Skip to content

வேலைவாய்ப்பு: "561 காலியிடங்கள்". ஐடிஐ படித்தவர்களுக்கு அரிய வாய்ப்பு. உடனே அப்ளை பண்ணுங்க..!!

ஜபல்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் மேற்கு மத்திய ரயில்வேயில் இலவச தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ முடித்த இந்திய இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: தொழில் பழகுநர் பயிற்சி

காலியிடங்கள்: 561

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 15 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி, ஓபிசி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.170. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் ரூ.70. இதனை DRM Office, West Central Railway, Jabalpur-க்கு டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mponline.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 27.02.2021

மேலும் விவரங்கள் அறிய www.wcr.indianrailway.gov.in அல்லது http://mponline.gov.in/Quick%20Links/Documents/RailDoc/Jabalpur/Act%20Apprentice%20Notificatioin%202020-21.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.