Skip to content

ரூ.3.20 லட்சம் ஊதியத்தில் மத்திய துறைமுக அமைச்சகத்தில் பணியாற்ற ஆசையா?


மத்திய அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகத்தில் காலியாக உள்ள துணைத் தலைவர் மற்றும் பொது மேலாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.3.20 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மத்திய துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (Ministry of Port)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Deputy Chairperson மற்றும் பொது மேலாளர்

மொத்த காலிப் பணியிடம் : 02

கல்வித் தகுதி:

பொது மேலாளர் : இந்திய அரசினால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் competency as master of Foreign Going என்ற தகுதிச் சான்றிதழை பெற்று, அதிகபட்சம் 08 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Deputy Chairperson : அரசுத் துறையில் ஏற்படும் சட்ட சிக்கல்களைக் கையாளும் திறன், நிர்வாக அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : குறைந்தபட்சம் ரூ.1,00,000 முதல் ரூ.3,20,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு :

பொது மேலாளர் : இங்கே கிளிக் செய்யவும்.

Deputy Chairperson : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை :

மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் http://shipmin.gov.in/?q=orders/vacancies என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 22.02.2021 மற்றும் 24.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://shipmin.gov.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.