Skip to content

12 ம் வகுப்பு படித்தவர்களுக்கு இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்பு....

நம் இந்திய ராணுவத்தில் டெக்னிக்கல் என்ட்ரி பிரிவில்  12 ம் வகுப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு உடனே விண்ணப்பியுங்கள்



பணி : 
டெக்னிக்கல் என்ட்ரி
கல்வித்தகுதி : 
12 ம் வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதத்தில் குறைந்தது 70 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

வயது வரம்பு: 
16.5 - 19.5 வயதுக்குள் இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க:

http://www.joinindianarmy.nic.in/Authentication.aspx

விண்ணப்பிக்க கடைசிநாள் : 
9.9.2020
மேலும் விபரங்களுக்கு:
https://joinindianarmy.nic.in/writereaddata/Portal/NotificationPDF/TES_44.pdf

ரயில்வே போட்டி தேர்வுகளில் பங்கேற்க தமிழக இளைஞர்களுக்கு ஆர்வமில்லை: தேர்வு வாரிய தலைவர் தகவல்:

ரயில்வே போட்டித்தேர்வுகளில் தமிழக இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று பெங்களூரூ ஆர்ஆர்பி தலைவர் காசிவிஸ்வநாதன் தெரிவித்தார்.
இந்தியாவில் ரயில்வே, வங்கிகள் உள்ளிட்ட மத்திய துறைகளில் தொழில்நுட்பம் சாராத பணிகளுக்கு நாடு முழுவதும் ஒரே பொது தகுதித்தேர்வை (சிஇடி) நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் சென்னை மண்டல பத்திரிகை தகவல் மையம் (பிஐபி) சார்பில் என்ஆர்ஏ தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கம், இணையவழியில் நேற்று நடத்தப்பட்டது. இதில் சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தின் (ஆர்ஆர்பி) தலைவர் ஸ்ரீனிவாசரெட்டி பேசும்போது, ‘‘சிஇடி தேர்வால் கிராமப்புற தேர்வர்கள்,பெண்கள் பெரிதும் பயனடைவார்கள். மேலும், ஒரே தேர்வர் பலமுறை முதல்நிலைத் தேர்வு எழுதுவது தவிர்க்கப்படும். இதற்கான பாடத்திட்டம் தேசிய அளவில் உருவாக்கப்படும்’’ என்றார்.

நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் நாளை போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு:

neet-exam-jee-2020-postponement-congress-to-hold-nationwide-protests-on-august-28-against-conduct-of-exams
நீட், ஜேஇஇ தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஆக.28-ம் தேதி (நாளை) போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் செப்டம்பர் 1 மற்றும் 6 தேதிகளில் ஜேஇஇ (மெயின்) நுழைவுத் தேர்வும், செப்டம்பர் 27-ம் தேதி ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வும், செப்டம்பர் 13-ம் தேதி நீட் தேர்வும் நடத்தப்பட உள்ளது.
நீட் தேர்வுக்கு தேசிய அளவில் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் விண்ணப்பித்துள்ளனர். ஜேஇஇ நுழைவுத் தேர்வை (மெயின்) எழுத 6,58,273 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இந்தச் சூழலில், கரோனா வைரஸ் தொற்றின் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தேர்வுகளைத் தள்ளிவைக்க வேண்டும் என்று மாணவர்களும் அரசியல் தலைவர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறும் என்று என்டிஏ தெரிவித்துள்ளது. தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவும் கடந்த வாரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில், தேர்வுகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் ஆக.28-ம் தேதி (நாளை) போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''கோவிட் பெருந்தொற்று சூழலில் தேர்வுகளை நடத்தும் அரசின் முடிவு மாணவர்கள் மத்தியில் பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அரசின் சர்வாதிகார நடவடிக்கை இது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் நுழைவுத் தேர்வுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். தேர்வுகளை தள்ளி வைக்கக் கோரியுள்ளனர்.
இதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மாநிலப் பிரிவுகள் சார்பில் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்குப் போராட்டம் நடைபெற உள்ளது. மாநிலம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் போராட்டம் நடத்தப்படும்.
அனைத்துப் போராட்டங்களும் சமூக இடைவெளி விதிமுறைகளை முறையாகக் கடைப்பிடித்தே நடைபெறும். அதேபோலக் கட்சி சார்பில் ஆன்லைன் போராட்டமும் நடைபெற உள்ளது. வெள்ளிக்கிழமை காலை 10 மணியில் இருந்து சமூக வலைதளங்களில் தேர்வுகளைத் தள்ளி வைக்கக் கோரிப் பதிவுகள் இடப்படும். ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் பக்கங்களில் #SpeakUpForStudentSaftey என்ற ஹேஷ்டேகில் பதிவுகளைப் பகிரலாம்'' என்று கூறப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைமை செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்திய அரசின் முடிவால் 25 லட்சம் மாணவர்களின் உடல்நலனும் பாதுகாப்பும் ஆபத்துக்கு உள்ளாக்கப்பட்டிருப்பதாகவும் இதனால் நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

CHAPTER WISE QP FOR NEET BIOLOGY - XII (அனைத்து பாடங்களும் ஒரே பக்கத்தில் 12ஆம் வகுப்பு உயிரியல் ஆங்கில வழி )

NEET BIOLOGY VIDEOS - HUMAN HEALTH AND DISEASE -2020

வங்கி பணியாளர் தேர்வுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு :

 
வங்கி பணியாளர் தேர்வுக்கு இலவச இணையதள பயிற்சி வகுப்பு அளிக்கப்படுவதாக, கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு, இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தற்போது கொரோனா ஊரடங்கால் தேர்வுக்கு தயாரான மாணவர்களுக்கு, வீட்டில் இருந்தபடியே 2020ம் ஆண்டு வங்கி பணியாளர் தேர்வுக்கு ஆன்லைன் மூலமாக இலவச இணையதள பயிற்சி வகுப்புகள் (24ம் தேதி) நேற்று முதல் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பமுள்ளவர்கள் 044-27237124 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது பெயரை பதிவு செய்து பயன்பெறலாம். விண்ணப்பிக்க கடைசி 26ம் தேதி (நாளை). தேர்வுகள் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது.

ஜே.இ.இ., நீட் தேர்வுகளை தள்ளி வைக்க கோரி மோடிக்கு மம்தா கடிதம் :

புதுடில்லி: மாணவர்களின் பாதுகாப்பு கருதி நீட் மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளை தள்ளி வைக்க வேண்டும் என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் நுழைவுத் தேர்வை, ஜூலை, 26ம் தேதி நடத்த, என்.டி.ஏ., எனப்படும் தேசிய தேர்வு முகமை ஏற்கனவே திட்டமிட்டிருந்தது.

இந்த வருடம் மட்டும் நீட் தேர்வு வேண்டாம்! ராகுல் காந்தி ட்வீட்!


இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு செப்டம்பர் 13ம் தேதியும், ஜேஇஇ முதன்மைத் தேர்வு செப்டம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதியும் நடைபெறவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.



நீட் மற்றும் ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளங்கள் மூலமாக மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர். மேலும் அரசியலை கட்சி தலைவர்களும் இதே கோரிக்கையை மத்திய அரசுக்கு வலியுறுத்தி வருகின்றனர்.



இந்நிலையில், மாணவர்களுக்கு ஆதரவாக ராகுல் காந்தி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பதிந்துள்ளார், அதில், "ஜேஇஇ மற்றும் நீட் தேர்வு தொடர்பான மாணவர்களின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்றும், அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க முடிவை மத்திய அரசு எட்ட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி கல்வி அமைச்சருமான மனிஷ் சிசோடியா நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு கல்லூரியில் செல்போன் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும்!

 
கொரோனா பாதிப்பின் காரணமாக 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு தாமதம் ஆனது. அதன் காரணமாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையும் கிடப்பில் போடப்பட்டது. கடந்த மாதம் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானதால், அனைத்து தனியார் கல்லூரிகளிலும் ஆன்லைன் வாயிலாக மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. அதே போல, அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் வரும் 28 ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டது.

கரோனா அச்சம்: ஜேஇஇ, நீட் தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும்; ஜி.கே.வாசன்


ஜேஇஇ, நீட் தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜி.கே.வாசன் இன்று (ஆக.23) வெளியிட்ட அறிக்கை:
"ஜேஇஇ தேர்வு வருகிற செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரையும் நீட் தேர்வு வருகிற செப்டம்பர் மாதம் 13-ம் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களும் பெற்றோர்களும் கரோனா தொற்றின் காரணமாக நீட் தேர்வை தள்ளி வைக்கும்படி உயர் நீதிமன்றத்தி;ல் வழங்கு தொடுத்து இருந்த நிலையில், உயர் நீதிமன்றம் நீட் தேர்வை தள்ளிவைக்க முடியாது, மத்திய அரசின் கொள்கை முடிவின்படி குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.
ஜேஇஇ/நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏற்கெனவே பல்வேறு கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளது. இந்த கரோனா காலக்கட்டத்தால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் எடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆதலால் தேர்வு மையங்களுக்குப் பல்வேறு இடங்களில் இருந்து பல கிலோ மீட்டர் கடந்து வந்து மாணவர்களின் பெற்றோர்கள், மாணவர்களை தேர்வு மையத்திற்கு அழைத்து வரவேண்டியுள்ளது. அதோடு தூரத்தில் இருந்து வருபவர்கள் கரோனாவின் காரணங்களால் உணவகங்களில் தங்கவோ உணவு அருந்தவோ அச்சமான சூழ்நிலை நிலவுகிறது.
மூக்குக் கண்ணாடி அணியும் மாணவர்கள், கண்ணாடி அணிந்து கொண்டும், முகக்கவசம் அணிந்து கொண்டும் தேர்வு எழுதும் போது மூச்சுக் காற்றின் வெப்பத்தினால் கண்ணாடி மறைக்கப்பட்டு சிரமம் எற்படுகிறது. முகக்கவசத்தை எடுத்து விட்டால் நோய்த்தொற்றும் அபாயம் உள்ளது. அதோடு பல்வேறு மாநிலங்களில் இயற்கை சீற்றத்தால் மழை வெள்ளத்தினால் வெளியே வரமுடியாத சூழ்நிலை உள்ளது. உலக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், 10 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், பல்வேறு காரணங்களால் நடைமுறை சிக்கல்களாலும் மன அழுத்தத்திற்கு மாணவர்கள் உள்ளாகி சிலர் தற்கொலை செய்துகொண்டு இருக்கின்றர். அதோடு மன அழுத்தம் காரணமாக படிப்பதிலும் தேர்வு எழுதுவதிலும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அச்சத்தின் காரணமாக நன்கு படிக்கும் மாணவர்களால் கூட மனரீதியாக பாதிக்கப்பட்டு தேர்வில் முறையாக கவனம் செலுத்த முடியாமல் அவதியுறுகின்றர். ஆகவே, மாணவர்களின் அச்சம் நீங்கி இயல்பால நிலை வரும்போதுதான் மாணவர்களால் ஆர்வமாக தேர்வு எழுதும் சூழ்நிலை வரும்.
ஆகவே, மத்திய அரசு மாணவர்களின் மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும் எதிர்கால நலன் கருதியும் ஜேஇஇ/நீட் தேர்வை கரோனா நோய்த்தொற்றுக் கட்டுக்குள் வந்த பிறகு ஒரு சில மாதங்கள் கழித்து வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆகவே, மத்திய அரசையும் மத்திய கல்வி அமைச்சகத்தையும் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று மாணவர்கள் சார்பாகவும் பெற்றோர்கள் சார்பாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்"
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

TNPC GROUP IV VAO UNIT 9 தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு வினாக்கள் மற்றும் விடைகளுடன் :

  • TNPC GROUP IV VAO UNIT 9 தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு சமூக மறுமலர்ச்சி இயக்கங்களின் பங்களிப்பு வினாக்கள் மற்றும் விடைகளுடன் :UNIT 9 PART 1 PDF CLICK HERE
  • VAO UNIT 9 PART 2 NEXT LESSON HUMAN DEVELOPMENT PDF CLICK HERE 

TNPSC CURRENT AFFAIRS AUGUST MONTH UP TO 14TH 2020: |_SHANKER IAS ACADEMY _ BRAMMA IAS ACADEMY |

  • TNPSC CURRENT AFFAIRS PART-1 ENGLISH MEDIUM _SHANKER IAS ACADEMY CLICK HERE
  • TNPSC CURRENT AFFAIRS PART-2 ENGLISH MEDIUM _SHANKER IAS ACADEMY CLICK HERE
  • TNPSC CURRENT AFFAIRS PART-1 ENGLISH MEDIUM _BRAMMA IAS ACADEMY CLICK HERE
  • TNPSC CURRENT AFFAIRS PART-2 ENGLISH MEDIUM _BRAMMA IAS ACADEMY CLICK HERE
  • TNPSC CURRENT AFFAIRS PART-3 ENGLISH MEDIUM _BRAMMA IAS ACADEMY CLICK HERE
  • TNPSC CURRENT AFFAIRS PART-4 TAMIL MEDIUM _BRAMMA IAS ACADEMY CLICK HERE
  • TNPSC CURRENT AFFAIRS PART-1 TAMIL MEDIUM _TNPSC GATE WAY CLICK HERE
  • TNPSC CURRENT AFFAIRS PART-3 ENGLISH MEDIUM _DELHI IAS ACADEMY CLICK HERE   
  • TNPSC CURRENT AFFAIRS PART-3 ENGLISH MEDIUM _DELHI IAS ACADEMY CLICK HERE   

TNPSC GROUP II,IIA IV & VAO 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டத்தின் படி வரி வரியாக எடுக்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள்: 690 பக்கங்களை கொண்ட PDF:


  • TNPSC GROUP II,IIA IV & VAO 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டத்தின் படி வரி வரியாக எடுக்கப்பட்ட கேள்விகள் மற்றும் பதில்கள்: 690 பக்கங்களை கொண்ட PDF CLICK HERE

TNPSCன் அனைத்து தேர்விற்கும் பயன்படும் வகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு பயிற்சி மையங்களில் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வைக்கப்பட்ட வினாத்தாள்கள் விடைகளுடன் .

TNPSCன் அனைத்து தேர்விற்கும் பயன்படும் வகையில் தமிழகத்தில் உள்ள  பல்வேறு பயிற்சி மையங்களில் ஆன்லைன் வழியாக மாணவர்களுக்கு வைக்கப்பட்ட வினாத்தாள்கள் விடைகளுடன் .
  1.  ONLINE TEST 1 QUESTION WITH ANSWER- BHARATHIDASAN COACHING CENTRE OMALUR SALEM CLICK HERE
  2.  ONLINE TEST 2  QUESTION WITH ANSWER- BHARATHIDASAN COACHING CENTRE OMALUR SALEM CLICK HERE
  3.  ONLINE TEST 1 QUESTION WITH ANSWER- TALENT IAS ACADEMY KARUR CLICK HERE
  4.  ONLINE TEST 1 QUESTION WITH ANSWER- TALENT IAS ACADEMY KARUR CLICK HERE
  5.  ONLINE TEST 1 QUESTION WITH ANSWER- TALENT IAS ACADEMY KARUR CLICK HERE
  6.  ONLINE TEST 1 QUESTION WITH ANSWER- TNPSC NANBAN CLICK HERE
  7.  ONLINE TEST 1 QUESTION WITH ANSWER- TNPSC NANBAN CLICK HERE
  8.  ONLINE TEST 1 QUESTION WITH ANSWER-  TNPSC NANBAN CLICK HERE
  9.  ONLINE TEST 1 QUESTION WITH ANSWER- TALENT IAS ACADEMY KARUR CLICK HERE 
  10.  ONLINE TEST 1 QUESTION WITH ANSWER- BHARATHIDASAN COACHING CENTRE OMALUR SALEM CLICK HERE

TNPSC EXAM PREPARATION | இந்திய குடிமையியல் 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :


இந்திய குடிமையியல்   6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :
மாணவர்களின் நலன் கருதி வெளியிடுவதில் கல்விக்குரல் பெருமைப்படுகிறது.
ஆக்கம் :இந்திரா பயிற்சி மையம் மணிவிழுந்தான்.சேலம் மாவட்டம் 

TNPSC EXAM PREPARATION | இந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :


இந்திய வரலாறு 6ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :
மாணவர்களின் நலன் கருதி வெளியிடுவதில் கல்விக்குரல் பெருமைப்படுகிறது.
ஆக்கம் :இந்திரா பயிற்சி மையம் மணிவிழுந்தான்.சேலம் மாவட்டம் 

TNPSC EXAM PREPARATION |இயற்பியல் 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :


இயற்பியல் 6ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை | புதிய புத்தகத்தில் இருந்து வரி வாரியாக தொகுக்கப்பட்டவை :
மாணவர்களின் நலன் கருதி வெளியிடுவதில் கல்விக்குரல் பெருமைப்படுகிறது.
ஆக்கம் :இந்திரா பயிற்சி மையம் மணிவிழுந்தான்.சேலம் மாவட்டம்