Skip to content

சென்னையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகளுக்கு குஷி !


சென்னையில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரிகளுக்கு குஷி

தமிழகத்தின் சென்னையில் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழில் பயிற்சி மையம் ஆனது ஒரு வேலைவாய்ப்பு முகாமினை நடத்த உள்ளது. பிபிஓ, கல்வி, மின், வர்த்தகம், சந்தைப்படுத்துதல், வங்கி, காப்பீடு, தகவல் தொழில்நுட்பம், விளம்பரத்துறை, மனிதவள மேம்பாடு ஆகிய துறை சம்பத்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் பல இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள உள்ளதால் அதிக அளவில் பட்டதாரிகள் பணி வாய்ப்பு பெறும் வாய்ப்புள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம் விவரங்கள் :
  • பட்டதாரிகள் 25 முதல் 30 வயதிற்குள் இருப்பவராக இருக்க வேண்டும்.
  • பட்டதாரிகளாகவோ அல்லது அதற்கு மேலான தகுதிகளை பெற்றவர்களாக இருக்க வேண்டும். 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கும் பணிகள் கிடைக்க வாய்ப்புள்ளது.
  • மாதம் ரூ.10,000/- முதல் ரூ.30,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
வேலைவாய்ப்பு முகாம் :

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆனது வரும் 18.12.2020 அன்று காலை 09.30 மணி முதல் மலை 04.30 மணி வரை சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான தேசிய தொழில் பயிற்சி மையத்தில் நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ளலாம்.