ONLINE REGISTRATION OF APPLICATION & PAYMENT OF FEES: FROM 14.11.2020 TO 04.12.2020-DOWNLOAD THE NOTIFICATION BELOW LINKS- KINDLY SHARE TO ALL
சிதம்பரம் அடுத்த சீர்காழிக்கு அருகே இருக்கிறது பெரம்பூர் கிராமம். இந்த கிராமமே ஒரு பறவைகள் சரணாலயமாகிவிட்டது. அந்த அளவிற்கு ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மரங்களில் 100க்கும் மேற்பட்ட பறவைகள் வசிக்கின்றன.
இக்கிராமத்தில் 150 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. அதனாலேயே அக்கிராமத்தினர் இதுவரையிலும் தீபாவளி பண்டிகையினை கொண்டாடுவதில்லை.
வவ்வால்களை தங்கள் கிராமத்தின் கடவுகளாகவே பாவித்து வருகிறார்கள் அம்மக்கள். பட்டாசு வெடித்தால் பறவைகள் பறந்துவிடும் என்பதால், பட்டாசு வெடிக்கக்கூடாது என்று அக்கிராமத்தினர் ஊர்க்கட்டுப்பாடு போட்டிருக்கிறார்கள். கிராமத்தினரும் பல வருடங்களாக அந்தகடுப்பாட்டினை மீறாமல் இருந்து வருகிறார்கள்.
தீபாவளி திருநாளில் மட்டுமல்லாது சுப, அசுப நிகழ்ச்சிகளுக்கும் கூட அவர்கள் வெடி வெடிப்பதில்லை.
வவ்வால்கள் மட்டும் இருந்த இந்த ஊரில் சில ஆண்டுகளாகவே வெளிநாட்டுப்பறவைகளும் வருவதால் அரசு அங்கே சரணாலயம் அமைக்க வேண்டும் எதிர்பார்க்கிறார்கள் பெரம்பூர் கிராமத்தினர்.
வங்கக் கடலில் நிலவும் மேலடுக்குச் சுழற்சி தமிழகக் கடற்பகுதி நோக்கி நகர்வதன் காரணமாக, தமிழகம், புதுவையில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.10 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு பி.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு ஈரோடு மாவட்டத்தில் காலியாக உள்ள Junior Draughting Officer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 17 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணிகளுக்கு ரூ.1.12 லட்சம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம். ஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! ஈரோடு மாவட்டத்தில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! நிர்வாகம் : தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை- ஈரோடு மேலாண்மை : தமிழக அரசு பணி : Junior Draughting Officer மொத்த காலிப் பணியிடங்கள் : 17 கல்வித் தகுதி : டிப்ளமோ சிவில் பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு : விண்ணப்பதாரர் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும். விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://Erode.nic.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 08.12.2020 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 08.12.2020 தேதிக்குள் விண்ணப்பம் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும். தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://Erode.nic.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும். Download File Download
ஃப்ரீடயாபட்டீஸ் என்றால் நீரீழிவு நோய் என்று பயப்பட வேண்டாம். இது ரத்தத்தில் சர்க்கரை அளவை வழக்கத்தை விட சற்று அதிகமாக கொண்டிருக்கும். ஆனால் டைப் 2 நீரிழிவு கிடையாது. ஆனால் இந்த நிலையை பலரும் கொண்டிருக்க வாய்ப்புண்டு. இந்த நிலை வந்தவர்களுக்கு நீரிழிவு நொயால் பாதிக்கப்படும் உறுப்புகளில் இதயம், ரத்த நாளங்கள், சிறுநீரகங்கள் தொடங்கி இருக்கலாம். ஆனால் இதில் ஒரு நல்ல விஷயமும் உண்டு. ஃப்ரீடயபாட்டிஸ் கொண்டிருப்பவர்கள் கண்டிப்பாக நீரிழிவு 2 எதிர்கொள்ள கூடும் என்பது நிச்சயமில்லை.
இந்த நிலை வந்தவர்கள் ஆரோக்கியமான உணவு, உடல் உழைப்பு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது ரத்த சர்க்கரை அளவு இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். அப்படியான ஆரோக்கிய உணவுகள் போன்று தவிர்க்க வேண்டிய உணவுகள் குறித்தும் தெரிந்துகொள்ள வேண்டும்.
ஃப்ரீடயபட்டீஸ் பரிசோதனையின் போது மட்டுமே கண்டறிய கூடியதல்ல. இந்த நிலையிலும் அறிகுறிகள் உண்டு. பொதுவான அறிகுறிகள் இல்லை என்றாலும் சிலருக்கு சருமத்தில் கருமை நிறம் உண்டாக கூடும். கழுத்து, அக்குள், முழங்கைகள், முழங்கால்கள் போன்றவற்றிலும் கருமை படரும். இது ஃப்ரீடயாபட்டீஸை கண்டறியாமல் அலட்சியப்படுத்தும் போது அறிகுறிகள் அதிகரிக்கும்.
படிப்படியாக அவை அதிகரிக்கும் போது தாகம் அதிகரித்து அடிக்கடி சிறுநீர் வரும், பசி உணர்வு அதிகரிக்கும், உடல் சோர்வு உண்டாகும். பார்வையில் மங்கல் வரக்கூடும். சிலருக்கு எடை அதிகரிக்கும். சரும பிரச்சனை உண்டாகும். இவையெல்லாம் நீங்கள் ஃப்ரீடயபாட்டீஸிலும் முதிர்ந்த நிலையில் இருக்கிறீர்கள் என்று சொல்லலாம்.
ஃப்ரீடயபாட்டீஸ் காரணம் இதுதான் என்று சொல்ல முடியவில்லை. ஆனால் குடும்ப பிண்ணனி, மரபியல் காரணங்கள் முக்கிய பங்கு வகிக்கிறது.உடல் எடை கட்டுக்குள் இல்லாமல் அதிக எடையுடன் அடிவயிற்றில் அதிக கொழுப்புடன் இணைக்கப்பட்டு இருப்பதும் இதற்கான முக்கிய காரணம் என்று சொல்லலாம்.
உடல் செயல்பாடுகள் வழக்கத்தை காட்டிலும் குறைவாக இருந்தாலும் இந்த நிலை உருவாகலாம்.இந்த ஃப்ரீடயாபட்டீஸ் வந்தால் உடலில் தசைகள் மற்றூம் பிற திசுக்களை உருவாக்கும் உயிரணுக்களுக்கு ஆற்றலை கொடுக்கும் வேலையை செய்வதற்கு பதிலாக குளுக்கோஸ் ரத்தத்தில் சேர்கிறது. இந்த குளுக்கோஸ் உடலில் உண்ணும் உணவிலிருந்து வருகிறது. உணவு செரிமானம் ஆகும் போது உணவில் இருக்கும் குளுக்கோஸ் ஆனது ரத்த ஓட்டத்தில் சர்க்கரையை சேர்க்கிறது. உயிரணுக்களுக்கு குளுக்கோஸ் செல்ல இன்சுலின் தேவை.
உடலில் கணையத்தின் பின் அமைந்துள்ள சுரப்பியிலிருந்து இன்சுலின் சுரப்பு சுரக்கிறது. இது உணவு சாப்பிடும் போது ரத்தத்துக்கு இன்சுலின் சுரப்பை அனுப்புகிறது. இது குளுக்கோஸை உயிரணுக்களுக்கும், ரத்த சர்க்கரை அளவை குறைக்கவும் பயன்படுகிறது. இந்த சுரப்பு குறையும் போது ரத்த்ததில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது.
ஃப்ரீடயபாட்டீஸ் நிலை வரும்போது கணையம் போதுமான இன்சுலின் சுரக்காது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்தவும் செய்யாது, இதனால் உயிரணுக்களுக்கு குளுக்கோஸ் செல்லாமல் அவை ரத்த ஓட்டத்தில் கலக்கிறது.
ஃப்ரிடயாபட்டீஸ் வந்தாலே நீங்கள் ஆரோக்கியமான உணவு வகைகளில் கவனம் செலுத்த வேண்டும். பரிசோதனையில் ஃப்ரீடயபட்டீஸ் கண்டறிந்தால் உரிய இடைவேளையில் மீண்டும் பரிசோதனை செய்வது அவசியம். அதே நேரம் இது மீளக்கூடியதும் என்பதால் உணவுகளில் மட்டுமே கவனம் செலுத்தினால் போதும்.
குறைந்த க்ளைசெமிக் உணவுகள்பட்டியலிட்டு எடுத்துகொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் உணவுகள் எடுத்துகொள்ளும் போது குறைவான அளவு கொண்ட உணவுகளை எடுத்துகொள்ள வேண்டும். பழுப்பு அரிசி முழு தானியங்கள் சேர்க்கலாம். அதிக நார்ச்சத்துள்ள உணவுகளை உண்ணுங்கள்.
கீரைகள், காய்கறிகள், மெலிந்த இறைச்சி, சோயாபீன், குறைந்த கொழுப்பு , பால், கொட்டைகள், விதைகள், தயிர், பருப்பு வகைகள், பச்சை பீன்ஸ், பாலாடைக்கட்டி, டோஃபு புரதச்சத்து நிறைந்த உணவுகள் சேர்க்கலாம்.
அதிக கிளைசெமிக் உணவுகள் வேகமாக ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். வெள்ளை அரிசி, வெள்ளை ரொட்டி சுத்திகரிக்கப்பட்ட மாவு, உருளைக்கிழங்கு பதப்படுத்தப்பட்ட உணவுகள் தவிர்க்க வேண்டும். இனிப்பு நிறைந்த உணவுகள் எடுத்துகொள்ளும் போது அவை ரத்த ஓட்டத்தில் வேகமாக கலப்பதால் உடலில் இன்சுலின் எதிர்ப்பு காரணமாக குளுக்கோஸ் கட்டுப்படுத்தமுடியாமல் அதிகரிக்க கூடும்.
செயற்கை பானங்கள் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து நிறைந்த உணவு பொருள்களும் தவிர்க்க வேண்டியதே. நிறைவுற்ற கொழுப்பு மற்றும் டிரான்ஸ் கொழுப்பை குறைவாக எடுத்துகொள்ள வேண்டும். இவை நீரிழிவு அபாயத்தோடு இதய பிரச்சனையையும் உண்டாக்கிவிட வாய்ப்புண்டு.
நவக்கிரகங்களிலே மிகவும் சிறந்தவர் எனப் போற்றக் கூடிய சுபக்கிரகம் குரு ஆவார். தேவர்களுக்கு ஆசானாக இருக்கும் இவர், அறிவு, ஞானம் இவற்றிற்கு மூலமாக விளங்குபவர். தனம், புத்திரபாக்கியம் ஆகிய இரண்டுக்கும் அதிபதி குரு பகவான். நம் ஜாகத்தில் குரு பலமாக இருந்தால் இந்த இரு யோகமும் தங்குதடையின்றி அமையும். குரு பகவானுக்கு என்ன பிடிக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று குரு பயோடேட்டாவை பார்க்கலாம்.
பிரம்மனின் மானச புத்திரர்களின் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாவுக்கும் பிறந்த ஏழாவது குழந்தை. அறிவிலே மேம்பட்டவர். தேவர்களின் குரு. இந்திரனுக்கு அமைச்சர். குரு பகவானை பிரகஸ்பதி என அழைப்பர். பிரகஸ்பதி என்றால் ஞானத் தலைவன் என்று பொருள். அமைச்சர், ஆசான், வியாழன் என இவருக்கு பல பெயர்கள் உண்டு. நவக்கிரகங்களில் பிரதானமான இவர் சுபக் கிரகர். சாத்வீகம் கொண்டவர். மஞ்சள் நிறமானவர் என்பதால், இவரை பொன்னன் என்றும் அழைக்கப்படுகிறார். தயாள குணம் கொண்டவர்.
குரு பகவானின் 5, 7,9ஆம் பார்வை சகல நன்மைகளையும் தரும். திருமணத்திற்கு குரு பலம் வருவது முக்கியம். தன்னை வழிபடுகிறவர்களுக்கு உயர்வான பதவியையும், மனமகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம், சுகம் ஆகியவற்றையும் கொடுப்பவர். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் அருள் பூரணமாக இருந்தால், அவருக்குப் பெரும் பதவிகள் கிட்டும். குரு பகவான் ஆசி இருந்தால் திருமணம் நடந்து விடும். அதை வியாழ நோக்கம் என்கின்றனர்.
யானையை வாகனமாக கொண்ட குருபகவானுக்கு, கொண்டைக் கடலை பிடித்த உணவு. நவரத்தினங்களில் புஷ்பராகத்தை அணிவார். அரச மரம் இவருக்கு பிடித்தமான மரம். இனிப்பு பிடிக்கும். நான்கு சக்கரங்கள் கொண்ட ரதத்தில் நாற்கோண பீடத்தில் எழுந்தருளி இருப்பவர். ரதத்தின் ஓரத்தில் வில்லும், மீனும் அடையாளமாக இருக்கும். அது தனுசு ராசிக்கும், மீன ராசிக்கும் அதிபதி இவர் என்பதை குறிப்பிடுகிறது.
குரு பகவான் நீதிமானாகவும் திகழ்கிறார். ஒருவருக்கு எந்த அளவு அதிர்ஷ்டத்தை வழங்கலாம் என்று நிர்ணயிப்பவர். வியாழக்கிழமை விரதம் கடைபிடித்தால், குரு பகவானின் சக்தியால் வாழ்க்கையில் அனைத்து துறைகளிலும் வெற்றிபெறலாம். குரு ஒரு ராசியில் ஓர் ஆண்டு தங்கி தன் கடமையை செய்கிறார். அதன்படி ராசி சக்கரத்தை கடக்க பன்னிரெண்டு ஆண்டுகளாகின்றன. பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை குரு பகவான் மகம் நட்சத்திரத்திலே சஞ்சரிக்கும் போதுதான் 'மகா மகம்' நடக்கிறது.
குரு பகவான் பயோடேட்டா
சொந்த வீடு: தனுசு - மீனம்
உச்ச வீடு : கடகம்
நீச்ச வீடு : மகரம்
கிழமை : வியாழன்
தேதி : 3, 12, 21, 30
நட்சத்திரம் : புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
நிறம் : தூய மஞ்சள்
ரத்தினம் : கனக புஷ்பராகம்
உலோகம் : தங்கம்
தானியம் : கொண்டைக்கடலை
ஆடை : மஞ்சள்
தசாபுத்தி காலம்: 16 ஆண்டு
அதிதேவதை : தட்சிணாமூர்த்தி
குருவின் பார்வை நல்ல இடத்தில் அமைந்தால் சகல நன்மைகளும் கிடைக்கும். குரு பார்வை சரி இல்லாதவர்கள் அவருக்கு சாந்தியும், பூஜையும் செய்வது நல்லது. வியாழக்கிழமை விரதம் இருக்க வேண்டும். குருவை வழிபட்டால் உயர்பதவி கிடைக்கும். செல்வச்செழிப்பு மேலோங்கும். சுக வாழ்வு, மன நிம்மதி கிடைக்கும். அறிவு விருத்தியடையும். மற்ற கிரக தோஷங்களால் ஏற்படும் துன்பங்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
குருவுக்கு உரிய தேதிகள், கிழமைகள், நட்சத்திரத்தில் பிறப்பவர்களுக்கு பல யோகங்கள் உண்டாகும். மேலும் ஜாதகத்தில் கேந்திர, கோணங்களில் இருப்பதும் சிறப்பானதாகும். குருபகவானுக்கு உகந்த நிறம் மஞ்சள், பிடித்த தானியம் கொண்டைக்கடலை, உரிய ரத்தினம் புஷ்பராகம். குருவிற்கு ஏற்ற நாள் வியாழக் கிழமையாகும். அந்த நாளில் விரதம் இருந்து குருபகவானை வணங்கி சிறப்பு பிராத்தனையில் கலந்துகொண்டு பக்தர்களுக்கும் ஏழைகளுக்கும் கொண்டைக்கடலை சுண்டல் தானமாக வழங்கலாம்.
source: oneindia.com
தனியார் பள்ளிகளில் குலுக்கல் முறையில் நடைபெற்ற தேர்வு விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றது. இதையடுத்து கொரோனா குறைவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்ற நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனைகள் நடந்து வருகின்றன.
உலக சர்க்கரை நோய் தினத்தை (நவ.14) முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனையின் சர்க்கரை நோய் துறை தலைவர் டாக்டர் வெங்கோஜெயபிரசாத் கூறியதாவது: இன்சுலின் என்பது கணையத்தில் உற்பத்தியாகும் ஒருவகை ஹார்மோன் ஆகும். நாம் எதைச் சாப்பிட்டாலும், சாப்பாட்டில் இருக்கும் சர்க்கரை ரத்தத்தில் கலந்துவிடும். ரத்தக்குழாய்கள் மூலம் இந்த சர்க்கரை அனைத்து பாகங்களுக்கும் செல்கிறது. காற்று, தண்ணீர், சர்க்கரை ஆகிய மூன்றும் எரிந்து, அதில் கிடைக்கும் ஆற்றல்மூலம்தான் உடம்பில் உள்ள ஒவ்வொரு செல்லும் வேலைசெய்கிறது. ரத்தக்குழாயில் இருந்து ஒவ்வொரு செல்லுக்கும் எவ்வளவு சர்க்கரை தேவைப்படுகிறது என்பதை இன்சுலின் முடிவுசெய்கிறது. இன்சுலின் சுரப்பு இல்லையெனில் அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆற்றல் கிடைக்காமல் செயல் இழந்துவிடும்.
இதய ஆரோக்கியத்தைப் பொருத்தவரை, ஆரோக்கியமான உணவு மற்றும் அன்றாட உடற்பயிற்சி மிகவும் முக்கியம். அதோடு, இதயத் தமனிகளை நேர்த்தியாக, சுத்தமாகப் பராமரிக்க விரும்பினால், கொழுப்பின் அளவைக் குறைவாக வைத்திருப்பது மிகவும் முக்கியம். ஏற்கெனவே விவரித்துள்ள இதன் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைத் தவிர, பப்பாளியில் தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால் அதாவது எல்.டி.எல். அளவுகளைக் குறைக்கும் அம்சங்களும் உள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம், இது இதயத் தமனிகளில் கொழுப்பு வளரும்ம் (தமனித் தடிப்பு) வாய்ப்பைக் குறைக்கிறது. பப்பாளியில் இருக்கும் நார்ச்சத்து மற்றும் வைட்டமின் 'சி'யும் இதயத்தைப் பாதுகாக்கிறது.
ஏலக்காய் வாய் சுகாதாரத்திற்கும், வாய் ஆரோக்கியத்திற்கும் ஏற்றது. பல் வலி, ஈறுகளில் ஏற்படும் வீக்கத்தை கட்டுப்படுத்தலாம். சூயிங்கம், சிக்லெட், சாக்லேட் என எதையாவது வாயில் போட்டு அசை போடுவதால் எந்தப் பலனும் இல்லை. அதற்குப் பதிலாக ஏலக்காயை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது நல்லது. ஜலதோஷம், இருமல், தொடர்ச்சியான தும்மலால் அவதிப்படுகிறவர்கள் ஏலக்காய் கஷாயம் பருகவேண்டும். ஏலக்காயில் தயாரிக்கப்படும் எண்ணெய் சரும நலனுக்கு ஏற்றது. குழந்தைகளுக்கு மசாஜ் செய்யும் எண்ணெய்யில் சிறிதளவு கலந்து பயன்படுத்தலாம்
கொரோனா காலத்தில் வந்திருக்கும் தீபாவளி என்பதால் பல்வேறு விசயங்களை நாம் மிக கவனமாக அணுக வேண்டும். உணவு முதல் பட்டாசு வரையில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நமக்கும் நம்மை சுற்றி இருக்கும் மற்றவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பனதே.
பட்டாசு வெடிக்கும் போது ஒரு வேளை தீக்காயம் ஏற்பட்டால் நம்மில் பலரும் செய்யும் ஒரு காரியம் ஐஸ்கட்டிகளை அங்கு வைப்பதும், டூத்பேஸ்ட்டினை தடவுவதும் தான். இதனால் ஏற்படும் தீமைகள் என்னவென்று பலருக்கும் தெரிவதில்லை. டூத்பேஸ்ட்டினை வைப்பதால் காயம் ஏற்பட்டுள்ள இடத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்து அது அந்த காயத்தினை மேலும் தீவிரப்படுத்தும். இதனால் நாம் முற்றிலும் இந்த நடைமுறையை தவிர்க்க வேண்டும்.
தீக்காயம் ஏற்பட்டால் உடனே ஓடும் நீரில் காயத்தை வைக்க வேண்டும். பின்பு முதலுதவி தந்து மருத்துவ சேவையை நாட வேண்டும். ஒரு போதும் வீட்டில் கை வைத்தியம் பார்க்க வேண்டாம். குறிப்பாக கொப்பளங்கள் ஏதேனும் ஏற்படும் எனில் இதனை நீங்கள் முற்றிலுமாக கைவிட்டுவிட்டு அவசர உதவி மையத்தை அணுகுங்கள்.
தளர்வான ஆடைகள் அணிவதை தவிர்க்கவும். துப்பட்டா மற்றும் புடவை போன்றவை அணிந்து பட்டாசு வெடிக்கும் போதும், குழந்தைகள் பட்டாசு வெடிக்கும் போதும் குறிப்பிட்ட அளவு இடைவெளியை கடைபிடித்து பட்டாசுகள் வெடிக்கவும்.
இன்று வயது வித்தியாசம், பாலின வேறுபாடு இன்றி பெரும்பாலானோர் புகையிலை, சிகரெட், பீடி, குட்கா போன்ற பொருட்களுக்கு அடிமையாக உள்ளனர். இதனால் அதிகளவு புற்று நோய் தாக்கு கிறது.
பெண்களை மார்பக புற்றுநோய், கர்ப்பவாய் புற்றுநோய்தான் அதிகளவில் தாக்குகின்றன.
மரபை விட சுற்றுச்சூழல் தான் புற்றுநோயை அதிகளவில் தீர்மானிக்கிறது. சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் புற்றுநோயக்கும் தொடர்பு உண்டு.
காற்று, நீர், மண் ஆகியவற்றில் புற்றுநோயை உருவாக்கும் வேதிபொருட்கள் இருந்தால் அதை பயன்படுத்தும் மக்களுக்கும் புற்றநோய் ஏற்பட வாய்ப்புள்ளது. துரித உணவு, சமச்சீரற்ற வாழ்க்கை முறை, போதிய உடற்பயிற்சியின்மையாலும் புற்றுநோய் ஏற்படுகிறது.
பல முன்னணி பிரபலங்களும் கேன்சருடன் போராடி வென்றவர்கள் தான். கேன்சர் வந்தால் குணப்படுத்த முடியாது என துவண்டு விடுவது உடலை இன்னும் பலவீனப்படுத்தும். கேன்சர் வந்தாலும் மீண்டுவிடலாம் என்ற மன உறுதி வேண்டும். உடலில் எந்த இடத்தில் வலி இல்லாத கட்டிகள் வந்தாலும் அதை உடனே மருத்துவரிடம் அணுகி உரிய ஆலோசனை பெற வேண்டும்.
நெல்லிக்காய், துளசி, அருகம்புல், வில்வம் புற்றுநோயை வராமல் தடுப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 7 ஆம் தேதியும் உலக புற்றுநோய் விழிப்புணர்வு தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் 4ஆம் தேதியும் அனுசரிக்கப்படுகிறது.
சென்னை : தீபாவளி நாளான நவம்பர் 14ம் தேதி நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ' வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை எதிரொலியாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் நெல்லை, கன்னியாகுமரி, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடியில் கனமழைக்கு வாய்ப்பு. அதேபோல் தென்காசி, சேலம், நாமக்கல் மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். நவம்பர் 15ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்,' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் சிறப்பு மருத்துவப் படிப்பிற்கான, நூறு விழுக்காடு இடங்களின் மாணவர் சேர்க்கை நடத்தும் உரிமையையும், மீண்டும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விட வேண்டும். அகில இந்தியத் தொகுப்பு முறையை ரத்து செய்ய வேண்டும் என சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சமூக சமத்துத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் இன்று விடுத்துள்ள அறிக்கை:
சிபிஎஸ்இ பள்ளி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு முடித்த ஒற்றைப் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ அளிக்கும் இந்த கல்வி உதவித் தொகை திட்டத்தில் சேர்ந்து பயன்பெற தகுதியுள்ள மாணவிகள், www.cbse.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிசம்பர் 10 கடைசி நாளாகும்.
2020-ஆம் ஆண்டில் சிபிஎஸ்இ பள்ளியில் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பெற்றோருக்கு ஒரே ஒரு மகளாக இருக்கும் மாணவிகள், இரண்டு கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது, பிளஸ் 2 படிப்புக்கான கல்வி உதவித் தொகை மற்றும் 2019-ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவிகளுக்கான பரிசுக்கும் விண்ணப்பிக்கலாம்.
இந்த உதவித் தொகைக்கு, ஒற்றைப் பெண் குழந்தையாக இருந்து, பத்தாம் வகுப்பில் 60 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தகுதிபெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி இன்னும் ஒருசில நாளில் அறிவிக்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மேலும், நீட் தேர்வில் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதால், 395 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மருத்துவப் படிப்பில் சேர அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு சில நாட்களுக்கு முன்பு ஆளுநர் ஒப்புதல் அளித்தார். அதற்கு முன்பே தமிழக அரசு அந்த சட்ட மசோதாவுக்கான அரசாணையை வெளியிட்டது. மருத்துவம் படிக்க மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில், அதற்கான கலந்தாய்வு தேதி இன்னும் ஒருசில தினங்களில் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், "தமிழகத்தில் இந்த ஆண்டு 4,061 மருத்துவ இடங்களுக்கு நவம்பர் 18-ம் தேதி அல்லது நவம்பர் 19-ம் தேதி முதல் கலந்தாய்வு தொடங்கப்படலாம். ஒரு நாளைக்கு 500 மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறும். 7.5% உள் ஒதுக்கீடு மூலம் எம்.பி.பி.எஸ் சில் 304, பி.டி.எஸ் சில் 91 பேருக்கு மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைக்கும். ஏற்கனவே திட்டமிட்டபடி நவம்பர் 16-ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகும்." என்று கூறியுள்ளார்.
லட்சத்திற்கும் அதிகமான ஊதியத்தில் பணிகள் – ஆண், பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் இருந்து நிரப்பப்படாமல் உள்ள பணிகளுக்கான காலிப்பணியிட அறிவிப்பு தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது பாண்டிச்சேரி பல்கலையில் Deputy & Assistant Registrar பணியிடங்கள் காலியிடங்கள் இருப்பதாகவும் அதற்கு தகுதியான விண்ணப்பதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு திறமையான பட்டதாரிகள் எங்கள் வலைத்தள பக்கத்தில் வழங்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் | Pondicherry University |
பணியின் பெயர் | Deputy & Assistant Registrar |
பணியிடங்கள் | 14 |
கடைசி தேதி | 27.11.2020 |
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் |
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Deputy & Assistant Registrar பணிகளுக்கு 14 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கு தேர்வு செய்யப்படுவோர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ.1,44,200/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் 27.11.2020ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரிகள் தங்களின் விண்ணப்ப நகலினை 01.12.2020 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.