வேலைவாய்ப்பு: "மாதம் ரூ. 1,42,000 சம்பளம்". மத்திய அரசு வேலை. உடனே போங்க..!!
தேசிய பழங்குடி மாணவ கல்வி சங்கத்தில் காலியாக உள்ள உதவி ஆணையர், சுருக்கெழுத்தர், அலுவலக உதவியாளர் மற்றும் எம்டிஎஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 16
- பணி: Assistant Commissioner (Administrative) - 02
- பணி: Assistant Commissioner (Finance) - 01
- சம்பளம்: மாதம் ரூ.47,600 - 1,15,100
- பணி: Office Superintendent (Finance) - 02
- சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
- பணி: Stenographer Grade - I - 01
- சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
- பணி: Stenographer Grade - II - 02
- பணி: Office Assistant - 03
- சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
- பணி: Multi-Tasking Staff (MTS) - 05
- சம்பளம்: மாதம் ரூ.18,000 - 56,900
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி, இளங்கலை, பி.காம்., எம்.காம்., சிஏ, ஐசிடபுள்யுஏ, எம்பிஏ(நிதி), பிஜிடிஎம்
வயதுவரம்பு: 31.12.2020 தேதியின்படி 27 முதல் 40 வரை
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழித் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
கடைசி தேதி: 04.02.2021
விண்ணப்பிக்கும் முறை : https://tribal.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்..
Wanted Teachers, Asst. Professors...
WANTED FACULTY Applications are invited for the Post of Asst. Professors in the following Departments. • Tamil • English Mathematics • Commerce • Computer Science Physics (Qualification as per UGC norms) Non-Teaching Staff: Office Assistant, Lab Assistant, Office Attender Salary Commensurate with Qualification and Experience Eligible Candidate may send the resume and photo copy of the certificate along with recent passport size photo to THE PRINCIPAL SWAMI VIVEKANANDA ARTS & SCIENCE COLLEGE 199/1, Pillaiyarpatti Main Road, Vallam, Thanjavur-613 403. Ph: 04362-264572, 79047 33622.
பி.இ, பி.டெக் பட்டதாரிகளுக்கு இந்திய கடலார காவல் படையில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
கடலோர காவல் படையில் காலியாக உள்ள அசிஸ்டன்ட் கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 25 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : கடலோர காவல் படை
மேலாண்மை : மத்திய அரசு
பணி : அசிஸ்டன்ட் கமாண்டன்ட்
மொத்த காலிப் பணியிடங்கள் : 25
கல்வித் தகுதி : இந்திய கடலோர காவல் படையின் Assistant Commandant பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் பி.இ, பி.டெக் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் 27.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தேர்வு முறை : குறுகிய பட்டியல், மன திறன் சோதனை / அறிவாற்றல் திறன் சோதனை மற்றும் பட புலனுணர்வு மற்றும் கலந்துரையாடல் சோதனை (பிபி & டிடி)
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.joinindiancoastguard.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
source: tamil.careerindia.com
பட்டதாரிகளுக்கு எஸ்பிஐ வங்கியில் வேலை: வாய்ப்பை நழுவவிடாதீர்கள் :
பாரத ஸ்டேட் வங்கியில் நிரப்பப்பட உள்ள 452 துணை மேலாளர், பொறியாளர், உதவி மேலாளர், திட்ட மேலாளர், டெக்னிக்கல் போன்ற பணியிடங்களுக்கு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
(விளம்பர எண். CRPD/SCO-FIRE/2020-21/32, CRPD/SCO/2020-21/31, CRPD/SCO/2020-21/30, CRPD/SCO/2020-21/29, CRPD/SCO/2020-21/28, CRPD/SCO/2020-21/27, CRPD/SCO/2020-21/14)
மொத்த காலியிடங்கள்: 452
பணி மற்றும் காலியிடங்கள்:
பணி: Deputy Manager - 131
பணி: Engineer - 16
பணி: Manager - 46
பணி: Assistant Manager - 223
பணி: IT Security Expert - 15
பணி: Project Manager - 14
பணி: Application Architect - 05
பணி: Technical Lead - 02
தகுதி: சிஏ, பிஇ, பி.டெக், எம்சிஏ, எம்பிஏ, பிசிடிபிஎம் முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதி மற்றும் வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளவும். பொதுவாக 31.10.2020 தேதியின்படி 40 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: https://www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.750. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2021
மேலும் சம்பளம், பணி அனுபவம் போன்ற விவரங்கள் அறிய https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற லிங்கில் சென்று கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு அறிவிப்பாக படித்து தகுதியான பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
ரூ. 40,000 சம்பளத்தில் தேசிய பல்லுயிர் ஆணையத்தில் வேலைவாய்ப்பு :விண்ணப்பிக்க கடைசி தேதி : 21.12.2020 :
சென்னை தேசிய பல்லுயிர் ஆணையத்தில் பல்வேறு காலி பணியிடங்களை நிரப்புவதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள் :
Young Professional I/ II/ III : 23 காலிப்பணியிடங்கள்
சம்பளம் :
ரூ. 40,000 முதல் 55,000/- வரை
கல்வித் தகுதி :
Bachelor Degree/ Master Degree/ Doctoral Degree/ LLB/ BL மேலும் விபரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
வயது வரம்பு :
30 வயது முதல் 45 வயது வரை
தேர்வு முறை :
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் http://nbaindia.org/ ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள http://nbaindia.org/uploaded/pdf/Wesbite%20advertisement.pdf அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
எழுத படிக்க தெரிஞ்சா போதும். உள்ளூரில் அரசு வேலை. விரைவில் முந்துங்கள்..!!
தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறையில் காலியாக உள்ள சமையலர் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
நிறுவனம் : தஞ்சாவூர் ஆதி திராவிடர் நலத்துறை
பணியின் பெயர் :சமையலர்
பணியிடங்கள் : 32
கடைசி தேதி : 24.12.2020
வயது வரம்பு: 18 முதல் 35 வயதுக்குள்
தகுதிகள்:
விண்ணப்பத்தாரர் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
முன்னுரிமை : ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
தஞ்சாவூர் மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில்
விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவுஅஞ்சல் மூலமாகவோ , மாவட்ட ஆதி
திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு 24.12.2020 க்குள்
விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கூடுதல் தகவல்களுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
https://cdn.s3waas.gov.in/s3b7b16ecf8ca53723593894116071700c/uploads/2020/12/2020120846.pdf
1 4 லட்சம் ரயில்வே பணியாளர் போட்டித் தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகள் வெளியீடு.
வரும் 15ம் தேதி முதல் நடக்க உள்ள ரயில்வே பணியாளர் போட்டித் தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகள், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 1.4 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அழைப்பு, இந்தாண்டு ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு 2.44 லட்சம் பேர் இதற்காக விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், கொரோனா நோய் தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை முதல் கட்ட தேர்வு நடத்தப்படுகிறது.
* முதல் கட்ட தேர்வு டிசம்பர் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடைபெறும்.
* 2வது கட்ட தேர்வு டிசம்பர் 28ம் தேதி முதல் மார்ச் 2021 வரையிலும், 3வது கட்ட தேர்வு 2021ம் ஆண்டு ஜூன் இறுதியில் நடைபெறும்.
* தேர்வு எழுதுபவர்கள் தேர்வு எழுதுவதற்கான உடற்தகுதி இருக்கிறது என்றும், கொரோனா பாசிட்டிவ் இல்லை என்றும் உறுதி பத்திரத்தை வழங்க வேண்டும்.
* தேர்வு மையத்தில் நடத்தப்படும் வெப்ப பரிசோதனையில் அதிக வெப்பம் இருந்தால், அவர்களின் தேர்வு தேதி மாற்றி அமைக்கப்படும்.
* தேர்வர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்,
* ஆர்ஆர்பி
இந்நிலையில், இத்தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகளை தனது இணையதள முகவரியில் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இதை விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப பதிவு எண்களையும், பிறந்த தேதியையும் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அது அறிவித்துள்ளது.
SBI வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸ் இல்லையா..? தற்போது வசூலிக்கப்படும் புதிய கட்டணம் எவ்வளவு..?
எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்போர் மினிமம் பேலன்ஸ் எனப்படும் குறைந்தபட்ச பேலன்ஸ் தொகை வைக்கவில்லை என்றால் வசூலிக்கப்படும் தொகை விவரம் குறித்து எஸ்பிஐ வெளியிட்டுள்ளது.
தேர்வில்லாத வங்கி வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்..
Central Bank of India-ல் Counselor FLCC BALAGHAT பதவிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 01 காலியிடங்கள் உள்ளது. இந்த வேலைக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
முழு விவரம்:
நிறுவனம் : Central Bank of India
பணியின் பெயர் : Counselor
பணியிடங்கள் : 01
வயது : 65 வயதிற்குள்
விண்ணப்பிக்கும் முறை : Online
கடைசி தேதி : 05.12.2020
மேலும் இந்த பணிக்கான முழு விவரங்களை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால் கீழேயுள்ள லிங்க் கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
https://www.tamilyugam.in/wp-content/uploads/2020/12/Advertiesment-for-Counseler-at-FLCC-BALAGHAT.pdf
நிரந்தர பணியிடங்கள் - வேலை வாய்ப்பு செய்திகள். ( REGULAR VACANCIES - GOVT.AIDED COLLEGE ) | :
ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி ( Govt Aided College Co - Educational Institution ) | Surya குமாரபாளையம் -638 183 , நாமக்கல் மாவட்டம் , தமிழ்நாடு , ஆசிரியரல்லாத பணியாளர்கள் ( REGULAR VACANCIES - GOVT.AIDED COLLEGE ) | am.is. க.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அரசு நிதி உதவிபெறும் பிரிவில் காலியாக உள்ள கீழ்க்காணும் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம்-நேரடி நியமன அறிவிக்கை -உதவி பொது மேலாளர்-SALARY -LEVEL -27 RS, 62,200- 1,97,200
அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும்: ராமதாஸ்:
அரசு பள்ளி மாணவர்களின் மருத்துவ கல்வி கட்டணத்தை அரசே ஏற்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில், மருத்துவம் பயில இடம் கிடைத்தும், அதிகளவு கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு அரசு பள்ளி மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார். தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆண்டு கல்விக் கட்டணமாக 4 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது என்றும், இவை அனைத்தும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்கள் என்றாலும், மறைமுகமாக 3 லட்சம் ரூபாய் வரை கட்டணமாக தனியார் கல்லூரிகளால் வசூலிக்கப்படுகின்றன என குற்றம்சாட்டினார்.
சமூகநீதியின் அடிப்படையில் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு படிக்க ஏற்பாடு செய்த தமிழக அரசு, கட்டணம் செலுத்துவதற்கும் உதவி செய்து அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பைப் படிக்க உதவ வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மாணவர்களுக்கு, அரசே கட்டணம் செலுத்துவதன் மூலம் தனியார் கல்லூரிகளில் மறைமுகக் கட்டணம் வசூலிக்கப் படுவதையும் தடுக்கலாம் என்றும், அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்த மாணவர்களின் கட்டணத்தையும் கல்வி உதவித் தொகையில் ஈடுசெய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.
எனவே, மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளில் சேரத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள 405 மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் அரசே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும், அதன் மூலம் ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்ற வேண்டும் எனவும் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மாணவர்கள் அறிய வேண்டிய சமூகவலைத்தள விழிப்புணர்வு :
சமூக வலைத்தளத்திற்கு செல்லும் குழந்தைகளை பெற்றோரும், ஆசிரியரும் எப்படி வழி நடத்த வேண்டும். மாணவர்கள் சமூக வலைத்தளங்களை எப்படி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்? என்பது பற்றி சிறிது சிந்திப்போம்...
உணர்வுப்பூர்வமான தொடர்பு ஆன்லைன் வகுப்புகளில் இல்லை; பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர் கருத்து: அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழக ஆய்வு முடிவு;
ஆன்லைன் கல்வி குறித்த கட்டுக்கதைகள்' என்ற தலைப்பில் பெங்களூருவில் உள்ள அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் அண்மையில் ஆய்வு நடத்தியது. கர்நாடகம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தராகண்ட் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 26 மாவட்டங்களைச் சேர்ந்த 1,522 பள்ளிகளில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில், ஆன்லைன் வகுப்புகள் நடத்தும்போது உணர்வுப்பூர்வமான தொடர்பு மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் ஏற்படவில்லை என்று பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் கல்வி மூலமாக மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கிடைக்கும் அனுபவம் குறித்து இந்த ஆய்வை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் மேற்கொண்டது. 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் ஐந்து மாநிலங்களைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடம் இந்த ஆய்வானது நடத்தப்பட்டது. இதன் முடிவுகளை அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
அதில் குறிப்பிடப்பட்டவை:
'இந்த ஆய்வில் பங்கேற்ற ஆசிரியர்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோர் ஆன்லைன் வகுப்புகளின்போது தங்களுடைய மாணவர்களுடன் உணர்வுப்பூர்வமாகத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தெரிவித்துள்ளனர். அதேபோல ஆன்லைன் வழியில் தாங்கள் கற்பிக்கும் பாடம், மாணவர்கள் மனத்தில் சரியாகப் பதிகிறதா என்பதை மதிப்பீடு செய்ய முடியவில்லை என்று 90 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆன்லைன் வகுப்பு முடிந்த பிறகு மாணவர்கள் வீட்டுப் பாடங்களைச் சரியாகச் செய்யாததால் கற்றலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக 50 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். தங்களுடைய குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் முழுமையான கல்வி பெறவில்லை என்று 70 சதவீதப் பெற்றோர் தெரிவித்துள்ளனர். திறன்பேசி இல்லாததால் 60 சதவீதக் குழந்தைகளுக்கு ஆன்லைன் கல்வி சென்றடையவில்லை. உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பத் தயாராக இருப்பதாக 90 சதவீதப் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பள்ளிக்கூடங்கள் வழக்கப்படி திறக்கப்பட்டால் தங்களுடைய குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குப் பாதிப்பு ஏற்படும் என்ற அச்சமில்லை என்று 65 சதவீதப் பெற்றோர் கருத்துத் தெரிவித்துள்ளனர். மொத்தத்தில், கல்வியை ஆன்லைன் வழியாகக் கொண்டு சேர்ப்பதில் போதாமையும் குறைபாடுகளும் காணப்படுவதாக இந்த ஆய்வில் பங்கேற்ற பெருவாரியான ஆசிரியர்களும் பெற்றோரும் தெரிவித்துள்ளனர். உரிய சுகாதார, பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் தங்களுடைய குழந்தைகளைப் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பிவைக்க பெரும்பாலான பெற்றோர் தயாராக இருப்பதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. இணைய வசதி இல்லாதது, ஆன்லைன் பாடக் குறிப்புகள் கிடைக்காதது ஆகியவை மட்டுமே சிக்கல் அல்ல.
பள்ளி வயதுக் குழந்தைகளுக்கு நேரடியாக அல்லாமல் ஆன்லைன் வழியாகக் கற்பிப்பது போதுமானதாக இல்லை. பள்ளிப் பருவத்தினருக்குச் சிறந்த முறையில் கற்பிக்க ஆசிரியரும் மாணவரும் நேருக்கு நேர் சந்திப்பது, கவனம், சிந்தனை, உணர்வு இவை அனைத்தும் முக்கியத்துவம் பெறுகிறது. படிப்படியாக, ஒவ்வொரு மாணவருக்கு ஏற்றாற்போல கல்வி கற்பிக்கப்பட வேண்டியது அவசியம். பேச்சு மொழி மட்டுமின்றி உடல்மொழிக்கும் இதில் முக்கியப் பங்குள்ளது. இவை அனைத்தும் அசல் வகுப்பறையில்தான் சாத்தியப்படும்'.
இவ்வாறு அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.. கொரோனா இல்லாத முதல் மாவட்டமாக மாறிய மாவட்டம்.!
தமிழகத்தில் கொரோனா வைரஸின் பரவல் தொடர்ந்து அதிகரித்து வந்தது. தினமும் அதிகரித்து கொண்டு வந்த கொரோனா பரவலின் காரணமாக மக்கள் பீதியில் இருந்தனர். அரசும் சோதனைகளை அதிகப்படுத்தி கொண்டே வந்தது. பல தடுப்பு நடவடிக்கைகளும் அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனா பரவல் தொடர்ந்து குறைந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று கொரோனாவால் 1,725 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7,59,916 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 2,384 பேர் பூரண நலன் பெற்றதையடுத்து, இதுவரையிலும் பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 7,32,656 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 17 பேர் பலியானதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 11,495 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று மேலும் 497 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,09,167 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா இல்லாத முதல் மாவட்டமானது பெரம்பலூர் மாவட்டம். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2,228 பேரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று ஒருவருக்கு கூட கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை. பெரம்பலூர் மாவட்டத்தில் இதுவரை 21 பேர் கொரோனாவிற்கு உயிரிழந்துள்ளனர்.
7.5% உள் ஒதுக்கீட்டால் 395 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் - அமைச்சர் விஜயபாஸ்கர்!
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி இன்னும் ஒருசில நாளில் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், 395 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மருத்துவப் படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதற்கு முன்பே தமிழக அரசு அந்த சட்ட மசோதாவுக்கான அரசாணையை வெளியிட்டது. மருத்துவம் படிக்க மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அதற்கான கலந்தாய்வு தேதி இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "தமிழகத்தில் இந்த ஆண்டு 4,061 மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 18-ம் தேதி அல்லது நவம்பர் 19-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கப்படலாம். ஒரு நாளைக்கு 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். 7.5% உள் ஒதுக்கீடு மூலம் எம்.பி.பி.எஸ் சில் 304, பி.டி.எஸ் சில் 91 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் 16-ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்." என்று கூறியுள்ளார்.
FLASH NEWS : தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து பரிசீலிக்கப்படும் -முதலமைசர் எடப்பாடி பழனிச்சாமி :
சென்னை மட்டுமல்ல இந்த 5 மாவட்ட மக்களும் உஷார்.. வானிலை மையம் கனமழை எச்சரிக்கை !Not only Chennai but also the people of these 5 districts are alert .. Weather Center Heavy rain warning!
தமிழக கடலோர பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்திற்கு ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் கூறியிருந்தது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அடுத்த 24 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தற்போது தெரிவித்துள்ளது
மணிக்கு 40 - 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் 2 நாட்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழக மீன்வளத்துறை விடுத்த எச்சரிக்கையின் பேரில் இன்றும் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in