு :

RIMS-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வெளிவரக்கூடிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: staff nurse

காலிப்பணியிடங்கள்: 370

வயது: 50க்குள்

கல்வித்தகுதி: B.Sc. Nursing

விண்ணப்ப கட்டணம்: ரூ.600

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 30

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.rims.edu.in என்ற இணையதள பக்கத்தில் சென்று பார்க்கவும்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு:

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: நிர்வாக அதிகாரி, கணக்கு அதிகாரி

காலி பணியிடங்கள்: 24

கல்வித்தகுதி: இளநிலை, முதுநிலை எம்பிஏ, ACA, FCA, AICWA, FICWA

வயது: 35க்குள்

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 21

மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு www.isro.gov.in என்ற இணையத்தள பக்கத்தை சென்று பார்க்கவும்.

மத்திய ரயில்வே பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பிக்கவும்.

மத்திய ரயில்வே பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பிக்கவும்.

மத்திய ரயில்வே பல்வேறு காலியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பிக்கவும்.

நிறுவனம்: Central Railway

மொத்த காலிப்பணியிடங்கள்: 18

Physician: 4

Anesthetist/Intensivists: 4

Chest Physician: 2

GDMO: 8

கல்வி தகுதி: MBBS தேர்ச்சி

வயது வரம்பு: 53 வயது வரை

மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

மாத ஊதியம்:

Physician: ரூ.95000 /-

Anesthetist/Intensivists: ரூ.95000 /-

Chest Physician: ரூ.95000 /-

GDMO: ரூ.75000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து ஏப்ரல் 15 அன்று கீழ்காணும் முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Bharatratna Dr.Babasaheb Ambedkar Memorial Hospital, Central Railway, Byculla, mumbai 400027

மேலும் கூடுதல் தகவலுக்குhttps://cr.indianrailways.gov.in/cris/uploads/files/1617786678372-Engagement%20of%20CMP%20on%20full%20time%20contract%20basis.pdf என்ற லிங்க்கில் சென்று பார்க்கவும்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலை வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது:

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலை வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் வேலை வாய்ப்பு இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: computer operator

காலி பணியிடங்கள்: 15

கல்வித்தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு முறை: நேர்காணல்

சம்பளம்: ரூ.15,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 24

விண்ணப்ப கட்டனம் மற்றும் கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்

https://www.tnstc.in/home.html

Bharat Heavy Electricals Limited (BHEL) அதிகாரபூர்வ இணையதளத்தில் Supervisor Trainee in Finance காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு :

Bharat Heavy Electricals Limited (BHEL) அதிகாரபூர்வ இணையதளத்தில் Supervisor Trainee in Finance காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு :

Bharat Heavy Electricals Limited (BHEL) அதிகாரபூர்வ இணையதளத்தில் Supervisor Trainee in Finance காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக Any Degree கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (All Over India) கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியுடையோர் மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Exam) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்குஉடனே விண்ணப்பியுங்கள்.

நிறுவனம் : Bharat Heavy Electricals Limited (BHEL)

பணியின் பெயர் :Supervisor Trainee in Finance

கல்வித்தகுதி : Any Degree

பணியிடம் : All Over India

தேர்வு முறை : Exam

மொத்த காலிப்பணியிடம் : 40

கடைசி நாள் : 26/04/2021

இந்த வேலைக்கு தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்கவும். இந்த அறிவிப்பைபயன்படுத்தி கொள்ளுங்கள்.

முழு விவரம் :https://www.bhel.com/sites/default/files/BHEL%20English%20Ad%208cm%20x%208cm.pdfஎன்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளுங்கள்.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிட்டட் நிறுவனம் வேலைவாய்ப்பு இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: Staff Nurse

காலி பணியிடம் – 01

விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2021

கல்வித் தகுதி : நர்சிங்கில் டிப்ளோமா முடித்திருக்கவேண்டும்

தேர்வு முறை: எழுத்து தேர்வு

வயது வரம்பு: 28 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்கவேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.21,500 முதல் ரூ.80,000 வரை வழங்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களை தெரிந்துக் கொள்ள இந்த பிடிஎப் லிங்கை அணுகவும்.

https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=02-APPLICATION-FORM-STAFF-NURSE-25-03-2021.pdf

2021ஆம் ஆண்டு 'குரு அதிசார பெயர்ச்சி"... அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள் யார்? யார்?

 

சூரிய குடும்பத்தில் சூரியன் மற்றும் சந்திரனை தவிர மற்ற எல்லா கிரகங்களும் அதிசார வக்கிர நிலையால் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு இடம் பெயர்வது உண்டு. அதை தான் அதிசார கிரகப்பெயர்ச்சி என்கிறோம்.

அந்த வகையில் இவ்வாண்டு குருபகவான், பங்குனி மாதம் 24ஆம் தேதி அதாவது ஏப்ரல் 6ஆம் தேதி அன்று மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு அதிசார பெயர்ச்சியாகிறார்.

சுப கிரகமாக விளங்கும் குருவானவர் கொடுப்பதில் கொடை வள்ளல் ஆவார். குரு இருக்கும் ராசியை விட குரு பார்க்கும் ராசிக்கு ஜாக்பாட் தான் என்பது ஜோதிட விதி.

அந்த வகையில் இவ்வாண்டு நடைபெற இருக்கும் அதிசார குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும்? எந்த ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களும் உண்டாகும்? என்பதை தெரிந்து கொள்வோம்.

அதிசார பெயர்ச்சி ஆகும் குருபகவான் தன்னுடைய பார்வையின் மூலம் மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்கு யோக பலன்களை அள்ளிக் கொடுக்க போகிறார்.

பொதுவாக குருவின் பார்வை நம்முடைய ஜாதகத்தில் 5, 7, 9 ஆகிய நிலைகளில் இருக்கும் பொழுது நமக்கு அதிர்ஷ்டமான பலன்கள் உண்டாகும் என்பது ஜோதிட நியதி.

மிதுனம் :

மிதுன ராசிக்கு குரு 5ஆம் பார்வையாக இருப்பதால் நீண்ட நாள் தடைபட்ட சுபகாரியங்கள் அனைத்தும் தடையில்லாமல் நிறைவேறும். தொழில், உத்தியோகம் சார்ந்த பிரச்சனைகள்; நீங்கி நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

சிம்மம் :

சிம்ம ராசியில் குரு ஏழாம் பார்வையாக இருப்பதால் ராஜயோகம் பெறுவீர்கள். இதுவரை தோல்விகளை சந்தித்து வந்த நீங்கள் இனி வெற்றியை நோக்கி பயணிப்பீர்கள். உங்களுக்கு இதுவரை தொல்லை கொடுத்து வந்த ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளும் சீராகி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த எதிரிகள் தொல்லை நீங்கி போட்டி, பொறாமைகள் போன்ற தொந்தரவுகள் இன்றி எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தைக் காண்பீர்கள்.

துலாம் :

குருவின் பார்வை துலாம் ராசியில் ஒன்பதாம் இடத்தில் இருப்பதால் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைக்கும். உங்களை ஆட்டிப் படைத்த தீய எண்ணங்களிலிருந்து விடுபட்டு நற்பாதையை நோக்கி பயணிக்க இருக்கிறீர்கள்.

தனுசு மற்றும் மீனம் :

தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சிக்கு பிறகு சுப பலன்கள் உண்டு.

அசுப பலன் பெறும் ராசிகள் :

கும்ப ராசியில் சஞ்சரிக்கும் குருபகவான், மேஷம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அசுப பலன்களை கொடுக்க இருக்கிறார் என்பதால் இந்த ராசியில் இருப்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

பரிகாரம் :

அதிசார பெயர்ச்சி அடைந்த குருபகவான் 160 நாட்கள் வரை கும்ப ராசியில் இருப்பதால் இந்த ராசிக்காரர்கள் குருபகவானை வழிபாடு செய்வது, குருபகவானுக்கு உரிய மந்திரங்களை உச்சரிப்பது, நவகிரக சன்னதியில் மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டைக்கடலை தானம் செய்வது போன்ற பரிகாரங்களை செய்வதன் மூலம் நல்ல பலன்களை காணலாம்.

தமிழ்ப் புத்தாண்டு பொதுப் பலன்கள் :

பிலவ வருடப் பலன்கள்: தமிழ் வருடங்கள் 60-இல் தற்சமயம் நடப்பிலிருக்கும் 34-ஆவது ஆண்டான சார்வரி ஆண்டு, பங்குனி மாதம் 31-ஆம் தேதி (13/14.04.2021) பின்னிரவு 02.35.04 (ஐஎஸ்டி)மணியளவில் முடிவடைந்து, 35-ஆவது ஆண்டான பிலவ ஆண்டு, சித்திரை மாதம் ஒன்றாம் தேதி பிறக்கிறது.

இந்த பிலவ வருடம் மகர லக்னத்தில், மேஷ ராசியில், சுக்கிர பகவானின் நட்சத்திரமான பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. லக்னம், தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கும் அதிபதியான சனி பகவான் லக்னத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். லக்ன கேந்திரத்தில் ஆட்சி பெற்றுள்ள சனிபகவான் பஞ்சமஹா புருஷ யோகங்களில் ஒன்றான சச மஹா யோகத்தைப் பெறுகிறார்.

லக்னமும், லக்னாதிபதியும் நன்றாக அமைந்திருந்தால்தான் மற்ற கிரகங்களால் உண்டாகும் யோக பலன்கள் பரிமளிக்கும் என்பது ஜோதிட விதி. அதாவது, பன்னிரண்டு பாவங்கள் இருந்தாலும் ஜாதகர் அடையப்போகும் சுக துக்கங்களில் 50சதவீதம் வெளிப்படுத்துவது லக்னமாகும் என்றால் மிகையாகாது.

"சனியைப் போல் கொடுப்பாரும் இல்லை; கெடுப்பாரும் இல்லை' என்பது ஜோதிட மொழி. சனி பகவான் சுப பலத்துடன் இருப்பதால் இந்த ஆண்டு மேன்மையான பலன்கள் உண்டாகும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இத்தகைய அமைப்பினால் நமது நாட்டைப் பலரும் பாராட்டுவார்கள். உலக அரங்கில் மிக உயர்ந்த பொறுப்புகளும் கிடைக்கும். இரண்டாம் வீட்டோன் வலுத்திருப்பதால் அந்நியச் செலாவணியின் இருப்பு உயரிய நிலையை எட்டிவிடும்.

நம் நாட்டை பழிவாங்கத் துடித்துக் கொண்டிருந்த நாடுகள் நமது பரோபகாரச் செயல்களின் விளைவுகளால் அடங்கி விடுவார்கள். ஐக்கிய நாடுகள் அமைப்பிலும், உலக சுகாதார நிறுவனத்திலும் நமது குரலுக்கு புதிய மதிப்பு உண்டாகும்.

உள்நாட்டு உற்பத்தி உயரும். பூமிக்கு அடியில் கிடைக்கும் பொருள்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். குறிப்பாக, காரீய உலோகத்தினால் உயரிய மதிப்பு உண்டாகி, அது சம்பந்தமான தொழில்கள் உயர்வடையும். முடங்கிக்கிடந்த தொழில்களும் அரசாங்கக் கொள்கை முடிவினால் இயங்கத் தொடங்கும். வல்லரசு நாடுகளும் நமது பேச்சுக்குச் செவி சாய்க்கும்.

தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும், அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான குரு பகவான் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் பகவானின் சாரத்தில் (அவிட்டம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார்.

தனகாரகரான குரு பகவான் தனஸ்தானத்தில் அமர்ந்திருப்பது சிறப்பு. இதனால் அன்னிய நாடுகளுக்குப் பொருளாதார வகையிலும் நமது நாடு உதவி செய்யும். விதண்டாவாதம் செய்பவர்களை புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி, சாதுர்யத்துடன் பேசி வெற்றி கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும்.

சிறு சிறு விஷயங்களிலும் அக்கறை காட்டுவதால் அனாவசிய விரயங்களும் ஏற்படாது. ஆன்மிக விஷயங்கள், தெய்வ வழிபாடுகளும் நிரம்ப நடக்கும். குரு பகவானின் ஐந்தாம் பார்வை ருணம் (கடன்), ரோகம் (வியாதி), சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டின் மீதும், அங்கு அமர்ந்திருக்கும் செவ்வாய் (குரு மங்கள யோகம்) பகவானின் மீதும் படிகிறது.

செவ்வாய் பகவான் பூமிகாரகராகி குரு பகவானின் அருட்பார்வையைப் பெறுவதால் எல்லை பிரச்னைகளில் சுமுகமான தீர்வு கிடைக்கும்.

மக்களின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க காப்பீட்டுத் திட்டங்களும் நல்ல முறையில் செயல்படுத்தப்படும். குரு பகவானின் ஏழாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும், ஒன்பதாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும் படிகிறது.

"குரு பார்க்க கோடி புண்ணியம்', "குரு பார்க்க கோடி பாவநிவர்த்தி' என்பார்கள். அதாவது குரு பகவானின் சுபத்துவத்தால் நமது நாடு எத்தகைய எதிர்ப்புகளையும் சமாளிக்கும் சக்தியைப் பெற்றுவிடும்!
குரு பகவானைப் பற்றிச் சொல்வதென்றால் அதற்கு எல்லை என்பதே கிடையாது. ஏனென்றால், எல்லையற்ற பரம்பொருளின் பிரதிநிதித்துவம் பெற்றவரல்லவா இந்த குரு பகவான்!

அவரின் பார்வையைப் பெற்றால் தானே இந்த உலகம் தழைத்து, கொழித்து, செழித்து விளங்க முடியும். அவரே புத்திர காரகராகவும் ஆவதால் நமது நாட்டு மாணவ, மாணவிகள் சிறப்பான சாதனைகளைச் செய்வார்கள் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும், தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான யோககாரகரான சுக்கிர பகவான் சுகம், கல்வி, வீடு, வாகன ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் தன் ஆட்சி வீடான ரிஷப ராசியை அடைகிறார்.

ஒரு கேந்திரம், திரிகோணத்திற்கோ, ஒரு திரிகோணம், கேந்திரத்திற்கோ அதிபதிகளாக வரும் கிரகங்களுக்கு "யோக காரகர்' என்று பெயர் என்பதை அனைவரும் அறிந்ததே!

சுக்கிர பகவானின் அருட்பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீது படிகிறது. சுக்கிர பகவானே வாகன காரகராக ஆவதால், போக்குவரத்துத் துறை நவீன மயமாக்கப்படும். வாகனங்கள் புதிய பாதுகாப்பு சாதனங்களைக் கொண்டு உருவாக்கப்படும். "குறைந்த விலையில் அனைவருக்கும் வாகனம்' என்கிற நிலை உருவாகும். நெடுநாளாக நலிவுற்றிருந்த நூல், ஜவுளி சம்பந்தப்பட்ட தொழில் வேகமாக வளர்ச்சி அடையும். வெள்ளி உலோகத்தையும் பயன்படுத்தும் துறைகள் வளர்ச்சி காணும்.

விவசாயம் விருத்தி அடையும். சுக்கிர பகவான் பிராணிகளுக்கும் காரகத்துவம் வகிப்பாராகையால், மாடு, கன்றுகளை வைத்துப் பராமரிப்பவர்கள், பால் உணவு சம்பந்தப்பட்ட துறைகளும் வளர்ச்சி அடையும். சிமெண்ட் துறையும் துரித வளர்ச்சி அடையும். ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான புத பகவான், தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சுய சாரத்தில் (ரேவதி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கும்பராசியை அடைகிறார். மீன ராசியில் உச்சம் பெறும் சுக்கிர பகவான் சந்திர கேந்திரத்தில் அமர்ந்திருப்பதால், புத பகவானுக்கு "நீச்சபங்க ராஜயோகம்' உண்டாகிறது.

புத பகவான் நேர் பார்வையாக தன் ஆட்சி, உச்சம் மூலத் திரிகோண வீடான, பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டைப் பார்வை செய்கிறார். நமது நாட்டு தூதுவர்களின் சாதுர்யமான பேச்சு எதிரிகளுக்குத் தக்க பதிலடியாக அமையும். பன்னாட்டு நீதிமன்றத்திலும் நமது நாட்டிற்கு முக்கிய பிரதிநிதித்துவம் கிடைக்கும். வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டிருந்த விலைமதிப்பற்ற கடவுள் சிலைகள் திரும்ப நமது நாட்டிற்கு வந்து சேரும்.

புள்ளியியல் துறையில் ஒரு குறிப்பிட்ட புதுமையான வழிமுறையைக் கண்டுபிடித்து உலகிற்கு அறியப்படுத்தும் யோகமும் உண்டாகும். சுகஸ்தானமான நான்காம் வீட்டிற்கும், லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய் பகவான் ருணம், ரோகம், சத்ரு ஸ்தானமான ஆறாம் வீட்டில் சுய சாரத்தில் (மிருகசீரிஷ நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். லக்னத்திற்கு நான்காம் வீடான கேந்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக சுபாவ அசுப கிரகமான செவ்வாய் பகவான் அமைவதால் அவர் லக்ன சுபராகவே கருதப்படுகிறார்.

சர லக்னத்திற்கு லாப ஸ்தானமான பதினொன்றாம் வீடு பாதக ஸ்தானமாகவும் அமைவதால் அந்த வீட்டுக்குரிய கிரகம் மறைவு பெற்றிருப்பது சிறப்பாகும். அதோடு அவரை குருபகவான் பார்வை செய்வது "பருத்தி புடவையாய்க் காய்த்தது' என்பார்களே அதுபோல் நன்மைகள் கூடிவிடும்.

செவ்வாய் பகவான் பொறியியல் துறைக்கும் காரகம் வகிக்கிறார் என்பதை அனைவரும் அறிந்ததே! துணிவு, நுண்ணிய அறிவுக்கும் காரணமாவதால் பொறியியல் துறை சிறப்பாக வளர்ச்சி அடைந்து, பல கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்து, உள்நாட்டு உற்பத்தி குறித்த இலக்கினை எட்டிவிடும். நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கு அதிபதியான சந்திர பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் சுக்கிர பகவானின் சாரத்தில் (பரணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் கன்னி ராசியை அடைகிறார். ஏழாம் வீடு என்பது சட்டப்பூர்வமான பிணைப்பாகும். இந்தப் பிணைப்பால் நமது நாட்டின் நட்பு பல நாடுகளுக்கு விரிவடையும் என்று புரிந்து கொள்ள வேண்டும். அதோடு அடிக்கடி செய்யும் பயணத்தையும் குறிக்கும்.

இந்தப் பிலவ ஆண்டில் நமது நட்பு நாடுகளால் சந்தோஷமும், அமைதியும் உண்டாகும். ஏழாம் வீடு நீர் ராசியாகவும், சர ராசியாகவும், அந்த வீட்டுக்கு அதிபதி சர ராசியில் யோகாதிபதியின் சாரத்தில் இருப்பதால் நீரால் சூழப்பட்ட நாடுகள், செழிப்பான தீவுகளைக் கொண்ட நாடுகளின் நட்பு உயர்வைத் தரும். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டுக்கு அதிபதியான சூரிய பகவான் சுக ஸ்தானமான நான்காம் வீட்டில் கேது பகவானின் சாரத்தில் (அசுவினி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே இடத்தில் அமரும் நிலை) உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். சூரிய, சந்திர பகவான்களுக்கு அஷ்டமாதிபத்ய தோஷம் இல்லை என்பது ஜோதிட விதி!

மகர லக்னத்திற்கு சூரிய பகவான் அஷ்டமாதிபதியாக வருவதால் அஷ்டமாதிபத்ய தோஷம் ஏற்படாமல் மாறாக நன்மைகளே உண்டாகிறது என்பதும் அனுபவ உண்மை.

ராகு பகவான் பூர்வ புண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் சந்திர பகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் லக்ன சுபரான புத பகவானின் வீடான மிதுன ராசியை அடைகிறார்.

கேது பகவான் லாப ஸ்தானத்தில் புத பகவானின் சாரத்தில் (கேட்டை நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் குரு பகவானின் மூலத் திரிகோண ராசியான தனுசு ராசியை அடைகிறார்.

இப்படியான வலுவான சுப பலத்துடன் பிறக்கும் பிலவ ஆண்டில், நமது நாடு அனைத்து விஷயங்களில் தன்னிறைவு அடைந்து, நோய்நொடிகள் தீர்ந்து, சுபிட்சங்களும், அதிர்ஷ்டங்களும் நிறைய எல்லாம் வல்ல இறைவனை எங்கள் சார்பாகவும், தினமணி வாசகர்களின் சார்பாகவும் பிரார்த்திக்கிறோம். இனி தமிழ்ப் புத்தாண்டு பலன்களுக்குச் செல்வோம்..!