Skip to content
Showing posts with label HEALTH TIPS. Show all posts
Showing posts with label HEALTH TIPS. Show all posts

பப்பாளியால் இதயத்திற்கு கிடைக்கும் நன்மைகள்:

இதய ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, ஆரோக்கியமான உணவு மற்றும் அன்றாட உடற்பயிற்சி மிகவும் முக்கியம். அதோடு, இதயத் தமனிகளை நேர்த்தியாக, சுத்தமாகப் பராமரிக்க விரும்பினால், கொழுப்பின் அளவைக் குறைவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏற்கெனவே விவரித்துள்ள இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைத் தவிர, பப்பாளியில் தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் அதாவது எல்.டி.எல். அளவுகளைக் குறைக்கும் அம்சங்களும் உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம், இது இதயத் தமனிகளில் கொழுப்பு வளரும்ம் (தமனித் தடிப்பு) வாய்ப்பைக் குறைக்கிறது. பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் 'சி'யும் இதயத்தைப் பாதுகாக்கிறது.

பலவகை நன்மைகளை தரும் ஏலக்காய்:

ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம். சூ‌யி‌ங்க‌ம், ‌சி‌க்லெ‌ட், சா‌க்லே‌ட் என எதையாவது வா‌யி‌ல் போ‌ட்டு அசை போடுவதா‌ல் எ‌ந்த‌ப் பலனு‌ம் இ‌ல்லை. அத‌ற்கு‌ப் ப‌திலாக ஏல‌க்காயை வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று சா‌ப்‌பிடுவது நல்லது. ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும். ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்

இதை பயன்படுத்துவதால் ஏற்படும் புற்றுநோய் தான் அதிகமாம்:

இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலானோர் புகையிலை, சிகரெட், பீடி, குட்கா போன்ற பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் அதிகளவு புற்று நோய் தாக்கு கிறது.

பெண்களை மார்பக புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய்தான் அதிகளவில் தாக்குகின்றன.
மரபை விட சுற்றுச்சூழல் தான் புற்றுநோயை அதிகளவில் தீர்மானிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் புற்றுநோயக்கும் தொடர்பு உண்டு.

காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிபொருட்கள் இருந்தால் அதை பயன்படுத்தும் மக்களுக்கும் புற்றநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. துரித உணவு, சமச்சீரற்ற வாழ்க்கை முறை, போதிய உடற்பயிற்சியின்மையாலும் புற்றுநோய் ஏற்படுகிறது.

பல முன்னணி பிரபலங்களும் கேன்சருடன் போராடி வென்றவர்கள் தான். கேன்சர் வந்தால் குணப்படுத்த முடியாது என துவண்டு விடுவது உடலை இன்னும் பலவீனப்படுத்தும். கேன்சர் வந்தாலும் மீண்டுவிடலாம் என்ற மன உறுதி வேண்டும். உடலில் எந்த இடத்தில் வலி இல்லாத கட்டிகள் வந்தாலும் அதை உடனே மருத்துவரிடம் அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்.

நெல்லிக்காய், துளசி, அருகம்புல், வில்வம் புற்றுநோயை வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதியும் உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியும் அனுசரிக்கப்படுகிறது.

உடல் நலம் : *ஒருவருக்கு "ஹைப்போ தைராய்டு" பிரச்சனை எதனால் ஏற்படுகிறது தெரியுமா.??

ஹைப்போ தைராய்டிசம் ஒரு ஆட்டோ இம்யூன் டிஸ்ஆர்டர் ஆகும். நம்முடைய நோயெதிப்பு அமைப்பு நம்முடைய ஆரோக்கியமான செல்களையே தாக்கும் போது ஆன்டி பாடிகளை உருவாக்குகிறது. இதனால் நம் நோயெதிப்பு மண்டலமே நமக்கு எதிராக செயல்படத் துவங்கி விடுகிறது. அதே மாதிரி தைராய்டு சுரப்பி தேவையான தைராய்டு ஹார்மோனை உற்பத்தி செய்யாத போதும் இந்த பிரச்சினை உண்டாகிறது. இந்த நோயின் ஆரம்ப அறிகுறிகள் எதுவும் தெளிவாக தெரியாது.

ஆனால் கூடிய விரைவிலேயே ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை ஒட்டுமொத்தமாக பாதிப்படைய செய்துவிடும். இந்த ஹைப்போ தைராய்டிசத்தால் இதய பிரச்சினைகள், நரம்பு காயங்கள், கருவுறாமை, மெதுவான வளர்சிதை மாற்றம், குமட்டல், மலச்சிக்கல், நாட்பட்ட சோர்வு, முடி உதிர்தல், குறைந்த பாலுணர்ச்சி, வறண்ட சருமம் மற்றும் விவரிக்க முடியாத எடை அதிகரிப்பு போன்ற பல்வேறு அறிகுறிகள் தெரிய வருகின்றன.

ஹைப்போ தைராய்டிசம் நோயாளிகளுக்கு குறைந்த அளவு மட்டுமே வைட்டமின் டி இருக்கும். இந்த சத்து தான் உடம்பில் கால்சியத்தை உறிஞ்சுவதற்கு மிகவும் தேவையான ஒன்று. ஆனால் வைட்டமின் டி இவர்களுக்கு குறைவாக இருப்பதால் குடல் கால்சியத்தை உறிஞ்சுவதில்லை. இதனால் இரத்தத்தில் உள்ள கால்சியம் அளவு குறைய ஆரம்பிக்கிறது. இதைச் சமன் செய்ய தைராய்டு சுரப்பி எலும்புகளில் சேகரிக்கப்பட்ட கால்சியத்தை உறிஞ்ச தூண்டுகிறது. இதனால் எலும்புகள் காலப்போக்கில் பலவீனம் அடைய ஆரம்பிக்கும். இதனால் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் மாற்றம் உண்டாகிறது. எனவே வைட்டமின் டி பற்றாக்குறையை போக்கினாலே தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சரி செய்யலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

எலும்புகளில் கால்சியம் குறைய குறைய எலும்புகள் மெல்லியதாகி உடைய ஆரம்பித்து விடும். எலும்புகளில் கால்சியம் இழப்புக்கும் வழிவகுத்துவிடும். எனவே ஹைப்போ தைராய்டிசம் கொண்ட நபர்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியம் சத்து இரண்டையும் சரியாக கவனித்து வர வேண்டும்.

ஆயுர்வேத முறையில் இந்த ஹைப்போ தைராய்டிசத்திற்கு என்று சில மருத்துவ முறைகள் உள்ளன. யோகா போன்றவை இதற்கு ஒரு நல்ல தீர்வாக இருக்கும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கூறுகின்றனர். அப்படி ஆயுர்வேத முறைப்படி ஹைப்போ தைராய்டிச நோயாளிகள் எந்த மாதிரியான முறைகளை பின்பற்றி பலன் அடையலாம் என்பதை வாங்க பார்க்கலாம்.

ஆசனங்கள்..

* உஜ்ஜய் பிராணயாமா (மனதை அமைதிப்படுத்தி உடலை வெப்பமாக்கும் யோக சுவாச நுட்ப நிலை )

* சர்வாங்காசனம் (தோள்பட்டை நிற்கும் பயிற்சி) இதுவும் ஹைப்போ தைராய்டிசத்திற்கான சிறந்த யோகா பயிற்சி என்று ஆயுர்வேதம் கூறுகிறது.

* நாடி சோதனா பிராணயாமம் (மாற்று நாசி மூச்சுப் பயிற்சி) இது உங்க மெட்டபாலிசத்தை சமன்செய்ய உதவுகிறது.

மேற்கண்ட யோகா பயிற்சிகள் ஹைப்போ தைராய்டிசம் நோயாளிகளுக்கு நல்ல பலனை அளிக்கும் என்று ஆயுர்வேத முறைகள் கூறுகின்றன.

தைராய்டு நோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?

* தைராய்டு நோயாளிகள் அடிக்கடி அவர்களுடைய தைராய்டு அளவை பரிசோதிக்க வேண்டும்.

* தினமும் 4-5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இதன் மூலம் தைராய்டு ஹார்மோன் ஒழுங்காக வேலை செய்யும். மேலும் உங்க கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் தேங்கியுள்ள நச்சுக்களை இதன் மூலம் நீக்கி விடலாம்.

* ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அடங்கிய உணவுகளை அடிக்கடி எடுத்துக் கொள்ள வேண்டும்.

* தைராய்டு ஹார்மோன் சமநிலையின்மை உள்ளவர்கள் வைட்டமின் பி அடங்கிய உணவுகளை எடுத்து வர வேண்டும். தினமும் வைட்டமின் டி அடங்கிய உணவுகளை எடுப்பது உங்க ஹைப்போ தைராய்டிச பிரச்சனைகளை குறைக்க உதவும்.

* ஹைப்போ தைராய்டிசம் இருப்பவர்கள் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள்.

தைராய்டு நோயாளிகள் செய்யக் கூடாதவை:

* தைராய்டு நோயாளிகள் புகைப்பிடித்தல் மற்றும் ஆல்கஹால் போன்ற பழக்க வழக்கங்களை கைவிட வேண்டும். சிகரெட் புகைப்பதால் தைராய்டு சுரப்பியில் உள்ள அயோடைடு சமநிலையை சீர்குலைப்பதன் மூலம் மல்டினோடூலர் கோயிட்ரே சுருங்குவதற்கான அபாயத்தை அதிகரிக்கிறது.

* மேக்ரோ ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளான கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரோட்டீன் உணவுகள் வேண்டாம்.

* காபி மற்றும் சர்க்கரைக்கு நோ சொல்லுங்கள்.

* தைராய்டு பிரச்சினைக்கு நீங்களாகவே மருந்து எடுப்பதை தவிருங்கள். மருத்துவரை ஆலோசித்து பரிசோதனை மேற்கொண்ட பிறகே மருந்து எடுக்க வேண்டும்.

மேற்கண்ட டிப்ஸ்கள் தைராய்டு நோயாளிகளுக்கு உதவியாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

வேதனை தரும் கல்லீரலில் பாதிப்பு.., கல்லீரலை வலுவாக்கும் துளசியின் நன்மைகள்:

 

கல்லீரலில் பிரச்சனை உள்ளவர்களுக்கு தண்ணீர் உணவுகள் எது சாப்பிட்டாலும் வாந்தி வரும். ஏனெனில் இவர்களுக்கு கல்லீரல் வேலை செய்யவிலலை என்றால் கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று அறிந்துகொள்ள வேண்டும் . கல்லீரல் பாதிப்பை போக்க நாட்டு மருந்துக்கடையில் கிடைக்கும் சதகுப்பை 100 கிராம், சோம்பு 100 கிராம் வாங்கி இரண்டையும் தனித்தனியே லேசாக வறுத்து, இடித்து சூரணம் செய்து, சலித்து எடுக்கவும்.*

ஒரு கிலோ பனைவெல்லத்தை சலித்த சூரணத்தில் போட்டு இடித்தால் அல்வா மாதிரி வரும். இதை புட்டியில் அடைத்து வைத்துக் கொண்டு, நாள் ஒன்றுக்கு 3 வேளைகள் (காலை-6, மதியம்-12, மாலை-6 மணிக்கு) நெல்லிக் காயளவு எடுத்துச் சுவைத்துச் சாப்பிடவும். இப்படி ஒரு மாதம் சாப்பிட்டால், கல்லீரல் குணமாகி, வாந்தி வருவது நின்றுவிடும்.*

கல்லீரலை வலூவூட்டி சீராக செயல்பட வைப்பது மாதுளங்கனி. துளசி இலைகள் 10-20 எடுத்து கழுவி, அத்துடன் ஏலக்காய்-4, சுக்கு அரை துண்டு சேர்த்து நசுக்கி 1 குவளை நீரில் கலந்து காய்ச்சி, அரை குவளையாக வடிகட்டி தேவையானால் சிறிது பால், தேன் கலந்து பருகிவர உடலுக்கு எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.*

இத்துளசி கஷாயம், துளசி சிரப், ஆஸ்த்மா, இளைப்பு நோய், மூளைக் காய்ச்சல், மலேரியா, நிமோனியா காய்ச்சல், கல்லீரல் சிதைவு ஆகிய நோய்களை வராமலும், வளர விடாமலும் தடுக்கும் ஆற்றல் உண்டு. மதுபானம், போதை மருந்து, சிகரெட் புகையால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மெல்ல மெல்ல சிதைவடையும்.*

முற்றிய நிலையில் இரத்த வாந்தி எடுத்து அறுவை சிகிச்சைக்கு ஆட்பட வேண்டிடும். எலுமிச்சம்பழமும் தேனும் தக்காளி ரசமும் சம அளவு கலந்து காலை-மாலை நேரங்களில் வேளைக்கு ஒரு அவுனஸ் வீதம் சாப்பிட்டு வர கல்லீரலின் சீர் கேடுகள் மறைந்து உடம்பு தெம்பாக இருக்கும். இதனால் சயரோக இருமலும் கூட குறைந்து விடுகிறது. இரத்த ஓட்டம் சீர்பெறும்.*

இருதயமும் பலம் பெறும். சிறு நீரீலுள்ள சர்க்கரையும் குறைந்து விடுகிறது. ஈரல் பலப்பட வேண்டுமென்றாலும், கல்லீரலில் ஏதேனும் கோளாறு இருந்தாலும், பாலில் எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து, உடனே சாப்பிட்டு வாருங்கள். சீக்கிரத்தில் குணமாகும். கல்லீரல் மண்ணீரலில் கோளாறுகள் ஏதேனும் இருந்தால், துளசியை இரவில் ஊறவைத்து, காலையில் அதை வடிகட்டி அந்த நீரை மட்டும் சாப்பிட்டு வாருங்கள்.

தொடர்ந்து சாப்பிட்டால் ஈரல் கோளாறுகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். வாரம் ஒருநாள் கீழாநெல்லி, கரீசலாங்கண்ணி, கொத்துமல்லி ஆகிய 3 கீரைகளையும் நெய், சீரகம், பாசிப்பருப்புடன் சமையல் செய்து பகல் உணவில் சாப்பிட்டு வர கல்லீரல் சேதமடையாமல் வலிமையுடன் செயல்படும். கல்லீரலைச் சார்ந்து செயல்படும் மண்ணீரல் கணையம், சிறுநீரகம் ஆகிய உறுப்புகளும் நஞ்சுமயம் ஆகாமல், சிதைவின்றி ஊக்கமுடன் செயல்படும். குறிப்பாக புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி பழக்கமுள்ளவர்களுக்கு வரக்கூடிய கல்லீரல் அழற்சி, கல்லீரல் சிதைவு ஆகியவை வராமல் தடுக்கும்.