மின்வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மின்
வாரியத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த காலி பணியிடங்களை
நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி: Assistant Accounts Officer காலி பணியிடங்கள்: 18 கல்வித்தகுதி: சி.ஏ அல்லது ICWA- வில் தேர்ச்சி வயது: 30 வயதிற்குள். சம்பளம்: ரூ.1,78,000 வரை. விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 26
இதில் விருப்பமுள்ளவர்கள் www. tangedco.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி
மற்றும் வளர்ச்சி அமைப்பில் (DRDO) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்
பொருட்டு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் பல
பிரிவுகளின் கீழ் Apprentice பணிகளுக்கு தகுதியானவர்களிடம் இருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே விருப்பமுள்ள
விண்ணப்பதாரர்கள் அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் பெற்றுக்
கொள்ளலாம்.
பணியிடங்கள் :
பல்வேறு பிரிவுகளின் கீழ் Apprentice பணிகளுக்கு என மொத்தமாக 14 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
:
Graduate Apprentice - அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் Chemistry பாடப்பிரிவில் B.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Graduate
Apprentice - BA/B.Com அல்லது Any Degree தேர்ச்சி பெற்று இருக்க
வேண்டும். அவற்றுடன் Computer Knowledge இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
ITI Apprentice - Lab Assistant பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
+2 Apprentice - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை வழக்கப்படும்.
தேர்வு செயல்முறை :
பதிவாளர்கள்
Merit அடிப்படையில் தான் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும்
தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ் அறிவிப்பினை அணுகலாம்.
விண்ணப்பிக்கும் முறை :
ஆர்வமும்
தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த பணிகளுக்கு வரும் 30.03.2021
அன்றுக்குள் dcparmar@nmrl.drdo.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களின்
விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
Official PDF Notification – https://www.drdo.gov.in/sites/default/files/career-vacancy-documents/NMRL_Apprentice_Advt._2.pdf
மத்திய அரசிற்கு உட்பட்ட சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் என்னும்
நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள அட்வைசர் பணியிடத்தினை
நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.1.05 லட்சம் வரையில்
ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு மத்திய, மாநில அரசில்
சிவில் துறையில் Executive ஆக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப்
பயனடையலாம்.
நிர்வாகம் :
சென்டிரல் கோல்பீல்ட்ஸ் லிமிடெட் (CCl)
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 01
பணி : Advisor
கல்வித் தகுதி :
மத்திய, மாநில அரசுத் துறையில் அல்லது தனியார் நிறுவனங்களில் சிவில்
துறையில் Executive ஆக பணிபுரிந்தவர்கள், ஓய்வு பெற்றவர்கள் இப்பணிகளுக்கு
விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.75,000 முதல் ரூ.1,05,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.centralcoalfields.in என்னும்
அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம்
கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர் குறுக்குப் பட்டியல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம்
குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும்
http://www.centralcoalfields.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ
அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
Wanted Trained and experienced Graduate
& Post Graduate Teachers with B.Ed & D.TEd for all subjects for a
CBSE School Local Area Applicant are Preferable.
(Excellent
Fluency in English is Mandatory) PIONEER INTERNATIONAL SCHOOL CBSE
SYLLABUS K.P.VALASAI, TENKASI E:popularschool@yaho0.co.in
Mobile: 9944324282, 8015084190
Kovai Vidyashram" for inspired leaming World Class CBSE School
TEACHERS WANTED
Coimbatore Campus CHEMISTRY, ENGLISH HINDI, KG TEACHERS
Kangeyam
Campus PHYSICS, MATHS, COMPUTER SCIENCE, ACCOUNTANCY, KG TEACHERS Send
your latest Resume with Photograph to: careeratkv@gmail.com
சென்னை: சென்னையில் உள்ள மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல்
நிறுவனத்தில் தகுதியும் திறமையும் உள்ளவர்களுக்கு வேலைகள் காத்துக்
கொண்டிருக்கிறது. '
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை மறைந்து கிடக்கும.
அந்த திறமை என்ன என்பதை கண்டுபிடித்து, அதில் பயிற்சியும் முயற்சி செய்தால்
பெரிய வெற்றிகளை பெற முடியும்.
எனவே தகுதியும் திறமையும்
உள்ளவர்கள் தங்களுக்கான வேலையை அடையாளம் கண்டு முன்னேறுங்கள். சென்னையில்
உள்ள மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் பொறியியல் நிறுவனத்தில் மேலாளர் உள்பட சில
பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆப்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.,
முக்கிய தகவல்கள்
இதில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விவரங்கள்:
வேலை தரும் நிறுவனம்: மத்திய பிளாஸ்டிக் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (சிபெட்)
வேலைகளின் வகை: மத்திய அரசு வேலைகள் பதவிகளின் பெயர் தலைமை மேலாளர், மேலாளர் (பி & ஏ), மேலாளர் (நிதி)
காலியிடங்கள்: 03
வேலை இடம்: சென்னை, தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 22:3.2021
ஊதியம்
விண்ணப்பிப்பதற்கான கல்வித் தகுதிகள் அங்கீகரிக்கப்பட்ட
கல்வி நிறுவனத்தில் ஏதேனும் டிகிரி, சி.ஏ, ஐ.சி.டபிள்யூ.ஏ, எஸ்.ஏ.எஸ்,
எம்பிஏ, பி.ஜி டிப்ளோமா, முதுகலை பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க
வேண்டும்.
ஊதியம்: தலைமை மேலாளர் (பி & ஏ) - 1,23,100 / - + படிகள்
மேலாளர் (பி & ஏ) - 788,00 / - + படிகள் மேலாளர் (நிதி) - 78,800 / - + படிகள்
வயது
தேர்வு செய்வதற்கான செயல்முறை
1.ஆன்லைன் சோதனை
2. திறன் சோதனை
3. நேரடி நேர்காணல்
வயது வரம்பு : குறைந்தபட்ச வயது: 18 வயது. அதிகபட்ச வயது: 45 வயது
தலைமை மேலாளர் பதவிக்கு: அதிகபட்ச வயது- 50 வயது
விண்ணப்பம் / தேர்வு கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் இல்லை
எப்படி
எப்படி விண்ணப்பிப்பது: அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.cipet.gov.in ஐ பாருங்கள்
கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரி மூலம் விண்ணப்பிக்கவும் விண்ணப்பத்தை ஜெராக்ஸ் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள் முகவரி: மேலாளர் (பி & ஏ), சிபெட் தலைமை அலுவலகம், டி.வி.கே. தொழிற்பேட்டை, கிண்டி, சென்னை - 600 032.
விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 17.02.202 1
விண்ணப்பம் வந்து சேர வேண்டிய கடைசி தேதி: 22.03.2021
ரயில்வே துறையில் வெளியாகியுள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி: டீசல் லோகோ நவீனமயமாக்கல்
பதவி: அப்ரண்டீஸ்
கல்வி தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி
காலி பணியிடங்கள்: 182
விண்ணப்பிக்க கடைசி தேதி: 31 மார்ச் 2021
தேர்வு செய்யும் முறை: நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: பொதுப்பிரிவினருக்கு 100, எஸ்டி ,எஸ்சி களுக்கு கட்டணம் இல்லை.
சம்பளம்:
அப்ரண்டிஸ் பலருக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த
முதல் ஆண்டில் நீங்கள் மாதத்திற்கு 7000 ரூபாய் சம்பளமும், இரண்டாம்
ஆண்டில் 7700, மூன்றாம் ஆண்டில் 8050 ரூபாயும் சம்பளமாக பெறுவீர்கள்.
இந்த காலியிடங்களுக்கு http://dmw.indianrailways.gov.in.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பேங்க் ஆப் இந்தியாவில்
(BOI) காலியாக உள்ள அலுவலக உதவியாளர், Faculty, Attendant, காவலர்
பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5
பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு 8, 10-வது தேர்ச்சி
பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.20 ஆயிரம்
வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும்
விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : பேங்க் ஆப் இந்தியா (BOI)
மேலாண்மை : மத்திய அரசுப் பணி
மொத்த காலிப் பணியிடம் : 05
பணி : Faculty, Office Assistant, Attendant மற்றும் Watchman
கல்வித் தகுதி:
மேற்கண்ட
பணியிடத்திற்கு 8, 10-வது தேர்ச்சி பெற்றவர்கள், 12ம் வகுப்பு
தேர்ச்சியுடன் ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம்
பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர் 18 முதல் 65 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஒவ்வொரு பணியிடத்திற்கும் வயது வரம்பு மாறும். அதிகாரப்பூர்வ அறிவிப்பைக் காணவும்.
ஊதியம் : ரூ.50,000 முதல் 20,000 வரையில்
விண்ணப்பிக்கும் முறை :
மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும்
உள்ளவர்கள் https://bankofindia.co.in/ அல்லது கீழே இணைக்கப்பட்டுள்ள
அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது
விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் Presentation மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம்
குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப் படிவத்தினைப் பெறவும்
www.bankofindia.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள லிங்க்கை கிளிக்
செய்யவும்.
இந்திய உணவு கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய
உணவு கழகத்தில் General Administration, Technical Accounts, Las உள்ளிட்ட
துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
பணி: உதவி மேலாளர். காலி பணியிடங்கள்: 89 கல்வித்தகுதி: B.Tech, B.E, BSc Agri, Law, CA. சம்பளம்: 1,80,000 வரை விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 31
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு https://www. recruitmentfic.in/என்ற இணையதளத்தில் சென்று பார்க்கவும்.
தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் பல பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு பணிகளுக்கான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. இந்த பணிகளில் சேர விரும்புவோர்,
வெளியிடப்பட்ட அறிவிப்பை முழுமையாகப் படித்து, ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்கலாம்..
பணி: தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் (என்.எம்.டி.சி) கள உதவியாளர், பராமரிப்பு உதவியாளர்
காலியிட விவரங்கள் : 304
தகுதி : இ 10 ஆம் வகுப்பு தேர்ச்சி , ஐ.டி.ஐ
சம்பளம்:மாதம் : ரூ .18100-ரூ. 35040.
விண்ணப்பிக்கும் கால அவகாசம் : மார்ச் 11, 2021 முதல் ஏப்ரல் 20, 2021
வயது வரம்பு :இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, வயது வரம்பு 18 முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.
வயது தளர்வு குறித்த தகவலுக்கு, நீங்கள் அறிவிப்பைப் பார்க்க வேண்டும்.
திருச்சியில் உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சியில்
உள்ள தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த
பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு
வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தேசிய தொழில்நுட்ப நிறுவனம் பணி: project staff சம்பளம்: ரூ.25,000 கல்வித்தகுதி: B.E/ B. Tech பணியிடம்: திருச்சி தேர்வு முறை: எழுத்து தேர்வு விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 20
மேலும் இது பற்றிய கூடுதல் விவரங்களுக்கு என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.
மத்திய
அரசு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு
நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வினை மீண்டும் வழங்க அரசு பரிசீலனை
செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் ஜூலை 2021 முதல் 32 சதவீத
அகவிலைப்படி வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
அகவிலைப்படி உயர்வு:
கொரோனா
பாதிப்பு காரணமாக கடந்த வருடம் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால்
மிகப்பெரிய அளவில் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. இதனால் வரிவசூல்
பாதிக்கப்பட்டதால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதன் விளைவாக அரசு
ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் நிதி பற்றாக்குறை உருவானது. இதனை
சரிசெய்யும் பொருட்டு ஜனவரி 2020 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு
வழங்கப்பட்டு வந்த அகவிலைப்படி (DA) உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.
இது ஜூலை 2021 வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த உத்தரவினை திரும்ப பெரும் நேரத்தில் மத்திய அரசு துறைகளில்
பணியாற்றும்
48 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மிகப்பெரிய பயனை
அடைவார்கள் என கூறப்படுகிறது. அதாவது ஜனவரி 2020 இல் DA 4%, ஜூலை 2020 இல்
3% அதிகரிப்பு ஏற்படும். இப்போது 2021 ஜனவரியில் 4% உயரும். இதன் மூலம் DA
17% -லிருந்து 28% வரை உயரும் என தகவல்கள் தெரிவிக்கின்றது.
பொருளாதார
வல்லுநர்கள் கூறுகையில் ஜூன் 2021 க்குள் DA மேலும் 3-4%
அதிகரிக்கக்கூடும். இதன் மூலம், ஜூன் 2021 இல் தடையை நீக்கிய பின்னர் DA
30-32% ஆக அதிகரிக்கும் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மத்திய
அரசால்
DA நிறுத்தப்பட்ட போது, 2020 ஜனவரி 1 முதல் 2021 ஜூன் 30 வரை அரியர்
தொகை எதுவும் பெறப்பட மாட்டாது என உத்தரவில் தெளிவாக இருந்தது எனவும்
தெரிவிக்கப்பட்டு உள்ளது.
HCL அதிகாரபூர்வ இணையதளத்தில் Assistant Foreman (Mining), Mining Mate
Grade-I காலியிடங்களுக்கான அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வேலைக்கு கல்வித்தகுதியாக 10th, Diploma கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையோர் உடனடியாக விண்ணப்பியுங்கள். இந்த வேலைவாய்ப்புக்கு பணியிடமாக (Balaghat ) கொடுக்கப்பட்டுள்ளது.
தகுதியுடையோர்
மற்றும் திறமைமிக்க விண்ணப்பதாரர்கள் (Written Test) மூலம் தேர்வு
செய்யப்படுவார்கள். தகுதி மற்றும் விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு உடனே
விண்ணப்பியுங்கள்.
நிறுவனம் : HCL
பணியின் பெயர் : Assistant Foreman (Mining), Mining Mate Grade-I
இந்திய விமான படையில் இருந்து தற்போது திருமணமாகாத ஆண் இந்திய
குடிமக்கள்/ நேபாலீஸ் குடிமக்கள் ஆகியோருக்காக புதிய வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் Group 'Y' (Non-Technical Trades)
பணிகளுக்கு விளையாட்டு கோட்டாவில் காலியிடங்கள் உள்ளதாக
குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே தகுதியுடையோர் கீழே வழங்கப்பட்டுள்ள தகவல்களை
நன்கு ஆராய்ந்து அதன் பின்னர் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
பணியிடங்கள் :
Group 'Y' (Non-Technical Trades) பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 17 முதல் அதிகபட்சம் 21 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி :
Intermediate / 10+2 / Class XII அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒரு தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும். மேலும் விளையாட்டு துறையில் ஏதேனும் ஒரு Achievement பெற்று இருக்க வேண்டும்.
தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள்
Physical Fitness Test, Sports Skill Trials, Medical Examination மூலமாக
தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை
அணுகலாம். பதிவு செய்வோருக்கான தேர்வுகள் அனைத்தும் வரும் 26.04.2021 அன்று முதல் தொடங்கி நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள்
ஒரு தாளில் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி போல் விண்ணப்பங்களை
நிரப்பி அதனுடன் கல்வி மற்றும் விளையாட்டு சான்றிதழ் ஆகியவற்றினை இணைத்து
iafsportsrec@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தேர்வு நடைபெறுவதற்கு
முன்னர் அனுப்பிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Official PDF
Notification –
https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/Approved%20Advertisement%20for%20Recruitment%20of%20Outstanding%20Sportsmen%20for%20IPT%20Intake
பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் காலியாக உள்ள பணியிடங்களை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும்
உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: பாரதிதாசன் பல்கலைக்கழகம். (BDU-Bharathidasan University)
மொத்த காலியிடங்கள்: பல்வேறு
வேலை செய்யும் இடம்: திருச்சிராப்பள்ளி - தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
வேலை: Junior Research Fellow (JRF)
கல்வித்தகுதி: M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 28 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.31,000 முதல் ரூ.35,000 வரை இருக்கும்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.bdu.ac.in என்ற
இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள்
விண்ணப்பிக்கலாம்.
முகவரி - Dr. P. Muruganandam, Professor, Department of Physics, Bharathidasan University, Tiruchirappalli - 620024
மேலும்
முழு விவரங்களை அறிந்துகொள்ள
https://drive.google.com/file/d/1glamjRlMyEE-Ko8xDceYE5_goYKCENSF/view?usp=sharing
என்ற லிங்கின் மூலம் தெரிந்துக்கொள்ளலாம்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, தேர்தலுக்கு பின் செய்முறை தேர்வை நடத்த, பள்ளிக்
கல்வித் துறை முடிவு செய்துள்ளது. அதுவரை பாடங்களை நடத்தி முடிக்க
அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில்,
பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், இந்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்த தேர்வு மே, 3ல் துவங்கி, 21ம் தேதி வரை நடக்கிறது. தேர்வு தேதிக்கு
முன், ஏப்., 6ல் தமிழக சட்டசபை தேர்தல் முடிந்து விடுகிறது. இதனால், பிளஸ் 2
மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தவும், அவர்களுக்கான பாடங்களை உரிய
காலத்தில் முடிக்கவும், போதிய கால அவகாசம் கிடைத்து உள்ளது.
எனவே,
இந்த அவகாசத்தை பயன்படுத்தி, பிளஸ் 2 செய்முறை தேர்வை, சட்டசபை தேர்தலுக்கு
பின், ஏப்ரலில் நடத்தி கொள்ள பள்ளி கல்வி துறை முடிவு செய்து
உள்ளது.அதுவரை, மாணவர்களுக்கு பாடங்களை தொடர்ந்து நடத்தவும், திருப்புதல்
தேர்வுகளை நடத்தி, மாணவர்களை பொதுதேர்வுக்கு தயார்படுத்தவும், பள்ளி
ஆசிரியர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.