Skip to content

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் - ஆதாரத்துடன் உறுதி செய்த விஞ்ஞானிகள்!!

பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் ஆதாரத்துடன் உறுதி செய்துள்ளனர்.
போலிஷ் வானியல் நிபுணர் காஸ்மிஜெர் கோர்ட்லெவ்ஸ்கி, 1961ம் ஆண்டில் நிலவுகள் குறித்து ஆய்வுகள் நடத்தினார். அவரது கூற்றுப்படி மேகங்களில் கடினமான 2 பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அவை L4 மற்றும் L5 லகாரஞ்ச் புள்ளிகள் பூமியை சுற்றி வருவதாகவும் கூறப்பட்டது. இதுகுறித்த வாதம் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த நிலையில், பூமிக்கு மேலும் இரண்டு நிலவுகள் இருப்பதை ஹங்கேரி நாட்டு விஞ்ஞானிகள் ஆதாரத்துடன் உறுதி செய்துள்ளனர். அந்த இரு நிலவுகளும் தூசுகள் நிறைந்து காணப்படுவதாகவும், பூமியை சுமார் 250,000 மைல்கள் தொலைவில் சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

ராயல் ஆஸ்ட்ரானாமிக்கல் சொஸைட்டி (Royal Astronomical Society ) இது தொடர்பாக மேலும் பல குறிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இந்த மேகக்கூட்டங்களின் அளவு பூமியை விட ஒன்பது மடங்கு பெரிதாக இருக்கிறது. இவை பெரிதாக இருந்தாலும் சிறு சிறு துகள்களால் ஆனவை. சந்திரனைப் போலவே இந்த மேகக்கூட்டத்திற்கும் சுயமாக ஒளிரும் திறன் கிடையாது. இவை சூரிய ஒளியைக் குறைந்த அளவில் பிரதிபலிக்கும் திறனைக் கொண்டிருக்கிறது. இவற்றிலிருந்து வெளிப்படும் ஒளி மிகக் குறைவாக இருப்பதால் இவற்றை நம் கண்களால் பார்க்க முடியாது.

சில நேரங்களில் சூரியனின் பிரதிபலிப்பு காரணமாக இந்த தூசி மேகங்கள் தோன்றியதாகவும், அதிலிருந்து தனி துகள்களை பிரதிபலிக்கும் சிதறடிக்கப்பட்ட ஒளி கண்டுபிடிக்கப்பட்டதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து இந்த மேகக்கூட்டங்கள் நிலைத்தன்மை, பூமியைச் சுற்றி வருதல், மற்றும் ஒளியைப் பிரதிபலித்தல் போன்ற காரணங்களால் இவை இரண்டும் நிலவுகளாக தற்பொழுது ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன. இதையடுத்து இவற்றை முதன் முதலில் கண்டறிந்த போலந்து நாட்டு ஆராய்ச்சியாளர் கோர்ட்லெவ்ஸ்கியின் (Kordylewsky) பெயரையே இந்த நிலவுகளுக்கு விஞ்ஞானிகள் சூட்டியுள்ளனர்.