Skip to content

மிஸ் பண்ணாதீங்க... இந்து சமய அறநிலையத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை தமிழகத்தில் கோவில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பினை நாளிதழில் வெளியிட்டுள்ளது.

அதன்படி கடலூர் மாவட்டம் திட்டம் குடி வட்டம் பெண்ணாடம் அருள்மிகு ப்ரளயகாலேசுவரர் திருக்கோவில் கீழ்கண்ட
விபரப்படியான காலிப்பணியிடங்களுக்கு பணியாளர்கள் நியமனம் செய்ய தகுதியுள்ள இந்து மதத்தை சார்ந்த நபர்களிடம் இருந்து 06.08.2021 ம் தேதி மாலை 5.45க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


நிறுவனம்
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத் துறை
பணி அர்ச்சகர் , உக்கிராணம், மெய்க்காவல்
காலிப்பணியிடங்கள் 03


வயது
விண்ணப்பத்தாரர்கள் 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தி ஆனவராகவும் 35 வயதிற்குக்குட்பட்டவராகவும் இந்து மதத்தை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 06.08.2021
சம்பள விவரம் ரூ.4,200 - 7700
கல்வி தகுதி தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆகம பள்ளி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற வேத ஆகம பயிற்சி நிறுவனத்தில் ஓராண்டு ஆகம பயிற்சி சான்று பெற்றிருத்தல் வேண்டும்.

நாளிதழில் கொடுக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்

  • இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.

  • தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனைக்கு ஏற்றுக்கொள்ளப்படும். விண்ணப்ப படிவத்தை ரூ.100 திருக்கோயில் அலுவலகத்தில் நேரில் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

  • தெய்வீகத்தாலும், இராஜூகத்தாலும் ஏற்படும் மாற்றத்திற்கு நிர்வாகம் பொறுப்பல்ல

  • இதர விபரங்கள் அலுவலக நாட்களில் அலுவலக நேரத்தில் வந்து தெரிந்து கொள்ளலாம்

நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு


தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் உள்ள கோவில்களின் வேலைவாய்ப்பு குறித்து நாளிதழில் வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.