நன்றி குங்குமம் தோழ
நாம்
தினமும் சாப்பிடும் உணவுதான், நமது உடல் ஆரோக்கியத்தை முடிவு செய்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியுள்ள உணவு சாப்பிடுவது, சிறந்த தற்காப்பு.
பாதாம்:
இதில்
வைட்டமின் - இ, இரும்புச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உள்ளிட்ட
சத்துக்கள் அதிகளவில் உள்ளன. தினமும் மூன்று பாதாம் பருப்பை சாப்பிட்டு
வந்தால், ஆரோக்கியமான செல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும். சர்க்கரை
நோயாளிகள் சாப்பிட்டால் சிறந்த பலன் தரும்.
இஞ்சி:
வயிற்றுப்புண்ணை குணப்படுத்தும். உணவு செரிமானத்துக்கு சிறந்தது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும். உடலில் குளூக்கோஸ் அளவை கட்டுப்
படுத்தும்.
இதனை உணவில் சேர்த்து பயன்படுத்தலாம்; தேனீர் தயாரிக்கும்போது, தேயிலை
தூளுடன் இஞ்சியும் சேர்த்து கொதிக்க வைத்து பருகலாம்.
கீரை:
அனைத்து
கீரைகளும் மருத்துவ குணம் கொண்டதாகும். அதில், மினரல்ஸ், வைட்டமின்,
இரும்புச்சத்து அதிகம் உள்ளதால், இவை மதிப்புமிக்க உணவாக கருதப்படுகிறது.
கீரையை தினமும் உணவில் சேர்ப்பதன் வாயிலாக, பல நோய்கள் வராமல் தடுக்க
முடியும்.
கேரட்:
கேரட்டை சமைத்து சாப்பிடுவதைவிட, பச்சையாக சாப்பிடுவதே நல்லது. இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கண் பார்வைக்கு மிகவும் நல்லது.
பேரீச்சம்பழம்:
உடலுக்குத்
தேவையான இரும்புச்சத்து இதில் எக்கச்சக்கமாக உள்ளது. வளரும் குழந்தைகள்
முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம். ஆண்மை பலம் தரும். பேரீச்சையை
சாப்பிட்டால், தாது பலம் பெறும். தேனுடன் கலந்து இரவில் சாப்பிடுவது
உடலுக்குச் சிறந்த சக்தியைத் தரும்.
தொகுப்பு: எஸ்.மேரி ரஞ்சிதம்,சிவகங்கை.