Skip to content

"அரசு வழங்கும் ரூ.7.5 லட்சம் கடனுதவி. எப்படி பெறலாம்".? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

 

"அரசு வழங்கும் ரூ.7.5 லட்சம் கடனுதவி. எப்படி பெறலாம்".? வாங்க தெரிஞ்சுக்கலாம்..!!

தமிழக அரசுக்கு சொந்தமான தாட்கோ நிறுவனம் 30% மானியத்துடன் 7,50,000 வரையிலும் கடனுதவி வழங்கி வருகிறார்கள்.

புதிதாக இடம் வாங்க நினைப்பவர்கள், வாகனம் வாங்கி தொழில் துவங்க நினைப்பவர்கள், சிறு குறு தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு குறிப்பாக ஆதி திராவிட பெண்களுக்கு இந்த கடன் வழங்கப்படுகிறது.

இதற்கு எப்படி விண்ணப்பிக்கலாம்:

இந்த திட்டத்தின் மூலம் கடன் பெற நினைப்பவர்கள் ஆன்லைனில் https://application.tahdco.com/ இந்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும்.

இந்த இணையதளத்தில் Click Here to Apply என ஒரு ஆப்ஷன் இருக்கும். அதனை முதலில் கிளிக் செய்யவேண்டும். அப்போது உங்கள் பெயர், ஜாதி, மதம் மற்றும் எந்த திட்டத்தின் மூலம் லோன் பெற விரும்புகிறீர்கள் எனக் கேட்கும். அவற்றை சரியாக நிரப்பவேண்டும்.

பின்னர் விண்ணப்படிவம் உள்ள பக்கம் திறக்கப்படும். அதில் கேட்கப்பட்டிருக்கும் தகவலை சரியாகக் கொடுக்கவேண்டும். பின்னர், சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், Project Report கொடுத்து இணைக்க வேண்டும். மேலும் நீங்கள் புதிதாக தொழில் தொடங்கவுள்ளீர்கள் என்றால், தொழில் தொடங்கவுள்ள இடம், தேவையான தொகை மதிப்பீடு போன்ற தகவல்களையும் கொடுக்கவேண்டும்.

தேவையான விவரங்கள் அனைத்தையும் கொடுத்த பிறகு உங்களது விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டும். இதைத்தொடர்ந்து உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு குறுஞ்செய்தி வரும் அதன் மூலம் உங்களின் விண்ணப்ப நிலையை நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.